சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 9 மே, 2008

சுப்ரபாரதி மணியன் - கவிதைத் திருவிழா 56

கொலைக் கூடத்திலிருந்து வழிகிறது
இசைசாவின் கடைசி நுனியிலும்
பருகிக்கொள்ளலாம்அதன் துளியை
நிழல் விழும்நிழல் விழும்முன்பு
கழுத்தில் கட்டியக் கயிற்றின்
இருள் படிந்த நிழல்என் கவிதை
உன் கவிதைஎன் தூரிகை
உன் தூரிகைஎன் இசைமீட்டல்
உன் இசைமீட்டல்முட்டாள்களின்
உபதேசம்தான்ஒரு வகையில்
ஆனாலும்காயம் ஆற ஒரு சிறு
துடைப்பு.
***** ***** *****
கனத்த மரக்கட்டைகள்
கூரையாயிருக்கிறது
அதனழகு அழுக்கான
அறைக்குவெள்ளையடித்தது
போலகட்டிலின்மேல்
விரிக்கப் பாய்தான்எந்த
சொகுசுத் துணியையும்
கேட்காதே என்கிறது
அழுக்குத்தலையணைநசுக்கி
எறியப்பட்டதண்ணீர்
பாட்டில்கள் நசுக்கும்
சப்தங்களும்கதவைத் தட்டிக்
கொண்டேயிருக்கின்றன
கதவுபாதுகாப்பானது
அதைவிடப்பாதுகாப்ப்பானது
தட்டப்படுதலின்றுதவிர்க்க
கதவைத் திறந்து வைத்துக்
கொள்வதென்பதுகண்களை
மீடிப்படுக்க கட்டில் இருக்கிறது
.***** ***** *****
விடைபெறாமல் சென்றுவிடுபவர்களைப்
பற்றி கவலையில்லைபிரிவு வார்த்தையைத் தேடித்திரியவேண்டாம்கடைசியாக
எப்படிச் சொல்லிக்கொள்வதுஎன்பது
பற்றி குழப்பம் வேண்டாம்திடுமென
கதவைச் சாத்தாதபடிவிடைபெற்று
விடலாம்தான்ஆனால் வாந்த்தைகளற்ற
விடைபெறலுக்குஅர்த்தம் இருக்குமோ?
பார்வைகள் அதை நிரப்பலாம்
பார்வையற்றோர்சப்தமில்லாமல்
கதவை சாத்த முடியாதுதான்.
***** ***** *****
பயனற்ற பயணம் என்றமுணு
முணுப்பினூடேகாட்சி சிதறலில்
கவியும் பறவைகள்அவற்றின்
கீச்சுக்குரலில் சுதந்திரம்மாண்பு
பறவை சொல்லக்கேட்டுபாதை
மாறணுமா .ஒரு நிமிடம் வெட்கித்தலை
குனிதல் மீறிகீச்சுக்குரலில்இசையின்
தாளம்கண்களை மூடினால்
புரவிகளின்குளம்படிகளோடு
காற்றைக்கிழித்துஒரு பயணம்தாக
சாந்தி தேடும்தொண்டை
***** ***** *****