சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 27 ஜூன், 2015

பார்த்தது:(Birdman) : 

சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.
ரிக்கன் தாம்சன் ஒரு முன்னாள் சூப்பர் ஹீரோ நடிகர். பேர்ட்மேனாக (Birdman) மூன்று படங்களில் நடித்தவர் 4 ஆவது படம் எடுக்க நினைத்தபோது வெறுத்து அந்த வேடத்தை ஒதுக்கியவர்.
ஆனால் அதன் பிறகு தன்னை ஒரு நல்ல நடிகனாக வெளிக்காட்ட வேறு கதாப்பாத்திரம் எதுவும் கிடைக்காமல் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு பழைய பிரபல சிறுகதையை தானே மேடை நாடகமாக எழுதி, தயாரித்து, அதில் நடிக்கவும் செய்கிறார். அந்த மேடை நாடகம் பல முன்னோட்டங்களைத் தாண்டி மக்கள் பார்வைக்கு வரும் தருணம் வரைக்கும் தாம்ஸன் கதைதான் பேர்ட்மேன்.
கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் அதை அசாதாரணமாக்குவது ஒளிப்பதிவு. மொத்தப் படத்தையும் ஒரே ஷாட் இல் (single shot ) எடுத்திருப்பதைப் போலக் காட்டியிருக்கிறார்கள். Steadycam, Handheld shots கலவையில் பல நீண்ட ஷாட்களை ஒன்றிணத்து ஒளிப்பதிவு, லைட்டிங், படத்தொகுப்பு, கலர் கரெக்‌ஷன் உதவியுடன் ஒரே ஷாட்டாக அதைக் காட்டி நிகரற்ற ஒரு படத்தை வழங்கி அதை “Mastery of Art” என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். அலிஜண்ட்ரோ இயக்கத்தில் மைக்கேல் கீட்டன் நடிப்பில் 'பிளாக் காமெடிவகை படமாக மிரட்டுகிறது படம்.
படத்தின் இயக்குநர் அலிஜண்ட்ரோ (Alejandro) ஏற்கனவே ‘Death Trilogy’ படங்களான Amores perros (2000), 21 Grams (2003), Babel (2006) மூலம் பரிச்சயமானவர்தான். இவரது நான்காவது படமான Biutiful (2010) படமும் ஏகவரவேற்பைப் பெற்ற படம் தான். ஐந்தாவது படம் பேர்ட்மேன். ஏற்கனவே 7 பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 2 விருதுகளை வென்றிருக்கிறது, 9 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 4 ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர் இமானுல் லுபெஸ்கி (Emmanuel Lubezki) ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். ஏற்கனவே 7 முறை nominate செய்யப்பட்டு சென்ற ஆண்டு ‘Gravity’ படத்திற்காக தனது முதல் ஆஸ்காரை வென்ற இவர் இந்த ஆண்டும் பேர்ட்மேன் படத்திற்காக ஆஸ்கரை விருதை கையில் ஏந்திருக்கிறார்.
(Birdman) கதைப்பற்றி:
கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று... ரிக்கன்; இன்னொன்று ரிக்கனின் மனசாட்சி. ரிக்கன் நடித்த 'பேர்ட் மேன்பட கதாபாத்திரம்தான் அவருடைய மனசாட்சி. நிஜத்தில் ரிக்கன் உளவியல்ரீதியான பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார். அதாவது தன்னால் அந்தரத்தில் மிதக்க முடியும், விரலை அசைத்து பொருட்களை நகர்த்த முடியும் என நம்புகிறார்.
இதில் அவரின் மனசாட்சியான பேர்ட் மேன், 'ஹேய் உன்னை மக்கள் இன்னும் மறக்கல.. நீ மறுபடி பேர்ட் மேனா நடிஎன நச்சரிக்கிறது. இதோடு இன்னொரு பிரச்னையும் சேர்ந்துகொள்கிறது. ரிக்கன் நடத்தும் நாடகத்தில் நடிக்க வருகிறார் மைக் என்கிற புகழ்பெற்ற நாடக நடிகர்.
ரிக்கனுக்குக் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச பாராட்டுக்களையும் தன் பக்கம் திருப்பிக்கொள்கிறார் மைக். ஒரு சினிமா நடிகராகத் தோற்று, இப்போது நாடக நடிகராகவும் தோற்றுப்போன ரிக்கன் என்ன செய்கிறார் என்பது செம எமோஷனல் கதை.
படத்தில் ரிக்கனாக நடித்திருக்கும் மைக்கேல் கீட்டன் நடிப்பு அசத்தல். படத்தில் ஒரு காட்சி. ரிக்கன் சில நிமிடங்களில் மேடையில் இருக்க வேண்டும். நாடக அரங்கத்தின் பின்பக்க வாயிலில் இருந்து கீட்டன் பதற்றமாக வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக கதவு சாத்திக்கொள்கிறது. அதில் அவரது கோட் மாட்டிக்கொள்கிறது. எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியவில்லை.
நாடகம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன. எனவே, கோட்டைக் கழட்டிப் போட்டுவிட்டு உள்ளாடையுடன் ஓடுகிறார். அந்தப் பரபரப்பிலும் அவரிடம் ஒருவன் ஆட்டோகிராப் கேட்க, அவர் ஓடிக்கொண்டே ஆட்டோகிராப் போடுவது... கண்கலங்க வைக்கும் காமெடி.
மிகச் சிறந்த கலைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகக் கடினமான ஒரு காமெடி படத்தை (Black Comedy) எடுத்திருக்கிறார்கள். அவர்களது உழைப்பு வீண் போகவில்லை என்பது படம் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் விருதுகளின் மூலம் தெளிவாகிறது. சென்ற ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்களில் பேர்ட்மேன் படமும் ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

 நன்றி; இணைய  தளக்குறிப்புகள்