சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 மார்ச், 2022

முயற்சிகள் வெல்லட்டும் பெரும்பாலும் இயற்கைப் பின்னணியே ஹைக்கூவின் மையமாக இருக்கிறது. இயற்கையின் மீதும் மானுடத்தின் வீதம் எழுத்தாளர்கள் தாங்கள் கொண்டிருக்கும் விருப்பத்தை சுருக்கமாக வெளியிடுகிறார்கள். இயற்கையைத் தழுவிய எண்ணங்கள் தொடர்ந்து ஹைக்கூவில் இடம்பெற்றுவருகின்றன ஆனால் அந்த அடிப்படைகளை மீறி தற்சமயம் தமிழில் வரும் ஹைகூக்கள் உள்ளன .பல்வேறு மீறல்களை கொண்டிருக்கின்றன இயற்கையை மனிதன் வெற்றி கொள்ள முடியாது என்பதை இன்றைய சுற்று சூழல் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பது நம் அடிப்படையாக இருக்கிறது. அந்த எண்ணங்களை விஜயன் அவர்கள் தொடர்ந்து தன் படைப்புகள் மூலமாக சொல்லி வருகிறார் அதைத் தாண்டி சுயமுன்னேற்ற சிந்தனைகள், தினசரி வாழ்க்கையின் சிலகணங்கள், காதல் காயங்கள், முகநூல் காயங்கள் என்று பல்வேறு விஷயங்களை கடுகைத் துளைத்து கடலை புகுத்துவது போல் ஹைக்கூ பாணியில் விஜயன் அவர்கள் இந்த தொகுப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிதை என்பது வாழ்க்கையோடு இணைந்தது. நிழல்போல் தொடர்ந்து வருவது அதுவும் வாழ்க்கை அனுபவங்களோடு இணைந்து சொல்வதில்தான் எழுத்தாளர் வெற்றி இருக்கிறது. அந்த வெற்றியை தொடர்ந்துக் கைக்கொள்ளும் விஜயன் அவர்கள் இந்த நூலிலும் அதை காட்டியிருக்கிறார் அவர் தொடர்ந்து வேறு வடிவங்களிலும் முயற்சி செய்யவேண்டும் முயற்சி செய்து வருகிறார் அதை புத்தக வடிவில் ஆக்கவேண்டும் அவருடைய முயற்சிகள் வெல்லட்டும் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்