சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 27 டிசம்பர், 2022

Thamarai : Nov 2022 அறுப்பு ; சுப்ரபாரதிமணியன் நீண்டு கிடந்த சுவரில் அப்பியிருந்த இருட்டு அவளை பயம் கொள்ளச்செய்தது. பல ஆண்டுகளின் எச்சிலும் சீழூம் கலந்து ஒரு வித வர்ணமாகியிருந்தது. செடிகொடி புதர்களின் அடர்த்தி அவற்றை இயல்பான நிறத்தை மாற்றி வாகனங்கள் அப்பிப்போன மண்ணின் நிறத்திற்குக் கொண்டு வந்திருந்தது. முருகேஸ்வரிக்கு அந்த இளம் மருத்துவரின் முகம் பிடித்திருந்த்து. எவ்வளவு அழகான முகம். வடக்கத்திக்காரனாக இருப்பானா.. மார்வாடியாக இருப்ப்பானா .. பெயரில் தமிழ்த்தன்மை இருந்தது அவளுக்குப் பிடித்திருந்தது.. பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை மருத்துவரின் பெயருடன் ஒட்டிக் கொண்டிருந்ததால் மருத்துவமனைக்குள் புகச் செய்தது.மருத்துவரின் பெயர் பொரித்த போர்டுதான் அவளை உள்ளே வரச் செய்தது. தட்டுப்பட்ட மூன்று தாதியருமே களையிழந்த முகத்துடன் இருப்பதாகத் தோன்றியது. இவ்வளவு வசீகரமானவனாக மருத்துவர் இருப்பாரா, இவ்வளவு வசீகரமில்லாதவர்களாக அவரின் கீழ் பணிபுரியும் தாதிகள் இருப்பார்களா என்பதை மருத்துவரைக்கண்ட பின் அவள் யோசித்தாள். பெஞ்சில் உட்கார்ந்திருப்பவளைக்கடந்து சென்ற மருத்துவர் பார்த்த பார்வை வசீகரமாக இருந்தது. சட்டென அவரின் அறைக்குள் சென்று விட வேண்டும் என நினைத்தாள் முருகேஸ்வரி. “ என்ன அய் டி கார்டு இருக்கா “ ‘ “இல்லை ..” “ அய் டி கார்டு இல்லாமெ எப்படி . ஆதார் கார்டு, வோட்டர் அய்.டி“ “ இல்லதா.. என்ன பண்ண முடியும். “ ஏதாவது அடையாள அட்டை பெற்று விட வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறாள். முதலில் பள்ளி சார்ந்த சான்றிதழைக்கேட்டார்கள். பலமுறை தான் படித்த பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். தூத்துக்குடியில் அழுக்கடைந்த ஆரம்பப் பள்ளி அது. “ உங்க அப்பாவையோ அம்மாவையோ கூட்டிட்டு வந்தா ரிகார்டு கெடைக்கலின்னாலும் வேற தயார் பண்ணித் தரமுடியும் “ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து விலகி வந்து எட்டாண்டுகள் ஆகிவிட்டன. சந்திக்க முயற்சித்தபோதும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. வித்யா வீட்டில் அவளைச் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அடையாள அட்டை இருந்தால் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். ஏதாவது சலுகை என்று வருகிற போது நீட்ட பயன்படும். அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது அவளுக்கு. “ என்ன கம்ப்ளெய்ண்ட் “ கொட்டாவி விட்டபடி வந்த தாதி கேட்டாள். “ டாக்டர்கிட்ட சொல்லிக்கறனே “ “ எங்ககிட்ட சொல்லமாட்டீங்களா “ “ அவ்வளவு தெரிஞ்சவங்களா நீங்க “ குரலை இறுக்கமாக்கிக் கொண்டே கேட்டாள். நிஜமான ஆண் தன்மை குரலில் வந்து விட்டது பயமளித்தது அவளுக்கு. சாய்ந்திருந்த சுவரில் பதிக்கப்பட்ட மார்பிள்களின் வழுவழுப்பும் பிரகாசமும் வலதுகையை நீட்டி அதைத் தடவச் செய்தது. மின்விளக்குகளின் ஒளியில் சுவர்கள் பிரகாசித்தன. ‘’ எதெ நெனச்சு நீவிக்கறே ‘’ “ உங்க டாக்டரெ நெனச்சுதா. போதுமா ... அவருக்குக் கல்யாணமாயிருச்சா “ “ நீயே கேட்டுத் தெரிஞ்சுக்க “ எலுமிச்சைபழ அளவிலான அவளின் புடைத்திருந்த மார்பினைத் தொட்ட மருத்துவர் “ இதையா பெரிசாக்கணும்கறே ” என்றார் “ ஆமா.. “ “ ப்ப்பாளிப்பழம் போல் பண்ணீர்லாமா “ “ உம்.. நெறைய செலவாகுமா “ “ ஆகும். “ அவரின் கைகள் பரபரவென் உடம்பில் ஊறியபோது வெளியில் இருந்த வெயில் அவளின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு எரிச்சலூட்டியது. அதையே தாங்கிக்கொள்ள முடியாதவள் போல் விருக்கென்று உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்தாள். “ அவசரமா ” “ புடிக்கலே .போறன் “ “ புடிக்கற மாதிரியே செய்யறன் “ “ .போறன் “ ” “ புடிக்காமெ டெஸ்ட் பண்றன் ..இரு “ விறுவிறுவெனக் கிளம்பி விட்டாள். மருத்துவ மனைக்கு அருகில் வரும் போதே ஒருவன் ஒம்பது ஒம்பது என்றான். அவளும் எரிச்சலை மனதில் கூட்டிக்கொண்டு எட்டு எட்டு என்றாள். அவன் அதிர்ச்சியடைந்தவன் போல் ஒதுங்கினான். நடையின் வேகம் அதிகரித்து ஆள் இல்லாத இடம் நோக்கி ஓடச் செய்தது. நீண்ட சுவரின் ஓரத்தில் பத்து நிமிடநடைக்குப்பின் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. . பனியன் கம்பனியின் சுவராக இருக்குமோ என நினைத்தாள். ஆனால் இருட்டிக்கிடந்த முகப்பு கேட்டும் புதர்களாய் மண்டியிருந்த செடிகளும் ஒதுங்கியிருந்த போர்டை பார்க்கச் செய்தது. இருட்டு கவிய ஆரம்பித்திருந்த நேரத்தில் போர்டு மங்கலாக அரசு பள்ளி என்பதைச் சொன்னது. நேற்றைக்கு அவளின் மார்பக்ப்பகுதியின் ஆடைகளை விலக்கி விட்டு அந்த கல்லூரி மாணவன் விரல்களால் பிசைந்தான். “ என்ன கைக்கு அகப்படவே மாட்டீங்குது. இவ்வளவு சிறிசா இருக்கு “ ” நீ குடுக்கற காசுக்கு பலாப்பழ சைஸா வேணும் “ “ அப்பிடி இருந்தாத் தானே எடுபடும்” அவனின் கையை சரேலென் விலக்கிக் கொண்டவள் அவனின் வலது காலில் எட்டி உதைத்தாள். “ செரி .. போ” “ “ஏன் ஒதைக்கிறே. “ “ வேண்டான்னு உதைக்கிறேன்.. ” “ காசு வேணமா “ “ காசு வேணுந்தா. ஆனா உங்கிட்ட இருந்து வேணா .” எலுமிச்சைபழம்போல் இருக்கிறது மார்பு. பப்பாளிப்பழத்தைப் போலவோ பாலாப்பழத்தைiப் போலவோ மாற்றவேண்டும். என்னதான் செலவாகும், கட்டுப்படியாகுமா என்பதைத் தெரிந்து கொள்ள மருத்துவரிடம் செல்ல நினைத்தாள். , செல்லம்மாவிற்கு மார்பு பெரிதாகத்தான் இருந்தது. கன்னம் எடுப்பில்லாமல் குழி விழுந்தது போல் இருந்தது . பின்பக்கம் புட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தாள். அதற்கென ஊசி போட்டுக்கொண்டாள்..