சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 2 பிப்ரவரி, 2023

சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : முன்னுரை என் முதல் பேட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது என்றால் அது திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழ் முரசு பத்திரிகைக்காக சிங்கப்பூரில் எடுத்த பேட்டி தான் என்பது ஞாபகம் வருகிறது. அப்போது நான் சிங்கப்பூர் உலக புத்தக கண்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். ரெ. பாண்டியன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த சமயம் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் சிங்கப்பூரின் தமிழ் முரசு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர்கள் என்னிடம் ஒரு நேர்காணலை கண்டு அதை அந்த பத்திரிகையின் ஞாயிறு மலரில் வெளியிட்டு இருந்தார். அப்போது அது கவனம் பெற்ற ஒரு நேர்காணலாக அமைந்தது. அதற்கு பின்னால் பல நண்பர்கள், பல இதழ்கள் நேர்காணல்கள் செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் முறையாக நான் தொகுக்கவில்லை. இப்போது இந்த தொகுப்பு முயற்சியில் பொன் குமார் அவர்கள் ஈடுபட்டு ஒத்துழைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நண்பர்களுடன் உரையாடல் தன்மையில் இந்த பேட்டிகள் அமைந்திருக்கின்றன இந்த பதில்கள் எல்லாம் முறையாக எழுத்து வடிவத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் தீவிரமான சிந்தனைகளுக்கு வடிவமைத்து கொண்டு சென்றிருக்கும். ஆனால் அப்போது எதேச்சையாக மனதில் வரும் சிந்தனைகளை பேட்டியின் மூலம் சொன்னதால் பல சமயங்களில் அதெல்லாம் திருப்திகரமாக அமையவில்லை. ஆனாலும் என் சிந்தனைகள் அந்தந்த நேரத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விஷயமாக இந்த நேர்காணல்கள் இருந்திருக்கின்றன. அப்படித்தான் பாலு சத்யா அவர்கள் அமிருதா இதழுகாக எடுத்த நேர்காணலும் வர்ண புகைப்படங்களும் என் மனதில் அப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில எளிமையான நேர்காணல்கள் இந்த தொகுப்பில் இருக்கின்றன. என் படைப்புலகம் பற்றியும், என் தனிப்பட்ட இலக்கிய முயற்சிகள் பற்றியும் சில விவரங்களை தெரிந்து கொள்ள இந்த நேர்காணல்கள் பயன்படலாம், சுப்ரபாதிமணியன், திருப்பூர் பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவுகிறது.பயணம் மனிதர்களைப் பிணைத்திருக்கிறது. கடலும் மலையும் நாடும் கண்டமும் பிரித்தாலும் உலகம் என்பது ஒன்றுதான். அத்தகைய உலகத்தில் வாழும் மனிதர்கள் எல்லோர் வாழ்விலும் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. பயணங்கள் வாழ்வில் வியப்பையும், காதலையும் உருவாக்கும். தேவைகளுக்காக மட்டும் பயணம் செய்யாது மன நிம்மதிக்காக இயற்கையை ரசிக்கவும் பயணங்களை மேற்கொண்டு வாழ்வில் இன்புறுவோமாக! 0