சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 மார்ச், 2022

பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி உலக மகளிர் தினத்தையொட்டி கொங்கு பகுதியைச் சார்ந்த 12 பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை திருப்பூர் ஸ்ரீ விவேகானாந்தா சேவாலயம் அமைப்பைச் சார்ந்தவரும் கல்வியாளருமான ஜோதிலட்சுமி திறந்து வைத்தார். பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி இந்நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி ஓவியர் சின்ன ராஜ் பேசினார். எட்டுத்திக்கும் என்றத் தலைப்பில் எட்டு இடங்களில் நடக்கவிருக்கும் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சியின் முதல் இடம் திருப்பூராகும். பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி ” பெண்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தவர்கள். இந்த நூற்றாண்டில் அவர்கள் எழுச்சி பெற்று கலைஇலக்கியம் மற்றும் தொழில்த்துறைகளில் முன்னேறி வருகிறார்கள் . தங்கள் எண்ணங்களை ஓவியங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களின் ஓவியங்கள் உணர்ச்சிக்குவியலாக இருக்கும். அன்பின் வெளிப்பாடாக தாய்மை எண்ணங்களுடன் இருப்பது சிறப்பாகும் “ என்று கல்வியாளரும் திருப்பூர் காட்டன் வேலி பள்ளி நிர்வாகியுமான கவிப்ரியா ராஜீ அவர்கள் சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார், பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி ஓவியர் அங்காளீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.. பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெண்மைய ஓவியங்கள் இலக்கியப்படைப்புகளின் இன்னொரு பரிமாணமாய் விளங்குவதை தன் சிறப்புரையில் குறிப்பிட்டார். நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சியில் * சுப்ரபாரதிமணியனின் இரு நாவல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்: The Notch, 1098 * அழகு பாண்டி அரசப்பனின் “ ஒரு குத்துப் பருக்கை “ ( சிறுகதைத் தொகுப்பு ) * பொன் சண்முகசுந்தரத்தின் “ வகுப்பறை “ ( கவிதைத் தொகுப்பு) ஆகியவை இடம் பெற்றன. மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி.சுப்ரமணியன், சிவகுமார் பிரபு, வின்செண்ட் ராஜ் மற்றும் கவிஞர்கள் முத்து மீனாட்சி, லதாஹரி உட்பட பலர் பங்கு பெற்றுப் பேசினர் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி உலக மகளிர் தினத்தையொட்டி கொங்கு பகுதியைச் சார்ந்த 12 பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை திருப்பூர் ஸ்ரீ விவேகானாந்தா சேவாலயம் அமைப்பைச் சார்ந்தவரும் கல்வியாளருமான ஜோதிலட்சுமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி ஓவியர் சின்ன ராஜ் பேசினார். எட்டுத்திக்கும் என்றத் தலைப்பில் எட்டு இடங்களில் நடக்கவிருக்கும் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சியின் முதல் இடம் திருப்பூராகும். ” பெண்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தவர்கள். இந்த நூற்றாண்டில் அவர்கள் எழுச்சி பெற்று கலைஇலக்கியம் மற்றும் தொழில்த்துறைகளில் முன்னேறி வருகிறார்கள் . தங்கள் எண்ணங்களை ஓவியங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களின் ஓவியங்கள் உணர்ச்சிக்குவியலாக இருக்கும். அன்பின் வெளிப்பாடாக தாய்மை எண்ணங்களுடன் இருப்பது சிறப்பாகும் “ என்று கல்வியாளரும் திருப்பூர் காட்டன் வேலி பள்ளி நிர்வாகியுமான கவிப்ரியா ராஜீ அவர்கள் சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார், ஓவியர் அங்காளீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெண்மைய ஓவியங்கள் இலக்கியப்படைப்புகளின் இன்னொரு பரிமாணமாய் விளங்குவதை தன் சிறப்புரையில் குறிப்பிட்டார். நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சியில் * சுப்ரபாரதிமணியனின் இரு நாவல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்: The Notch, 1098 * அழகு பாண்டி அரசப்பனின் “ ஒரு குத்துப் பருக்கை “ ( சிறுகதைத் தொகுப்பு ) * பொன் சண்முகசுந்தரத்தின் “ வகுப்பறை “ ( கவிதைத் தொகுப்பு) ஆகியவை இடம் பெற்றன. மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி.சுப்ரமணியன், சிவகுமார் பிரபு, வின்செண்ட் ராஜ் மற்றும் கவிஞர்கள் முத்து மீனாட்சி, லதாஹரி உட்பட பலர் பங்கு பெற்றுப் பேசினர் செய்தி : சுப்ரபாரதிமணியன் 9486101003