சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை
                                             சிறுவர் நூல் வெளியீடு



* சுப்ரபாரதிமணியனின் புதிய நூல் - “அன்பே உலகம்“                                                                                          என்ற சிறுவர்  நூல் வெளியீடு 24/1/16 ஞாயிறு மாலை   மக்கள் மாமன்ற நூலகத்தில்,       டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூரில்  நடைபெற்றது,  

தலைமை வகித்தவர்: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ) முன்னிலைவகித்தவர் : சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் )


 சுப்ரபாரதிமணியனின் “அன்பே உலகம்“                                                                                         சிறுவர் நூலை பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ) வெளியிட ஆறுச்சாமி ( சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர், திருப்பூர்), ஆசிரியை ஹேமா மேத்தா, சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

உரையில் :


சுப்ரபாரதிமணியன்: பெரும்பான்மையான எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கான நூல்களை எழுதக் காரணம் அவர்களுக்கும் இருக்கும் குழந்தை மனப்பான்மையும் குழந்தை இலக்கியம் குறித்த அக்கறையும்தான். எளிமையும் செய்தியும் அறிவுரையும் என்ற மரபான சிறுவர் கதைகள்  சமீப ஆண்டுகளில்  புதிய வேகத்தையும், நவீனமான விசயங்களையும் உள்ளடக்கி வருகின்றன என்பது ஆரோக்கியமானது. தமிழ்க்கல்வி குறைந்து வரும் இக்காலத்தில் பெரும்பான்மையான குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பதால் தமிழில் குழந்தை இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல பள்ளிகளில் வாசிப்பு இயக்கங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும்.  பெற்றோர்களும் தொலைக்காட்சியில் குழந்தைகள் அதிக நேரம்  செலவிடுவதைக் கட்டுப்படுத்தி  கதைகளை வாசித்துக் காட்டுவதிலும் தங்கள்  ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தமிழின் வளர்ச்சிக்கும் தமிழில் குழந்தைகள் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.


 ஆறுச்சாமி ( சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்), :சிறுவர்களுக்கு அடிப்படையான சில புத்தகங்களே பல கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக விளங்கியிருக்கின்றன.கல்வி சுயநலமாகி விட்டது. தலைமுறை இடைவெளி அதிகமாகி விட்டது. குழந்தைகளுக்கு பல வகைகளில் நெருக்கடி தருகிறோம்.குழந்தைகள் பாடப்புத்தகங்கள் மூலம் கல்வி பெறுவது என்பது ஒரு பகுதி. வாழ்வியல் கல்வி என்பதைக் கற்பிப்பதில் பெற்றோர்க்கும் பங்கு உண்டு .


 முடியரசு          ( அக்னிப்பேரவை ) ., சாமக்கோடாங்கி ரவி ( வாசக தளம் ), கா.ஜோதி ( கனவு) ஆகியோர் உரையாற்றினர்.
 கவிதை வாசிப்பில் ஆ. அருணாசலம்  உட்பட கவிஞர்கள்  கவிதைகள் வாசித்தனர்......
     ( சுப்ரபாரதிமணியனின் “ அன்பே உலகம் “ சிறுவர் நூல்
வெளியீடு : நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை,   திருப்பூர் .நன்கொடை ரூ 50 ., 98944 82752   )