சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 21 ஜூலை, 2020

சுப்ரபாரதிமணியன்..ஒரு எழுத்தாளனின் கோரிக்கைகள் .. மீண்டும் வடமாநிலத் தொழிலாளர்களை வரவேற்று கை நீட்டி அழைக்கும் தொழிலதிபர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ;;

1
தமிழ்நாட்டு இளைஞர் களுக்கு வேலை முன்னுரிமையைத் தாருங்கள்.தமிழர்களைப் புறக்கணிக்காதீர்கள். மகாராஷ்டிரா போல் சட்டமாக்குங்கள்.

2.சரியான கூலி..,  தங்குமிடம் கேட்பதை கொச்சைப்படுத்தாதீர்கள்

3.அரசு வேலை வாய்ப்பு துறை மூலம் பதிவு செய்து அவர்களுக்கும் வேலை தரவும்

4 எல்லாத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை தரவும்

5.தொழிற்சங்கங்கள் பிற மாநில தொழிலாளர் வருவதையும் வேலை செய்வதையும்   கண்காணிப்பு செய்து முறைப்படுத்த வேண்டும்

6 வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு  முக்கியத்துவம் தாருங்கள் .


7. மத்திய பிரதேசம் ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத்திலும் இவ்வாறு உள்ளது ஜனவரி 5 20 20 அன்று தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் அவர்கள் இப்படியொரு சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
8.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் நேரடியாக வட இந்தியர்களைப் புகுத்துவது போல் தமிழக அரசும் வட இந்தியர்களை புகுத்துவதை கடுமையாக கண்டிக்கிறோம்
9
ஒரே தொழில் ஒரே வேலை ஒரே சம்பளம் என்பதை நடைமுறைப்படுத்தி பெண்களையும் வாழ வைக்க வேண்டும். தற்போது கொத்தடிமை முறை தான் உள்ளது

10. கொரானா காலத்தில் வேலை இருகிறது என்ப்தற்காய் பாதுகாப்பில்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு வைத்து நோயின் பிடியில் மாட்ட வைக்காதீர்கள்