சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 16 செப்டம்பர், 2023

2 friends வழக்கறிஞர் ஜீவன் : மாமன்னன் படத்தில் இடம்பெற்ற கவிதைகளில் இவரின் மரக்குதிரை தொகுப்பில் உள்ள ஒரு கவிதையும் முக்கியமானது வழக்கறிஞர் ஜீவன் சமீப காலமாக திருப்பூரில் வசித்து வருகிறார் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற கவிதைகளில் இவரின் மரக்குதிரை தொகுப்பில் உள்ள ஒரு கவிதையும் முக்கியமானது மரக்குதிரை தொகுப்பு தெலுங்கு கவிஞர் நக்னம் முனி அவர்களின் கவிதையை மையமாகக் கொண்டு. ஏகதேசம் அந்த நேரடி மொழிபெயர்ப்பு வித்தியாசமானது. இதைத் தவிர ஜீவன் அவர்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற ஒரு நாவலைக் கூட எழுதியிருக்கிறார் பல மொழிபெயர்ப்புகளையும் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார் சமீப ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் சட்டரீதியான இலவச ஆலோசனை மையம் சார்ந்து ஆங்கில நூல்களையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது முக்கியமானது நண்பர் ஹைதராபாத் முத்துசாமி அவர்கள் இந்த ஆண்டு திருப்பூர் தமிழ் சங்கத்தின் கவிதை பிரிவு பரிசு பெறுகிறார். நான் ஹைதராபாத்தில் இருந்தபோது கனவு இலக்கிய வட்ட கூட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது புத்தகத்தை எடுத்து அறிமுகப்படுத்துவார். அதை சிரத்தியோடு செய்வார். அப்போது கூட மரபுக் கவிதைகளை தான் படிப்பார் கூட்டங்களில் . பலர் கிண்டல் அடிப்பார்கள் இன்னும் மரபு பைத்தியத்தில் இருப்பதாக ஆனால் .அவர் தொடர்ந்து மரபுக் கவிதைகளை ஜீவன் உள்ளதாக ஆக்கி எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் மரபுக் கவிதைகள்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார் அவருடைய பல மரபுக் கவிதைகளை நான் வாய்விட்டு வாசித்து மகிழ்ந்திருக்கிறேன் .திருப்பூர் தமிழ்ச்சங்க கவிதை பிரிவில் ஒரு மரபுக் கவிதைக்கு பரிசளிப்பது இன்னும் பாராட்டக் கூடியதாக இருக்கிறது சுப்ரபாரதி மணியன் கட்டுரையாளர், எழுத்தாளர். நாவல்,சிறுகதை நுால்கள், நாடக தொகுப்பு,கவிதைகள், கட்டு... Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3424185