புட்டம் பெரிதாக இருக்கும் கிரிஷிக்கு... அதன் காரணமாகவே கிரிஷிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதாய் செல்லம்மா நினத்தாள். அப்படித்தான் கிரிஷியும் சொன்னாள். செல்லம்மா புட்டம் பெருக்கவும் கன்னம் பளபளக்கவும் அவள் மாத்திரைகளும் ஊசியும் போட்டுக் கொண்டாள். முகத்திலும் ஏகமாய் வீக்கம் வந்து விட்டது. புட்டத்திலும் புண்கள் பெரிது பெரிதாய் வந்தன.. அந்த சமயங்களில் அறையை விட்டு வெளியே வராதவளாக இருந்தாள். சமையல்காரியைப் போல் சமையலறையில் முடங்கிக் கிடந்தாள் . கன்னத்திலும் மருக்கள் போல் புண்கள் வந்து தொல்லை செய்தன. வெளியே நடமாட முடியவில்லை. சமையலறையையும் ஒதுக்கி விட்டு சாமான் போடும் ஸ்டோர் ரூமில் பல நாட்கள் படுத்துக் கிடந்தாள். மருத்துவரிடம் போவதாகச் சொல்லிக்கொண்டு வெளியே போனவள் ஒரு பள்ளியின் பழையகிணற்றில்தான் விழுந்து செத்தாள். குறைவாகவே நீர் இருந்த அந்த கிணற்றின் கசடும் சேறும் அவள் உடம்பை இன்னும் புண்கள் பூத்தது போல் ஆக்கியது.. செல்லமாவை கிணற்றில் தேடியவள் முருகேஷ்வரி. கிணற்றில் ஏன் தேட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது என்று பல முறை கேட்டுக் பார்த்துக் கொண்டாள். இந்தப் பள்ளியிலும் இந்த நீண்ட சுவரைத்தாண்டி ஏதாவது கிணறு இருக்குமா. தண்ணீர் இருக்குமா. விழுந்தால் உயிர் போகுமளவு , சிரமங்கள் தராத அளவு ஓகே என்று சொல்ல வைக்குமா. இது என்ன விபரீத எண்ணம் என்ற நினைப்பு வந்தது அவளுக்கு. செல்லம்மாவின் உடம்பின் புண்கள் வெளியே தெரியாத அளவு சேறு அப்பியிருந்தது.செல்லம்மா என்பது அவளின் பாட்டி பெயர் என்பதை எப்போதோ ஒரு முறை சொல்லியிருந்தாள் முருகேஷ்வரியிடம்.. செல்லம்மாவிற்கு அவர்களின் இஷ்டமான மாதாவின் கோவில் இருக்கும் பத்ரிநாத்திற்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. ஆண்டுதோறும் முருகேஷ்வரி செல்லம்மாவுடன் கூவாகத்திற்குப் போய் விட்டு வருவாள். செல்லம்மா பத்ரிநாத் போக வேண்டும் என்று சேமித்து வைத்திருந்த பணத்தை மருத்துவரிடம் இழந்திருந்தாள். மாதாவின் வாகனம் சேவல் என்பதால் கோழிக்கறி சாப்பிட மாட்டாள். விரதம் இருப்பதைப் போல் அதைக்கடை பிடித்தாள். வந்து நின்ற இருட்டு ஆக்கிரமித்த சுவரின் ஓரம் அவளுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. அவள் உட்கார்ந்திருந்த உடைக்கப்பட்டக் கற்குவியலின் ஈரம் புட்டத்தைதை ஜில்லிடவைத்தது. கற்குவியலுக்குள் ஏதாவது பூச்சி, பூரன், பாம்பு இருக்கக்கூடும் என்ற பயம் மெல்ல எழுந்து அதை கூர்ந்து பார்க்கச் செய்தது. அது பூரான் உடம்பில் ஏறுவதைப் போல பயம் தந்தது. இது போன்ற பயம் ஆண்குறியை அறுத்து விட்டு சடங்கிற்குப் போகும் விசயத்தைச் செய்யலாமா, மாதாவிடம் அடைக்கலமாகலாமா என்ற கேள்வி வந்தது திருநங்கைகள் அடைப்பட்டுக்கிடந்த நிகேதனில் இருந்த போது வந்திருக்கிறது. அப்போது மனதில் எழுந்த தைரியம் எல்லா பயத்தையும் போக்கி விட்டது. சடங்குகள் முடிந்து