சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 2 பிப்ரவரி, 2023

கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி பிப்ரவரி 2ம் தேதி வரை (இடம் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் ) இதில் கொங்குபகுதியைச் சார்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களின் முக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் தூரிகை சின்னராஜ் வரைந்தவை அவை. இரு முறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கோவை புவியரசு, கோவை ஞானி, பொள்ளாச்சி அம்சப்ரியா, பொள்ளாச்சி வாமனன், திருப்பூர் சுப்ரபாரதிமணியன் ., திருப்பூர் சி. சுப்ரமணியம் உடப்ட 20 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று இந்த ஓவியக் கண்காட்சியை யூத் ராஜ் ( ஐ ஏ எஸ் பயிற்சியாளர் ) துவக்கி வைத்தார். ஓவியர் தூரிகை சின்னராஜ் அவர்களுக்கு சி.சுப்ரமணியம் அவர்கள் ” செந்தமிழ் ஓவியக் கலைஞர்” என்ற பட்டத்தினை வழங்கினார். இக்கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கு வகித்தார் தலைமை வகித்தார் : சி.சுப்ரமணியம் ( நிறுவனத் தலைவர் , திருப்பூர் மக்கள் மாமன்றம் 0 புதிய நூல்கள் அறிமுகம் நடந்தது. 0 திருப்பூர் மோகன் ராஜின் “இனிப்பு சாப்பிடுங்க. சர்க்கரை நோயை வெல்லுங்க” 0 சுப்ரபாரதிமணியனின் “ திரைப்படம் என்னும் சுவாசம் “ 0 கோவை ஆண்ட்ரூசின் “ பசுமை நினைவுகள் “ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. • கனவு/ திருப்பூர் மக்கள் மாமன்றம் ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. ஓவியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலக்கிய சங்கமம் • 22/1/23 ஞாயிறு காலை 10 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் • ஓவியர் தூரிகை சின்னராஜ் வழங்கும் • கொங்கு பகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி 0 புதிய நூல்கள் அறிமுகம் 0 திருப்பூர் மோகன் ராஜின் “இனிப்பு சாப்பிடுங்க. சர்க்கரை நோயை வெல்லுங்க” 0 சுப்ரபாரதிமணியனின் “ திரைப்படம் என்னும் சுவாசம் “ 0 கோவை ஆண்ட்ரூசின் “ பசுமை நினைவுகள் “ • பட்டிமன்றம் (திருப்பூர் மக்கள் மாமன்றம் நிர்வாகிகள் ) • தலைமை: சி.சுப்ரமணியம் ( நிறுவனத் தலைவர் , திருப்பூர் மக்கள் மாமன்றம் • வருக • கனவு/ திருப்பூர் மக்கள் மாமன்றம்