சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 5 மார்ச், 2024

கூவம் நாவல்/ காவ்யா சண்முகசுந்தரம் ( சுந்தரபாண்டியன் ) காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் நதிகளின் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் மூன்றாவது பகுதியாக அவருடைய சென்னை வாழ்க்கை கூவம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது படிப்பு சார்ந்த சென்னை வாழ்க்கை பிறகு வேலைக்காக அலைவது ஆகியவை இந்த நாவலின் மையத்தில் உள்ளன இந்த நாவலில் சென்னை வாழ்க்கையை பற்றி அனுபவங்களை விரிவாக சொல்லி இருக்கிறார். படிப்பு தாண்டி இலக்கியம், அரசியல் போன்றவற்றினுடைய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. கூவம் எப்படி நாறிக்கொண்டிருந்தது. பழகிய வாழ்க்கையில் நாற்றம் குறைந்து போய் காணப்பட்டது. இது மையமாக இருக்கிறது வழக்கமாய் அவருடைய நாவல்களில் தென்படும் கிண்டலும் கேலியும் அங்கங்கே வந்து போகிறது. பல சமகால எழுத்தாளர்களை, கல்வித்துறை சார்ந்தவர்கள் இந்த நாவலில் சந்திக்கப்படுவது நல்ல விஷயம். தமிழகத்தின் அரசியல் சூழலில் மிக முக்கியமான காலகட்டமான நெருக்கடி நிலை, எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்கள் பதிவாகியுள்ளன நாவலாசிரியர் தன் வேலைக்காக பெங்களூர் செல்லும் விடயம் கடைசி அத்தியாயத்தில் வந்து முடிகிறது.இனி பெங்களூர் அனுபவங்களை அடுத்த நாவலில் எழுதுவார் . பெங்களூர் பா .கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு நாவலை 500 பக்கம் அளவில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரின் பெங்களூர் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். அவை முழுக்க தனி மனித அனுபவங்களாய் இருக்கின்றன, பெங்களூர் வாழ்க்கையின் அரசியல், சரித்திர கலாச்சார அரசியல் சார்ந்த குறிப்புகள் எதுவும் இல்லாமல் அந்த நாவல் நிரம்பியிருந்தது. ஆனால் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் இந்த நாவலில் சென்னை வாழ்க்கையின் சரித்திர கலாச்சார அரசியல் சார்ந்த குறிப்புகள் மற்றும் இலக்கிய குறிப்புகள் விரவிக் கிடைக்கின்றன. இதை வாசகன் சுலபமாக படிக்க ஏதுவாகிறது. ஒரு நாட்குறிப்பேடு சங்கதிகளைப் புரட்டிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இந்த நாவல் தருகிறது. இது மிக எளிமையானது நாவலின் இன்னொரு பக்கத்தை மறுப்பதாகவும் இருக்கிறது. ஆனால் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் அனுபவங்கள் தமிழுக்கு தேவையாக இருக்கின்றன. இலக்கிய ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல விஷயங்களை பதிவு செய்ய இந்த வகை நாவல்கள் அவசியம். இலக்கிய மாணவர்களையும் வாசகர்களையும் குறிப்பிட்ட காலம் சார்ந்த சரித்திர ஏடுகளை புரட்டிப் பார்க்கும் அனுபவத்தை தரும் நாவலாக இது அமைந்துள்ளது. ( காவ்யா பதிப்பகம், விலை ரூபாய் 250 )-- சுப்ரபாதி மணியன்