சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 மார்ச், 2022

மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 1 மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோட்டில் 19.03.2022 ..அன்று சித்தார்த்தா பள்ளியில் நடைபெற்றது . ஜெயபாரதி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மருத்துவர் ஜீவா பற்றிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன் மருத்துவர் ஜீவாவுடன் 50 ஆண்டு தோழமை எனக்குண்டு. ஆரம்பத்தில் பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள், திரைப்பட இயக்கம் போன்றவற்றில் ஆரம்பித்தது.இது தொடர்ந்தது. 90களில் ஊட்டியில் எழுத்தாளர்களுக்கான சுற்றுச்சூழல் முகாம் இணைந்து செயல்பட்டேன் . ( இந்த மாதிரி முகாம்கள் பல்வேறு காலகட்டங்களில் இணைந்தோம். திண்டுக்கல் சிறுமலையில் முகாம் இறுதியான ஒரு நிகழ்வு) அதைத் தொடர்ந்து நான் எழுதிய “ சாயத்திரை “ நாவல் அந்த முகாமின் இன்னொரு வடிவம் என்று மகிழ்ச்சியடந்தார். நமக்குத் தேவை வளர்ச்சியா , சுற்றுச்சூழல் பாதுகாப்பா என்ற கேள்வியை “ சாயத்திரை” நாவல் எழுப்பியதை அவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். சாயத்திரை ஆங்கிலப்பதிப்பு வெளியீட்டிற்கு திருப்பூர் வந்தார். வங்காளம், கன்னடம், இந்தி, மலையாளப் பதிப்புகள் வந்த போது செய்தியைப் பகிர்ந்து கொண்டேன் “ புத்துமண் “ என்ற ஒரு நாவலை சுற்றுசுச்சூழல் பிரச்சினைகள் குறித்துப் போராடிய அவரின் கரூர் நண்பர் ஒருவரை மையமாகக் கொண்டு எழுதினேன்.அதில் ஜீவாவின் “ நாம் குளத்து மீனா , பாத்திரத்து மீனா “ என்ற அவரின்கடிதத்தைப் பயன்படுத்தினேன். முதல் பதிப்பு உயிர்மை பதிப்பகம். இரண்டாம் பதிப்பு என் சி பி எச் வெளியிட்ட போது அவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். மகிழ்ச்சியடைந்தார். சுற்றுச்சூழல் போராளிகளை கவனப்படுத்துவது அவசியம் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பார் .அவரைச் சந்திப்பது அடிக்கடியும் இயல்பாகவும் நடக்குக் காரணமாக இருந்தது திருப்பூரில் அவரின் பொதுவுடமை இயக்கத் தோழர்களோடு அவருக்கு இருந்தத் தொடர்புதான் அவருடனான தொடர்ந்த சந்திப்புக்கும் என் சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளுக்கும் வழிகோலியது மற்றும் அந்ந்தியூர் அன்புராஜ், நாடக இயக்குனர் ராம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர் . 2. 21/3/22 அன்று கோத்தகிரி கே பி எஸ் கல்லூரியில் ஜீவா நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. பேரா சு சுஜாதா, கோத்தகிரி ராஜி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் உரை ஆற்றினர் .