சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 18 டிசம்பர், 2021

நகுலன் நூற்றாண்டு சாகித்ய அகாதமி நிகழ்ச்சி , கும்பகோணம் குறைகள் 1. நானும் திரைப்பட இயக்குனர் அருண்மொழி அவர்களும் பதிவு செய்த நகுலனின் நேர்காணல் பிரதியைப் பெற்றுத் திரையிட முயன்றது முடியவில்லை 2. நானும் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரனும் அவருடன் பல புகைப்படங்கள் எடுத்தோம். 5 ஆண்டுகளுக்கு முன் கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கண்காட்சியாக வைத்தோம். அவற்றை மீண்டும் இங்கு கண்காட்சியாக வைக்க முயன்று வெற்றி பெற வில்லை 3. மழையின் காரணமாக கும்பகோணம் கல்லூரிகள், பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தாலும் கணிசமாக மாணவர்கள், பேராசிரியர்கள், இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். நாள் முழுக்க மழை வரவேயில்லை .ஆறுதல் 4, தோழர் ஜமாலனைச்சந்திக்க இயலவில்லை. தாழ்வாரம் பாரதி மோகன் , கவிஞர்கள் செந்தில், வலங்கையூரான் மற்றும் இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி 5. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 20 பக்க கட்டுரையை நகுலன் கவிதைகள் பற்றி அனுப்பியிருந்த அழகிய சிங்கரின் கட்டுரையை படிக்க இயலவில்லை 6. சென்னைவாசிகள் காவியா சண்முகசுந்தரம், பாட்டழகன் , அழகிய சிங்கர் மழையின் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை அந்நியர்கள் நாவல் வெளியீட்டில்: ப. சிதம்பரம் : அந்நியர்கள் நாவல் இன்னும் எடிட்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும் பாரதி ( நடுவர் ): அந்நியர்கள் நாவல் இன்னும் எடிட்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும் சுப்ரபாரதிமணீயன் பதில்: என் நாவல்களில் பின்நவீனத்துவ வடிவம், போக்கு இருக்கும். தொடர்ச்சியின்மை.. நான் லீனியரில் சொல்வது. மையம் இழப்பு, சிதறலாய் துண்டு துண்டாய் சில அம்சங்கள் ஆகிய பின் நவீனத்துவ வடிவில் சிலருக்கு எடிட்டிங் தேவை என்ற குழப்பம் தருவது இயற்கையே “ சாந்த தத் நூலின் முன்னுரை இதை முதலில் சேர்த்தால் புத்தகம் வேலை ஓவர் என்னுரையில் சாந்தாத்த என்னுமிடத்தில் அவரின் கைபேசி எண்ணையும் போடவும் 9985117105 சுப்ரபாரதிமணியன்