சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல்

வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி.......                                            .ப்ரதிபா ஜெயச்சந்திரன்,  பாண்டிச்சேரி

    செந்திலின் முகத்தில் பஞ்சு    பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி  இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற வெற்றிதான். இது “  சாயத்திரை  “ போன்ற நட்சத்திர நாவல்.
 கதை சொல்லியின் மொழி எந்த இட்த்திலும் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்தாத எளிமையான எதார்த்த மொழி.
  கதைக் களத்தில் சிறுவர்களின் வாழ்க்கை எவ்வாறு பனியன் கம்பனிகளின் வாசலுக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது என்றக் கேள்விக்கான பதில்கள் நாவலெங்கும் ஆங்காங்கே யதார்த்தமான விவரணையில் கதாபாத்திரங்களின் மொழியில் சொல்லப்படுவதும் அந்த வாழ்வில் அவர்கள் இழந்து போன் சுகங்களும் அவ்வாழ்கையில் கதாபாத்திரங்கள் ஒருவிதமான தப்பித்தலை உணர்வது போலும். இவ்வாழ்வின் சிக்கலான இண்டு இடுக்குகளையும் சொல்வதுடன் பெண்களின் அவலமான நிலையும் தாய்க்கும் மகளுக்கும் மறைப்பு ஒரு கவசமாக மாறி விடுவதும் , கம்பெனியில் ஆண்களின் சிறுசிறு தொடுதல்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மனம் நினைத்தபோதிலும் தொடுதலின் சுகத்தில் காலூன்றி விடும் ஒரு தன்னிலைச் சிக்கல் சார்ந்த பெண்களின் வாழ்வும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இடையிடையே சொல்லப்படும் அம்மா சொன்ன கதை, ஆசிரியர் சொன்ன கதை, தொலைக்காட்சி சொன்ன கதை போன்ற இவையாவும் தங்கள் வாழ்வை பனியன் கம்பெனிகளில் தொலைத்த சிறுவர்களின் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடைவேளைகளாக மிஞ்சிப் போய்விடுகின்றன.  அல்லது அவை தங்கள் வாழ்வில் நினைவு கூரத்தக்க அகவய நிகழ்வுகளின் படிமங்களாக மாறி கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளின் இடையே வேர் விட்டு நீட்டும் சிறிய பசிய இலைகளாக நிற்கின்றன புதிய உத்தி.... .. அடுத்து
1. அம்மாவின் புடவை வாசனை முக்கை இழுத்துக் கொள்ளச் செய்த்து
2. குடித்தால் சிவப்பாகி விடலாம் என்ற சிறுவர்களின் கற்பனை
3. தேவடியாக்கீரை என்ற பெயர் இருப்பதையும் அம்மா சொன்னபோது ரொம்பவும் வெட்கமாக இருந்த்து கனகுவுக்கு.
4.என்ன சமாதானம் வேண்டியிருக்கு. இனிமேல் சிகரெட்டெல்லா குடிக்க மாட்டேன்னு சத்தியமா பண்ணனும். போடா.. த்லையைக் குனிந்து கொண்டு சொன்னான் செந்தில் .
போன்ற வரிகள் சிறியவர்கள் எனக்கணித்து விடமுடியாதபடிக்கு வாசிப்போடு வளர்ந்து விடும் சிறுவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் பெரியவர்களானாலும் தாங்கள் இன்னும் சிறுவர்களே என சட்டென நிஜத்தைத் தழுவும் கணங்கள்.ஞாயிறுகளில் அவர்கள் விளையாட முடியாமல் போகையில் அவர்களுடன் நம்மையும் மனம் கனக்கச் செய்யும். சிறுவர்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டு பனியன் கம்பெனிகள் என்னும் பிணக்கிடங்கினுள் அவர்கள் தள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பணம், கனகுவின் அப்பாவின் வார்த்தைகளில் “ உன்னப் படிக்க வெக்காமெ உன்னெ சம்பாதிக்கச் சொல்லி செலவு பண்ரம் பாரு அது திருட்டுப் பணமில்லாமெ என்னடா.. கள்ளப்பணம்”  போன்ற வரிகள் ஒளிக்கீற்றுகளாக, யதார்த்தம் சார்ந்த தீர்வுகளையும்  முன் வைக்கின்றன என்ற வகையில்                        பிணங்களின் முகங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது    
( 250 பக்கங்கள் ரூ200 . நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை  – 98..)