சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 16 செப்டம்பர், 2023

தங்க பூபதி திருப்பூர் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களின் நூறாவது நூல் வெளியீட்டுக்கு பாராட்டு விழா திருப்பூர் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களின் நூறாவது நூல் வெளியீட்டுக்கு பாராட்டு விழா ஞாயிறு 3/9/23 அன்று மாலை திருப்பூரில் நடைபெறுகிறது. வாசகர் சிந்தனை பேரவை இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. திருப்பூரில் எழுத்தாளர் சுப்ரபாதி மணியன் 25 நாவல்கள் இருபதுக்கு சிறுகதை தொகுப்புகள் 30 கட்டுரை தோப்புகள் உட்பட 100 நூல்களை வெளியிட்டு இருக்கிறார் ச.மீபத்தில் அவரின் நூறாவது புத்தகமாக “ சிலுவை “என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. அந்த நாவல் 900 பக்கங்கள் கொண்டது .1200 ரூபாய் விலை உள்ளது .அதை சென்னை சேர்ந்த நியூஸ் செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது அவரின் 100 புத்தகங்கள் வெளியீட்டை ஒட்டி அவருக்கு திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை பாராட்டு விழா நடத்துகிறது .திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஒன்பதாவது நிகழ்வு ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க அலுவலக கட்ட்டத்தில் நடைபெறுகிறது அப்போது “விடுதலை வேள்வியில் தமிழகம் “என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தும் எஸ் ஏ முத்து பாரதி அவர்கள் தென்னிந்திய புரட்சி என்ற தலைப்பில் பேசுகிறார் மற்றும் கவிதை வாசிப்பில் காயத்ரி சிவகுமார் அவர்களின் தலைமையில் கவிதை வாசிப்பு நடைபெறுகிறது . இலக்கிய எழுத்ஹ்டு அனுபவம் என்ற தலைப்பில் அழகு பாண்டி அரசப்பன் பேசுகிறார் மற்றும் சுப்ரபாரதிமணியன் சிலுவை என்ற நூறாவது நூலுக்கு பாராட்டும் அவருக்கு சமீபத்தில் திருச்சி சார்ந்த மதிப்பு மிக்க எஸ் ஆர் வி இலக்கிய விருது பெற்றதற்கு பாராட்டும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ஏவிபி குடியிருப்பு நல சங்கம் தலைவர் துரை அவர்களும் செயலாளர் வெள்ளிங்கிரி எவ்வளவு தூரம் ,துணைப் பொதுச் செயலாளர் பிரபு அவர்களும் பொருளாளர் விளங்கும் அவர்களும் துணைத்தலைவர் நடராஜன் அவர்களும் முன்னிலை வைக்கிறார்கள். மற்றும் எழுத்தாளர்கள் பங்குபெறும் புத்தகங்கள் பற்றிய கருத்துரைகள் புத்தக அறிமுக அறிமுகங்கள் நடைபெற உள்ளன பிரதி மாதம்முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த வாசிப்பு இயக்க க் கூட்டம் நடைபெறுகிறது அனைவரையும் இந்த விழாவிற்கு வர தங்க பூபதி அதனுடைய ஒருங்கிணைப்பாளர் தகவல் தந்திருக்கிறார் 9944570352 0 சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல் 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.. “ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/ subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru