சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 27 டிசம்பர், 2022

ஹம்பி- / சுப்ரபாரதிமணியன் 0 இரண்டு பெரிய பாறைகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. அவை இரண்டு சகோதரிகள். ஹம்பிக்கு வந்து அவர்கள் பாறைகளையும் அதன் சிதைவுகளையும் பார்த்து இருக்கிறார்கள். களைத்துப் போய் ஒரு இடத்தில் ஓய்வுக்காக உட்கார்ந்து இருக்கிறார்கள் இளைய சகோதரி மூத்த சகோதரியிடம் இந்த பாறைகளின் சிதைவை பார்க்கவா நாம் எவ்வளவு தூரம் வந்தோம், வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதை அவர் சொன்ன பின்னால் அவமதிப்பாக ஆகி அவர்கள் கற்களாகி விட்டார்கள். இந்த சிதைவுகளை நிராகரிக்கிறவர்களுக்கு பதிலாக அக்கா தங்கை குண்டு என்ற அந்த பாறைகள் அமைந்திருக்கின்றன. ஹம்பியின் கோட்டையும் தாமரை மகாலும் யானை தாவளமும் கோட்டைகளாகவே நிற்கின்றன. வழக்கமான யாத்திரிகர்கள் இந்த பகுதியை சுற்றி பார்க்கிற போது இந்த பாறையில் குறித்து அந்த இரு சகோதரியின் வார்த்தைகள் தான் ஞாபகம் வரும். ஆனால் அங்கு இருக்கிற பல்வகையான கோயில்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஹம்பி - பாறைகள்: / சுப்ரபாரதிமணியன் கணித ரூபங்களைக் காண்கிறேன் எந்த உருவமும் தென்படவில்லை. ஆனால் எந்த உருவத்தையும் பொருத்திக் கொள்ளலாம் வெயில் கொதிக்கிற போது அது கோபம் தரும் அம்மனாக இருக்கிறது. குளிர் வாட்டும் போது ஆசீர்வாதம் செய்யும் அம்மாவாக இருக்கிறது. ஆச்சரியங்கள் கடந்து போகிறபடி அதன் உருவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. நிறமழையில் அவை கொள்ளும் ரூபங்கள் விசித்திரமானவை சுற்றிலும் சலசலத்து ஓடும் துங்கபத்திரா நதியின் நீரோட்டமும் சப்தமும் பாறைகளுக்குள்ளும் அடக்கம் அப்பாவி மக்களின் பல சொற்களைத் துப்பும் அவை பல சமயம். மக்களின் அழுகைகளை, துக்கங்களை உள்வரித்துக் கொள்ளும். பறக்க எத்தனைக்கும் பறவை போல் கிடக்கும். வானத்தை நோக்கி.படுத்துக்கிடக்கும். எங்கள் பார்வை இலக்கு வானம் என்பது போல் நிற்கும். இந்த பாறைகளில் இருந்து கல் தேரை உருவாக்கலாம்.. நட்சத்திரங்களை நோக்கி நகரும் ராக்கெட்டுகளை உருவாக்கலாம். நல்ல தூக்கம் கொண்டு வரும் படுக்கைகளையும் உருவாக்கலாம். அவற்றிலிருந்து எல்லா உருவாக்கத்திற்கு பின்னாலும் உருவம் எதுவும் இல்லாமல் என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் இருக்கிறது பாறைகள் விதவிதமான பார்வையில். அப்பார்வைகள் நமக்கு இல்லாத சுதந்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் நிறம் மாறிக்காட்டலாம் ஆனால் பொதுவான நிறமும் உண்டு அவற்றுக்கு. தியான நிலையில் இருக்கும் பாறைகளிலிருந்து கற்றுக் கொள்ள மோனநிலையும், தியான நிலையும் அவற்றின் ரூபங்களும் கூட உண்டு ஹம்பி பெல்லாரி மாவட்டம் கொசப்பேட்டை தாலுகாவில் அமைந்திருப்பதாகும். கமலாப்பூரில் இருந்து மெல்ல நடந்தால் ஹம்பி சார்ந்த பல விஷயங்களை பார்த்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் செல்லலாம். இல்லாவிட்டால் ரிக்க்ஷாக்களும் மிதிவண்டிகளும் மின்சார வாகனங்களும் என்று கைக் கொண்டால் பயணம் சுலபமாகும். அலாவுதீன் கில்ஜியின் வருகை யாதகிரி ராஜ்யத்தில் பெரும் மாற்றங்களை உண்டு பண்ணியது. விஜயநகர பேரரசின் மன்னர்கள் சுயநல மிக்கவர்கள் என்றாலும் கலாச்சாரம், அறிவு வாதம், இலக்கியம் ஆகியவற்றை வளர்ப்பவராக இருந்தார்கள். கிருஷ்ணதேவராயர் திம்ம ராசாக்கு உதவியாளராக இருந்தார் விரனரசிமா அவரின் எட்டு வயது மகனை ஆட்சியில் ஏற்றுவதற்காக கிருஷ்ண தேவராயரின் கண்களையே எடுத்து விடும்படி சொன்னார். ஒரு பரிகாரமாய் அவரின் ஆலோசனை வேண்டாம் என்பதால்.திம்மராசா கிருஷ்ணதேவராயரை மறைத்து விட்டு ஒரு ஆட்டுக்குட்டியின் கண்களை எடுத்து கிருஷ்ணதேவராயன் கண்கள் என்று காட்டினார். கிருஷ்ணதேவராயரின் கண்களை எடுத்து விடும்படி தான் அவர் சொன்னார். அதற்காக அப்படி செய்தார். கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை கொண்டவராக இருந்தார் அமுத்தமாலியா, ஜம்புவதி கல்யாணம் போன்றவை அவர் எழுதிய இதிகாசும் சார்ந்த நூல்கள். அவருக்கு கன்னட ராஜ்ய ராமண்ணா என்ற பட்டமும் உண்டு. அவர் ஞாபகமாக ஹம்பியில் இருக்கும் விருப்பாக்சார் கோவிலில் ஒரு உரையாடும் களத்தை கட்டினார். அவரின் அம்மா நாகலதேவியின் நினைவாக அவர் எழுப்பிய ஊர்தான் கொசப்பேட்டை. கிருஷ்ண தேவராயா காலத்தில் பெண்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது, மல்யுத்தம், இசை, நடனம் போன்றவற்றிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்க.ள் பலருக்கு காவலாளிகளாக உதவியாளர்களாகவும் பெண்கள் விளங்கினார்கள். ஆனாலும் குழந்தைகள் திருமணமும் வரதட்சணை என்பதும் கொடுமையானதாகவே அப்போதும் இருந்திருக்கிறது. பல வேலைகளுக்காக அவர் முஸ்லிம்களை கூட அதிகாரிகளாக நியமித்திருக்கிறா.ர் அம்பியின் முன்பகுதியில் தென்படும் கோவிலில் இருக்கிற முன்பாகங்களும் சிற்பங்களும் விருப்பாச்ச கடவுளின் உறவுகளை ஒத்திருக்கின்றன. விருப்பாக்சாவை பாம்பாத்தி என்றும் சொல்கிறார்கள். இதுதான் ஹம்பியில் உள்ள பழமையான கோயில். பம்பா தேவி எனும் பெண் பற்றிய துன்பக் கதைகளும் காணக் கிடைக்கின்றன. கொண்டேன்டா ராமா கோயிலுக்கு பின்னால் விட்டலா கோயொல் இருக்கிறது. சற்று உயரமான இடத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அங்கு மாருதி உருவம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கிற.து அந்த இரண்டு பக்கங்களிலும் தென்படும் கல்பந்தல்கள் பொன்னும் வைரமும் மின்னும் கற்களும் விற்கிற சந்தைகளாக இருப்பதை சொல்கின்றன. அந்த பகுதியை சூலை பஜார் என்று அழைக்கிறார்கள் அழைத்திருக்கிறார்க.ள் தேவதாசிகளின், விபச்சார பெண்களின் சந்தை என்ற பொருளில், ஆனால் அதற்கான காரணம் சரியாக தெரியவில்லை பெண்களை வியாபாரப் பொருளாக அங்கே பயன்படுத்தியிருப்பார்கள் என்ற யூகம் இருக்கிறது. ஒடியா கொனார்க் கோயிலின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட கல் தேர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. கிருஷ்ணதேவராயரின் இளைய சகோதரர் கட்டிய அட்சுதிரயா கோயில் குறிப்பிடத்தக்க கலை அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆயுதங்களை வைத்துக்கொண்டு பத்து கைகளுடன் இருக்கும் பெண் தெய்வ சிலை ஒன்று முக்கியமானதாக இருக்கிறது. கிருஷ்ணர் கோயிலில் இருந்து கமலாபுரம் செல்லும் வழியில 12 அடி கொண்ட ஒரு பெரிய லிங்கம் இருக்கிறது .அதுதான் ஹம்பி பகுதியில் இருக்கிற மிக உயரமான லிங்கம் ஆகும். சூரிய ஒளி அதன் மேல் பட்டு அது தருகிற அழகு சொல்லி மாளாது. நூற்றுக்கணக்கான லிங்கங்கள் பாறைகளில் அமைந்திருக்கின்றன. கிருஷ்ணதேவராய காலத்தில் ஒரு பிராமணரால் உருவாக்கப்பட்ட உக்கிர நரசிம்மர் 22 அடி உயரத்தில் இருக்கிறது. அது வெட்ட வெளியில் இருக்கிறது ஆனால் அதை சுற்றியுள்ள எந்த கோயிலும் இல்லை இந்த கோயில்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அங்கங்கே காணப்படும் கல் சுவர்களின் பிரமாண்டமு திடமும் ஆச்சர்யப்படுத்துகிறது. வாசனைப்பொருட்களும் பஞ்சும் சார்ந்த இடங்களில் வியாபார முத்திரைகள் உள்ளன.ஹம்பி பஜாரினைச் சார்ந்த புனித ஸ்தலங்கள், கமலாபுரம் சார்ந்த பழைய அரசு ஸ்தலங்கள் குறிப்பிடவேண்டியவை. வெற்றி நகரமாக விளங்கிய விஜயநகரம் அதன் நினைவுச் சின்னங்களை நிறையவே கொண்டிருக்கிறது. எல்லா காலங்களிலும் நகர விரிவாக்கத்திற்காக செய்யப்படும் மக்கள் வெளியேற்றம் இங்கும் நடந்ததற்கான அத்தாட்சிகள் நிறைய உண்டு. இரண்டு பெரிய பாறைகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. அவை இரண்டு சகோதரிகள். ஹம்பிக்கு வந்து அவர்கள் பாறைகளையும் அதன் சிதைவுகளையும் பார்த்து இருக்கிறார்கள். களைத்துப் போய் ஒரு இடத்தில் ஓய்வுக்காக உட்கார்ந்து இருக்கிறார்கள் இளைய சகோதரி மூத்த சகோதரியிடம் இந்த பாறைகளின் சிதைவை பார்க்கவா நாம் எவ்வளவு தூரம் வந்தோம், வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதை அவர் சொன்ன பின்னால் அவமதிப்பாக ஆகி அவர்கள் கற்களாகி விட்டார்கள். இந்த சிதைவுகளை நிராகரிக்கிறவர்களுக்கு பதிலாக அக்கா தங்கை குண்டு என்ற அந்த பாறைகள் அமைந்திருக்கின்றன. ஹம்பியின் கோட்டையும் தாமரை மகாலும் யானை தாவளமும் கோட்டைகளாகவே நிற்கின்றன. வழக்கமான யாத்திரிகர்கள் இந்த பகுதியை சுற்றி பார்க்கிற போது இந்த பாறையில் குறித்து அந்த இரு சகோதரியின் வார்த்தைகள் தான் ஞாபகம் வரும். ஆனால் அங்கு இருக்கிற பல்வகையான கோயில்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். .பல்வேறு மடங்கள் இருக்கின்றன. தேவாங்க செட்டியார்கள் என்ற சமூகம் தமிழ்நாட்டில் நெசவு தொழில் அதிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களின் ஜாதி சார்ந்த உலக குரு, ஜாதி குரு காயத்ரி பீடத்தில் இருக்கிறார், அவர் தமிழ்நாட்டிற்கு வரும்போது பெரும் அரசியல்வாதிகளுக்கு கூடுகிற கூட்டமும் வரவேற்கும் கிடைக்கும். அவரை எதேச்சையாக காயத்ரி மடத்தில் பார்த்தபோது திருப்பூர் அவருக்கு நெருக்கமாக இருப்பதை தெரிந்து கொண்டேன். அப்போது கர்நாடகாவில் பிரதமர் மோடி வருகையையொட்டி தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சிகள் இருந்தன. அதை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருடனான உரையாடலில் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சிரமம் தந்தை எண்ணி அதை அணைத்து விடச் சொன்னேன். அப்படியே செய்துவிட்டு தன்னுடைய உரையாடலை தொடர்ந்தார் அந்த உரையாடலில் திருப்பூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கை பற்றியும் திருப்பூர் பற்றி பனியன் தொழில் பற்றியும் பல விசாரணைகள் இருந்தன. ஒரு ஆன்மீகவாதி என்பதை மீறி சாதாரண சம்பாசனையில் அக்கறை கொண்டவராக அவர் உரையாடியது என் மனைவிக்கு பெருத்த ஆச்சரியத்தை கொண்டு வந்தது. அவரின் மதம் சார்ந்த ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை அவர் சுட்டிக் காட்டிய போது அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாகவும் இருப்பது தெரிந்தது, அந்த அளவு பல கோயில்கள், பல நிர்வாக இடங்கள் அந்த மடத்தின் பெயரில் இருப்பது தெரிய வந்தது. ஹம்பி வருகிற தேவாங்க செட்டியார்களும் தமிழ்நாட்டுக்காரர்களும் காயத்திரி மடத்திற்கு வந்து செல்வது ஒரு வேலையாகவேக் கொள்கிறார்கள். மகிழ்ச்சியுடன் அதை செய்கிறார்கள். ஹம்பியில் சாதாரணமாக ஒரு நல்ல தேநீரை தேடித்தான் பிடிக்க வேண்டி இருக்கிறது. பெரும்பான்மையான கடைகளில் முன்பே தயாரிக்கப்பட்டு பிளாஸ்க்குளில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கிற தேநீரைத் தான் தருகிறார்கள். உடனடியாக தேநீரை தயாரித்து தருவதற்கான முயற்சிகள் இல்லை. பக்கம் இருக்கும் வாழை தோட்டங்களில் இருந்து வந்து குவிந்திருக்கும் வாழைப் பழங்கள் சீப்புகள் தெருவெங்கும் விறபனைக்காகக் கிடக்கின்றன. அங்கு உள்ள ஓர் உயர்ந்த மலையில் அனுமார் பிறந்ததாக சொல்கிறார்கள். ஹம்பி தான் பழைய கிஸ்கிந்தா என்றும் சொல்கிறார்கள். ராமர் சீதையை சிறை மீட்பதற்காக வானரங்களை கொண்டு படை அமைத்து பயிற்சியை அமைத்த இடம் ஹம்பி பகுதி என்றும் கதைகள் உள்ளன. பாறை கோயில்கள், சந்தை மண்டபங்கள், வீதிகள் போன்றவை இரவு நேரத்தில் வெளிச்சத்தில் ஆச்சரியத்தை கொடுக்க கூடிய அளவில் இரவின் ஒளியில் மின்னுகின்றன. பகலில் பாறையில் தருகிற ஆச்சரியத்தை போலவே ஹம்பி நகரத்தின் வீதிகள் இரவுகளில் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இவ்வளவு பாறைகளும் அதன் விசித்திர கோலங்களும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவை எல்லாம் எப்படி ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கமோ, பூமியின் பிறழ்வோ இந்த கோலத்திற்கு கொண்டு வந்து இருக்குமா என்று யோசனை வருகிற.து ஆனால் அதன் விளைவாய் உருவான இந்த பாறைகள் தரும் மனச் சித்திரங்கள் அழியாதவையா அமைந்திருக்கும்