சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 13 ஜனவரி, 2021

திருப்பூர் அழகு பாண்டி அரசப்பனின் தேனீர் உபசரிப்பில்.. கேரளாவில் மலப்புறப்பகுதி ஒரு குக் கிராமத்தில் ஒரு தேனீர் கடை . அது இலக்கிய வாதிகளின் மேடையாகியிருக்கிற அற்புதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள. நூல்கள் படிக்கக் கிடைக்கும். எழுத்தாளர்களின் சந்திப்பு நடக்கும் வாசக சாலை அது. தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மலையாள எழுத்தாளர்கள் அங்கு கூடுவது அங்கு சாதாரணம்.பல பத்திரிக்கைகள் , பருவ இதழ்கள் அந்த தேனீர் கடையைக் கொண்டாடித் தீர்த்து விட்டன. அது போல் அழகு பாண்டி அரசப்பனின் தேனீர் கடை இலக்கியம் பேசவும் அன்போடு எல்லா வித விளிம்பு நிலை மனிதர்களும் உறவாடவும் ஓர் இடம். அவர் தேனீர் உபசரிப்பில் அன்பைப் பகிர்ந்து கொள்வார், அவருக்குக் கிடைக்கிற ஞாயிறு அவருக்கு அபூர்வமானது. வாரம் முழுதும் உழைத்துச் சலித்து பின் ஒரு நாள் ஓய்வு.அந்த ஞாயிறுவை அவர் எப்போதும் குடும்பத்தோடும் இலக்கிய நண்பர்களின் கூட்டங்களோடும் கழிப்பார். ” ஞாயிறு போதும் “ என்றொரு அவரின் கவிதை இருக்கிறது. ஆனால் அவரின் வாசிப்புக்கும் எழுத்துப் பயிற்சிக்கும் பல தொடர் ஞாயிறுகள் தேவை. அது போன்ற தொரு தொடர் கரோனா விடுமுறையில் அவர் தொடர்ந்து எழுதிய வாய்மொழியிலான கதைகளின் பாங்கு சிலிர்க்கவைக்கிறது. எத்தனை எத்தனையோ மனிதர்கள். அவர்களின் அன்பு உள்ளங்கள். துயரங்களை மீறி மனிதத்தைக் கொண்டாடும் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் சிறுகதைப்பணி இத்தொகுப்பின் கவிதைகளுக்கு முன் பிரமாண்டமானதுதான். அன்பாக பழகுவது அம்மா தொடங்கி குடும்ப உறவினர்களீடம் மட்டும்தானா. உறவினர்களிடம் மட்டும்தானா. .. உலகம் முழுமைக்குமான நேசக்கரம் நீட்டல் இந்தக் கவிதைகளிலும் ஒளிந்திருக்கிறது.. இப்போது தேனீர் கடைக்காரர் . முன்பு பனியன் கம்பனி தொழிலாளி. தொழில் எதுவாக இருந்தாலும் அவரின் முகம் ஒன்றுதான். கவிதையைக்காட்டும் முகம் . .அன்பை விரிக்கும் முகம். அந்த அன்பு எழுத்தாளர்களென்றால் இன்னும் விரியும். இவ்வாண்டு திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வின் போது தன் மகள் கைகளில் பூக்களை அள்ளி எழுத்தாளர்களுக்குப் கேடயமும் பொன்னாடையும் புத்தகங்களும் தரப்பட்ட போது தந்து மலரச் செய்த அற்புதம் தந்த நெகிழ்வு ,. அந்த நெகிழ்வை இத் தொகுப்பின் பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இப்போது சிறுகதைகளில் அவர் பயன்படுத்தும் வட்டார வாய்மொழி வரலாற்று நடையில் பத்து பைசா, அடிச்சிறுக்கி போன்றக் கவிதைகளும் அமைந்துள்ளது. நீ இல்லாத போதுதான் புரிகிறது உன் இல்லாத ரகசியம் என்றொரு வரி அவரின் கவிதைகளுக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த ஒளிதல் விளையாட்டிலிருந்து விலகி தன்னை வெளிப்படுத்த இவ்வளவு தாமதமாயிருக்கிறது என்பது தான் சிறு வருத்தம் அவர் தொடர்ந்து இலக்கிய உலகிலும் செயல்படுதல் அவரின் தேனீர் கடையின் சூழல் போல் தொடர வேண்டும் - சுப்ரபாரதிமணியன், திருப்பூர்