காயம் ஆறும் வரை இப்படித்தான் அழுக்கான சுவரைப் பார்த்தேப் படுத்துகிகிடந்தாள் . கம்யூனில் யாருடனாவது பிணக்கு ஏற்படும் போது இப்படித்தான் சுவர்தான் அவளுடன் பேசுவதற்கு உபாயமாகியிருக்கிறது. அப்பா ஏதாவது பிணக்கு என்று வந்து விட்டால் இப்படித்தான் சுவரைப்பார்த்து நின்று கொண்டிருப்பர். அல்லது சுவரைப்பார்த்து உடம்பை நகர்த்திக் கொண்டு போய் கிடப்பார் என்பதும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவர் கடவுளே கடவுளே என்று சுவரைப்பார்த்து அரற்றிக் கொண்டிருப்பார். அவளுக்கும் இப்போது கடவுளுடன் உரையாட வேண்டும் என்று தோன்றியது. எனக்கு ஒரு வழி சொல் . நானும் பிழைக்க வேண்டாமா . பிச்சை எடுக்கிறாயே. உனக்குப் பிடித்தமானது தானா. எனக்கு எங்கே பிடிக்கிறது . வேறு வேலை தெரியவில்லை. வேலையா இல்லை. இந்த ஊரில் திரும்பின பக்கமெல்லாம் பனியன் கம்பனிகள்.எங்கிருந்தெல்லாமோ வந்து குவிந்து வேலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் நியாய சம்பளமோ இல்லியோ என்னமோ உழைப்பிற்கு காசு கொடுக்க ஊரில் முதலாளிகள் இருக்கிறார்கள் அதுவும் பார்த்தேனே, இந்த வகையில் பிச்சையெடுப்பதற்கு அதெல்லாம் மேல் . அதுவும் பார்த்தேனே, அனுதாபப்பட்டு வேலைக்குப் போலாமே என்பார்கள். வேலை கேட்டால் வேற எடம் பாரு என்பார்கள். இயல்புதானே. ஆண்களைப் பற்றித் தெரியாதா. நீயும் ஆணாக இருந்தவள்தானே . ஆமாம். ஆணாக இருந்தும் வேலை பார்த்துவந்தவன் முன்பு வேலை பார்த்திருக்கிறாய். சமீபத்தில் எங்கே போனாய். எங்கே வேலை பார்த்தாய். நாலு நாள் போனாய். எந்தத் தொழிலில்தான் சிரமமில்லை. வேலை செய்கிற இடத்தில் முக்கல் முணகல் உரசல் என்பதையெல்லாம் பெரிதாக எண்ணினால் இப்படித்தான். ஒம்பது ஒம்பது என்று சொல்லிக்காட்டுகிறார்கள் இரண்டு நாளைக்குச் சொல்வார்கள் அப்புறம் அவர்களும் உன்னை முழுப் பெண்ணாகத்தான் பார்ப்பார்கள். அப்படிப்பார்ப்பதில்லையே.. பார்ப்பார்கள். வீட்டில் இருந்த பெண் வேலைக்குப் போனாலும் இப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள் ஆரம்பத்தில் ..பிறகு அவளையும் மனுஷியாகப் பார்த்து மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா. மனுஷிகள் மகா மனுஷிகளாக இப்போது உயர்ந்து இருக்கிறார்களே. எந்த துறையில் அவர்கள் இல்லை. எந்தத் துறையில் அவர்கள் சாதிக்கவில்லை. நீயும் சாதிக்கலாம். நீண்ட சுவரும் இருட்டும் அவளை பயமுறுத்தியது. அவளின் அருகில் வந்து உட்கார்ந்தவன் மெல்ல அவளை உரசினான். அனுமதிக்கலாமா என்று ஒரு கணம் நினைத்தாள் . அவன் இடது கையை அவளின் இடுப்பைச் சுற்றி வளைக்கிற விதமாய் நகர்த்தினான். அவள் விறுக்கென்று எழுந்து உடம்பை உதறிய போது அவனின் கையிலிருந்த ஆணுறைப் பொட்டலம் கீழே விழுந்தது. subrabharathimanian Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 ReplyForward