சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 27 டிசம்பர், 2022

Erode Chandrasekar short stories / சுப்ரபாதிமணியன் நண்பர் சந்திரசேகர் அவர்கள் சக தோழராக, சக ஊழியராக தொலைபேசி தொடர்பு துறையில் கூட இருந்து பணியாற்றியவர். பணியை பொருத்த அளவில் தீவிரமான மதிநுட்பமும், மனப்பயிற்சியையும், உழைப்பும் கொண்டவர், அவ்வப்போது வாசிக்கிற பழக்கமும் அவருக்கு இருந்தது, ஓய்வு பெற்றபின் சக தோழர்களாக இருந்த பல ஊழியர்கள் எப்படிமாறி விட்டார்கள் என்று யோசிக்கிறேன். பலர் ரியல் எஸ்டேட்காரர்கள் என்று ஆகிவிட்டார்கள். சிலர் வட்டிக்குப் பணம் தருகிறார்கள். பிறருக்கு தொழிற்சங்க பணிகள் ஆர்வ மூட்டுகின்றன, பலருக்கு ஓய்வூதிய சங்க பணிகள் உற்சாகமளிக்கின்றன. தொடர்ந்து உழைக்கிறார்கள்.பலர் கோவில்,குளம், ஆன்மீகச்சுற்றுலா என்று பொழுதைக்கழிக்கிறார்கள்.நோய்களுக்கான சரியான மருத்துகளைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்குச் சிக்கல். இதெல்லாம் இல்லாதவர்கள் பல்செட் உதவியுடன் உணவு உண்டு, தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கி சுயநலத்துடன் தங்கள் குழந்தை, குட்டிகள், பேரன் பேத்திகளுடன் எந்தவித மனச் சிக்கலும் இல்லாமல் பொழுதைப் போக்குகிறார்கள்.இவர்களின் கடைசி இலக்கு காசி, ராமேஸ்வரம் என்பதால் எந்தச் சிக்கலும் இல்லை. நண்பர் சந்திரசேகர் இந்த பணி ஓய்வு காலத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய எழுத்துக்கள் எளிமையானவை. சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை... சாதாரண மக்களின் வாழ்க்கையை, எளிமையான மொழியில் தான் எழுத வேண்டும் என்பதில் அவர் திடமாக இருக்கிறார். எளிமையான மொழி மட்டுமல்ல, எளிமையாக எல்லோருக்கும் சென்று வாசிப்பில் சேர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் அந்த வகையில் தான் இதில் உள்ள கதைகள் எல்லாம் எளிமையான மனிதர்களின் ஆசைகள், சந்தோஷம், மகிழ்ச்சி பெற்றுக் கொள்கிற போதனைகள், அறிவுரைகள், வாழ்க்கைப் பாடங்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன. இலக்கிய பத்திரிகை எழுத்தாளர்களின் சிடுக்கு மொழியும் சிடுக்கான மையமும், சிக்கலான மையங்களும் இல்லாமல் எளிமையான மொழியில் எளிமையான மனிதர்கள் பற்றிய கதைகளை சொல்லிக்கொண்டு போகிறார், அவருடைய நோக்கம் அதிகப்படியான மக்களை வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்கான மொழியையும் மையத்தையும் அவர் தேர்ந்தெடுத்து கொள்கிறார். அதற்கான ஊடகப்பகுதிகளையும் தேர்வு செய்து கொள்கிறார் . இந்த பணியில் அவர் தொடர்ந்து இயங்க வேண்டும். அவரின் அனுபவங்களில் நாவல் போன்ற பெரிய தளங்களில் அவர் இயங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன . அதை அவர் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர் என்ற வகையில் இந்த தொகுப்பு வெளிவருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஓய்வு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் நண்பர்களை என்றும் நேசிக்கிறேன். 0 சுப்ரபாதிமணியன் திருப்பூர்