சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 13 நவம்பர், 2015

கனவு அசோகமித்திரன் மலர் பற்றி ஜெயமோகன் 

1992ல் நான் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசித்தேன். அருண்மொழிக்கு அங்கேதான் முதன்முதலாக வேலைகிடைத்தது. அஜிதன் பிறந்தான். அங்கே ஏற்கனவே தொலைபேசித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த சுப்ரபாரதிமணியன் எனக்கு வீட்டுவசதிவாரியத்தில் ஒரு வீடு பார்த்துக்கொடுத்தார். பேருந்தில் தினமும் தருமபுரி தொலைபேசி நிலையம் வந்து சென்றுகொண்டிருந்தேன்.
சுப்ரபாரதிமணியனை எனக்கு அவர் ஹைதராபாதில் வேலைசெய்யும்போதே தெரியும். அவரது வீட்டுக்குச்சென்றிருக்கிறேன். தொடர்ச்சியாக கடிதங்கள் வழியாக இலக்கிய உரையாடலில் இருந்தோம். அவர் கனவு என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். நான் அதில் பங்குபெற்றேன்.
அப்போதுதான் தமிழில் மிகைபுனைவு எழுத்துமுறைகள் பெரும் ஆர்வத்துடன் அறிமுகமாயின. நேர்கோடற்ற எழுத்துமுறை ஆவேசத்துடன் முன்வைக்கப்பட்டது. மொழி திருகலாக இருந்தால்தான் அது எழுத்து என்னும் எண்ணம் சிறிய சூழலில் வலுப்பெற்றது.
நானும் அந்த அலையில் ஆர்வம்கொண்டிருந்தேன். நேர்கோடற்ற கதைசொல்லும் முறை, மிகைபுனைவு, படிமங்கள்செறிந்த மொழி ஆகியவை எனக்கு அன்றும் இன்றும் உவப்பானவை. ஆனால் அதையே ஒரே எழுத்துமுறையாகக் கொள்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.
அன்று அசோகமித்திரனை ‘எளிமையான யதார்த்தவாத எழுத்தாளர்’ என நிராகரிக்கும் ஒரு மனநிலை நிலவியது . அதற்கேற்ப அசோகமித்திரன் அன்று சாவி போன்ற வணிக இதழ்களில் சாதாரணமான பல கதைகளை எழுதிக்கொண்டும் இருந்தார். சிற்றிதழ்சாந்த இலக்கியம் அவரைக் கடந்து நெடுந்தூரம் சென்றுவிட்டது என்ற பேச்சு அன்றைய இலக்கியச்சூழலில் அதிக ஓசையிட்டவர்களால் அடிக்கடி முன்வைக்கப்பட்டது
ஆனால் அசோகமித்திரன் தமிழிலக்கியத்தில் ஒரு சிகரம் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. மிகைபுனைவு, நேர்கோடற்ற எழுத்துமுறை இரண்டிலுமே அவர் சாதனைகள் எனத்தக்க படைப்புகளை எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன்.மௌனமாகச் சொல்லப்பட்ட அவரது கதைகள் வாசகனின் கூர்ந்த கவனிப்பைக் கோருபவை என்று வாதிட்டேன்
1
அதை சுப்ரபாரதிமணியனிடம் சொன்னேன். அவரும் அசோகமித்திரன் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அசோகமித்திரனுக்கு அப்போது அறுபது வயதாகியது. அதையொட்டி அவருக்காக ஒரு மலர் வெளியிடலாமென நினைத்தோம். நான் பலரிடம் கட்டுரைகள் கோரி பெற்று ஒருவழியாக ஒரு விமர்சன மலரைத் தயாரித்தேன்.
அது பரவலாகக் கவனிக்கப்பட்டது. உண்மையில் இலக்கியத்தில் ஒரு திசைமாற்றத்தை உருவாக்கியது. அசோகமித்திரன் மீதான கவனம் மீண்டும் வலுவாக உருவாகியது. இன்று அந்த பழைய மலரை நோக்கும்போது ஒரு மனநெகிழ்வு உருவாகிறது
சுப்ரபாரதிமணியன் மேலும் சில கட்டுரைகளுடன் அந்தத் தொகுப்பை ஒரு நூலாகக் கொண்டுவந்திருக்கிறார் என அறிகிறேன். [தொடர்புக்கு R P Subramaniyan 8/2635 Pandiyan Nagar Tirupur Tamilnadu 9486101003