சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 20 ஏப்ரல், 2015

  கனவு இலக்கிய வட்டம்
புத்தக வெளியீடு , ஜெயகாந்தனுக்கு அஞ்சலி
     கனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கிய நிகழ்ச்சி வியாழன் அன்று மாலை பாண்டியன் நகர் அம்மா உணவகம் அருகில் உள்ள சக்தி பில்டிங்கில் நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் கலாமணி கணேசன் தலைமை தாங்கினார்.
  புதனன்று மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவரின் கலை இலக்கியப் படைப்புகள் நினைவு கூறப்பட்டன.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் ‘என்ற நாவலை முயற்சி அமைப்பின் செயலாளரும், ஆங்கிலத்துறைப் பேராசிரியருமான   ( ஓய்வு )பரமசிவம் வெளியிட தமிழ் மூதறிஞர் சொக்கலிங்கனார் பெற்றுக்கொண்டார்.கவிஞர் ஜோதி நூலை அறிமுகப்படுத்திப் பேசினார்.
திருப்பூரை மையமாகக் கொண்டது இந்த நாவல்      ( சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் “ நாவல்            - மறுபதிப்பு ). விலை ரூ 120/ எசிபிஎச் வெளியீடு, சென்னை ) இரு வேறு நிலைகளில் வாழும் இரு பெண்களின் உலகங்களைப் பற்றிச் சொல்வது.
 பேச்சில்:

பேராசிரியர் பரமசிவம்: திருப்பூர் பற்றிய படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும். ஒரு தொழில் நகரத்தைச் சார்ந்த பன்முகங்களை இது போன்ற படைப்புகளே சரியாகக் காட்ட முடியும்.
கவிஞர் ஜோதி:   பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை வாசிப்பதன் மூலம்,  மாற்றுச்சிந்தனைகளை உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.
சுப்ரபாரதிமணியன்: உலகமயமாக்கல் பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறவர்களாகவும், பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும் மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள் பகுத்தறிவின் துணை கொண்டே மாற்றியமைக்க முடியும்  .சமரசமற்ற சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.
சக்தி மகளிர் அறக்கட்டளையின் செயலாளர் விஜயா கனகராஜ் நன்றி கூறினார். திருமுருகன் பூண்டி சைவசித்தாந்த மடம்சார்ந்த , சக்தி மகளிர் குழுக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பெற்றனர்.  
  
செய்தி:
கனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் : கா. ஜோதி