சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 8 ஏப்ரல், 2015

திருக்குறள் ஞான மடம் தலைவர் திருப்பூர் வருகை

* திருக்குறளில் தாலி பற்றி எதுவும் சொல்லப்படவில்லை
* மலையாளத்தில் அற நூல்கள் இல்லை
* திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்
=========================================================

    கேரளா-  பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்  தலைவர் சிவானந்தர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி திருப்பூர் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோயிலில் 24/3/15 அன்று மாலை நடந்தது. விழாவிற்கு சன்மார்க்க சங்கத் தலைவர் அவினாசிலிங்கம் தலைமை தாங்கினார்.அருள்நிதி முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.டிட்டோனி முத்துச்சாமி, நீறணிபவளக்குன்றன், தொலைபேசி பொறியாளர் பழனிச்சாமி, kavinjar கவிஞர் ஜோதி , வாழ்க வளமுடன் இயக்கத்தினர்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலகத் திருக்குறள் வாழ்வியல் மையம், திருப்பூர் கிளை  இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிலரின் பேச்சிலிருந்து..

கேரளா பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்  தலைவர் சிவானந்தர்:
திருவள்ளுவரை  குருவாகவும் திருக்குறளை வாழ்க்கை நெறியாகவும் ஏற்று வாழும் 30 ஆயிரம் குடும்பங்கள் கேரளாவின் 14 மாவட்டங்களில் 50 பஞ்சாயத்துக்களில் உள்ளன.திருவள்ளுவருக்கு கோவில் கட்டி கும்பிட்டு அவரை 40 ஆண்டுகளாகப் பின்பற்றுகிறோம்.மலையாளம் ஒரு கூட்டு மொழிதான்.மலையாளத்தில் அற நூலகள் இல்லை. சுவாரஸ்யமான நாவல்கள், படைபிலக்கியங்கள் உண்டு. மலையாளத்தில் தாய் மொழி தமிழ். ஆதி மொழி தமிழ். பொதுவான பண்பாட்டைப்பற்றி அறிந்து கொள்ள திருக்குறள் போல் சிறந்த நூல் எதுவுமில்லை.  எனவேதான் திருக்குறள் வாழ்வியல் மொழியாகிறது. வேத காலம் முதல் உடமைப் பொருளாகவே பெண்கள் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் தாய் ஆற்றலை, இறை ஆற்றலை, இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது திருக்குறள்.திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். இதை இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மத்திய அரசை எங்கள் ஞான மடம் வலியுறுத்தி வருகிறது.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்:
எல்லாக் காலத்திற்குமான அற நெறி இலக்கியமாக திருக்குறள் இருக்கிறது. ஆதி காவியம் என்ற அளவில் அது ஒரு இலக்கிய பொக்கிசம். இப்போது தாலி பற்றிய சர்ச்சை தமிழ்ச் சூழலில் விவாதமாகியிருக்கிறது. திருக்குறளில், பழைய இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்புகள் இல்லை.ஆணும்பெண்ணும் அன்பால் இணைந்து வாழும் அன்புலகம் பற்றி பேசுவது திருக்குறள் . அதில் சடங்குகள், சம்பிரதாயங்கள்  பற்றிய வலியுறுத்தல் இல்லை. மொழியின் உட்ச பட்ச தேர்ச்சியோடு எல்லாக் காலத்திற்கும்  பொருத்தமான அற நெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கிற இலக்கியம்தான் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அமர  நூலாகும். 
               உலகத் திருக்குறள் வாழ்வியல் மையம் செயலாளர்  மருத்துவர் தன்மானன் நன்றியுரை வழங்கினார்.