சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 மார்ச், 2022

“வஞ்சனை நாவல்” – பாலகுமரன் 22 வயது இளைஞரான பாலகுமரன் எழுதிய நாவல் முதல் பெரிய படைப்பாக வெளிவந்திருக்கிறது. 356 பக்கங்களில் கிறிஸ்தவ குடும்பப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். இந்த நாவல் சொல்லும் முறையிலும் விறுவிறுப்பான நடையிலும் சாதாரணமாக வாசிக்க ஏதுவாகிறது. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான எட்வின் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதன் மூலமாக இந்த நாவல் தொடங்குகிறது. கிறிஸ்தவ மதம் சார்ந்த சில அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் அவனை அன்னியபடுத்துகின்றன. அந்தச் சூழலில் வெகுவாக அன்னியமாகி விடுகிறான். அதற்கு மதவாதிகளால் சிறு தண்டனையும் அவனுக்கு கிடைக்கிறது. இடம் பெயரவேண்டி இருக்கிறது. ஆனால் முன்பே குடும்பச் சூழலில் அன்னியமானவன். குடிகார அப்பா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் அவனை அன்னியமாகித்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் அவனுடைய மனப் போராட்டங்களை இந்த நாவல் சொல்கிறது. ஆரம்பத்தில் இந்த நாவல் ஒரு கதையின் யுக்தி மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது. வேறு ஒரு கதை சொல்வதன் மூலமாக இந்த நாவல் ஆரம்பித்திருப்பது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது. நாவலில் இடையே வரும் உரையாடல்கள் மிகுந்த தீவிரத் தன்மையோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் பத்திரிக்கையாளர்கள், பாதிரியார்கள் இவர்கள் மத்தியிலான உரையாடல்கள் மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கிறது. தமிழ்ச் சூழல் இந்நாவலில் விவரிக்கப்படவில்லை. சுவாரசியமான உரைநடையும் எழுத்தும் சுலபமாக படிக்கத் தூண்டிய காரணத்தில் இந்த நாவலை சுலபமாக படித்துவிட முடியும். கிறிஸ்துவ எழுத்து என்பது தமிழில் நீண்ட காலம் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில் தீவிரத்களத்தில் இதற்கான உதாரணங்களை தேட வேண்டியதாக இருக்கிறது. அப்படி எழுதும் எழுத்தாளர்கள் கூட கிறிஸ்துவ பின்னணியை மேலோட்டமாக கொள்கிறார்கள். மதம் சார்ந்த நிறுவனம் சார்ந்த விமர்சனங்களை அதிகம் முன்வைப்பதில்லை. அந்த சூழலில் இந்த நாவல் சில கேள்விகளை எழுப்புவது விசேஷமாக இருக்கிறது. நாவலை சொல்லும் முறையில் வித்தியாசம் இருக்கிறது. எட்வின் இளமைப்பருவம், இளமையை தொலைத்து, அவனுடைய வாழ்க்கை, குடிகார தந்தை போன்ற சூழல் அவனை பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு பிரியம் தருகிற சில மனிதர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் திருமணம் ஆகிறது. அந்தச் சூழலும் சரியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழல் மத்தியில் கிறிஸ்துவ கதாபாத்திர தன்மையும் விவரிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஒரு கவிதை தொகுப்பு மட்டுமே முன்பு வெளியிட்டிருக்கிறார் பாலகுமரன். அதைத்தொடர்ந்து இந்த நாவலை வெகு குறுகிய காலத்தில் எழுதி இருப்பதாகத் தெரிவித்தார். இந்த நாவலின் வேகமும் சீரான உரைநடையும் வாசிப்புக்கு ஏதுவாக இருக்கிறது தமிழ்ச் சூழல் இல்லாத அந்நியத்தன்மை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து.... முயற்சிகளில் பாலகுமரன் பல சிகரங்களை எட்டக் கூடும் என்பதற்கு இந்த நாவல் உதாரணம்.. வஞ்சனை (நாவல்) பாலகுமரன் ரூபாய் : 300 பக்கங்கள் : 356