சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 29 ஆகஸ்ட், 2016


                   நூல் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு ” குகைகளின் நிழலில்  “         ( மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியீட்டது, )

கோவை புத்தக்க் கண்காட்சியில் இறுதி நாளில்

நடைபெற்ற கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.விழாவில் இளஞ்சேரல் வரவேற்றார். பூஅரவீந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார். கீழ்க்கண்ட 3 நூல்கள் வெளியிடப்பட்டன..    1. சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு குகைகளின் நிழலில்  “         ( மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியீட்டது, ) .2  அன்புசிவாவின் 21ம் நூற்றாண்டு நவீன கவிதைகளில் புதியப் போக்குகள் ( ஆய்வு நூல், காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு ) 3. ஸ்டிப்பன் ஜஸ்வேய்க்கின் ஆட்கொள்ளப்பட்டவன் ஜெர்மானிய நாவல்: தமிழில் லதா ராமகிருஷ்ணன்( ( புதுப்புனல் பதிப்ப்கம் , சென்னை வெளியீடு )
சுப்ரபாரதிமணீயனின் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் மலேசியப் பின்னணீல் உள்ளவை. அவர் பேசியது : உலகம் முழுக்க தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உரமாக இருந்தவர்கள் தமிழர்கள். தமிழ் ஆட்சி மொழியாக அங்கு கவுரவம் பெற்றுள்ளது. தமிழை முதன்மை மொழியாக்க் கொண்ட 540 தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அங்கு அரசாங்கத்தின் முழு நிதி உதவியுடன் இயங்குகின்றன. அகிலன் பால்மரக்காட்டினிலே நாவல், எனது மாலு ஆகிய நாவல் ஆகியவை  அங்கு சென்று கண்ட மலேசிய அனுபவங்களை நாவல் வடிவில் கொண்டிருக்கின்றன.அங்கு கணினி தொழில் சார்ந்து வேலை செய்வோர், பல வியாபாரங்களில் ஈடுபட்டத் தமிழர்கள்,   டூரிஸ்ட் விசாவில் சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் அங்கு முறையற்ற முறையில் வேலை செய்யும் தமிழர்களின் அனுபவங்களை பல எழுத்தாளர்கள் இலக்கியப் படைப்புகளீல் பதிவு செய்திருக்கிறார்கள். மலேசிய தமிழர்களின் இலக்கியப் படைப்புகள் இன்னும் விரிவாய் தமிழகத்தில்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தமிழகம் மலேசியா இணைப்புப் பாலத்திற்கு அது அடிப்படையாக அமையும்.
  புதுப்புனல் பதிப்பகம்     ரவிச்சந்திரன் தன் பதிப்பக அனுபவங்களைப் பற்றிப் பேசினார். வழக்கறிஞர் நந்தகுமார், அகிலா, அவைநாயகன், பூபாலன், உட்பட பலர் பேசினர். மரபின் மைந்தன் முத்தையா, பேரா.மணி, க.வை.பழனிச்சாமி, சி.ஆர் ரவீந்திரன், சோழநிலா, அம்சப்ரியா உட்பட பலர் பங்கு பெற்றனர். இளவேனில் நன்றி கூறினார்.