சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 16 செப்டம்பர், 2023

யாழினி ஸ்ரீ கவிதைகள் யாழினி ஸ்ரீ அவர்களை பற்றி நினைக்கிற போதெல்லாம் அவருடைய திடமான மனமும் தொடர்ந்து செயல்பாடுகளும் பலருக்கு உதாரணங்களாக இருக்கும். பொன்வண்டின் முதுகில் பூமிப்பந்தை சுமக்கும் ஆற்றல் உடல் பலத்தால் வருவதல்ல மனதிடத்தைப் பொறுத்ததே என்பதை அவரின் உள்ளார்ந்தக் குரலாக பலர் எடுத்துக் கொள்வார்கள்.. நானும்.. தேடலை துரிதப்படுத்து என்று அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவர். அவர். எப்போதும் கவிதை உலகில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆறறை கருவறைக்குள் அடைப்பட்டு ஒளிந்து போ என்று அவர் ஒரு கவிதையில் சொன்னாலும் அதை அவருடைய குரலாக எடுத்துக் கொள்ள முடியாது. பலர் கதைகளில் எழுதுகிற போது பல கதாபாத்திரங்கள் வருகிறார்கள், அந்த கதாபாத்திரங்களின் குரல்களாக என்று பல வெளிப்படுகின்றன. அவை எழுத்தாளர்களின் குரல்களாக எடுத்துக் கொள்ள முடியாது அப்படித்தான் கதாபாத்திரங்களின் இயல்புக்கே ஏற்ற அவர்களின் குரலாக எண்ணங்களாக பல வெளிப்படும். அப்படித்தான் இந்த அடைபட்டு ஒழிந்து போ இருக்கிறது ஒரு கோப்பை வாழ்க்கை ஒவ்வொரு மிடறாய் ரசித்து ருசித்து பருகிறேன் என்று அவர் இன்னொரு கவிதையில் சொல்கிறார். அதைத்தான் நான் அவரை சம்பந்தப்படுத்தி வெகுவாக நினைத்துக் கொள்கிறேன். காரணம் வாழ்வை ரசித்து ஒவ்வொரு கணத்தையும் கவிதையாய் நினைப்பதும் கவிதைக்குள் கொண்டு வருவதும் அவருடைய செயல்பாடுகளாக இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் அவர் தொடர்ந்து தன்னை சுற்றி உள்ளவர்களையெல்லாம் எழுத சொல்கிறார். இயங்க சொல்கிறார். இந்த மனம் தேடலை ஊக்குவிக்கும். இவர் பிறரை ஊக்குவிப்பவர் என்ற வகையில் நாம் வாழ்த்துவோம். சுப்ரபாரதிமணியன், திருப்பூர்