சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 9 பிப்ரவரி, 2019



என்சிபிஎச் வெளியீடு
காற்றில் கலந்த பேரோசை அடைபட்ட காகிதக்குப்பிகள்

:                        த ஸ்டாலின் குணசேகரன் கட்டுரைகள் -சுப்ரபாரதிமணியன்
பொதிகைத் தொலைக்காட்சியில் “ தமிழ் விருந்து “ என்றப் பகுதியில்  66 நாட்கள் பேசிய  உரைககளின் கட்டுரை வடிவம் இந்நூல்.அரசியல்,, அறிவியல், அறவியல், வரலாறு, கல்வி குறித்தவையும் , முக்கிய ஆளுமைகள் பற்றியும் உள்ள  இக்கட்டுரைகள் கவிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள், நாடகச் சிற்பிகள், புத்தகங்கள் பற்றியத் தலைப்புகளில் அமைந்துள்ளன. எட்டு நிமிட உரைகள் நாலு பக்க கட்டுரைகளாகியிருக்கின்றன.தொலைக்காட்சியில் பேசுவது ஒரு வகை சாசகம். குறிப்பிட்ட நேரத்துள் பேச வேண்டியதைப் பேசி விடவேண்டும். மேடைப்பேச்சில் இருக்கும் விஸ்தாரம் இதில் அகப்படாது. தமிழ் சின்னத்திரை தொடர்கள் ஒவ்வொரு  பாகத்தை இழுத்தடிப்பது போல்  பேச்சை இழுத்தடிப்பவர்கள் பலர் உண்டு. இந்த இழுத்தடித்து நீட்டிப் பேசுவதில் வல்லவர் த ஸ்டாலின் குணசேகரன். அவருக்கு வரவேற்புரை ஆனாலும், நன்றியுரை ஆனாலும், சொற்பொழிவென்றாலும் ஒரே கால அளவுதான் அவருக்கு. அவரின் நேரம் காட்டிப் பேசியதை  இறுக்கமான அளவில் கட்டுரையாக்கியிருப்பது சாதனைதான்.
வெகுசன சிந்தனைக்கு விருது போடும் விசயங்கள் அவருக்கு அத்துப்படி. ஆனால் தேடிக்கண்டு பிடிக்கும் முத்துக்களை தீவிரமாக மூழ்கிக்கொண்டெடுத்துக் கோர்த்திருப்பதில் சாதனை அம்சங்கள் உள்ளன.அதில் நதி நீ இணைப்பின் முன்னொடியான காளிங்கராயன்,ஆங்கிலியர் அந்தாதி எழுதிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,மீன் மார்க்கெட்டில் திருமணம் அம்பேத்கார் , பதுங்கு குழியில் எழுத்து வேள்வி வெ.சாமிநாத சர்மா, இங்கிலாந்து இளவரசியும் இசைப்பேரரசியும் சுந்தரம்மாள் போன்றக்கட்டுரைகள் அவ்வகையிலானவை.விபுலானந்த அடிகள், ஆர்கே சண்முகம் செட்டியார், அப்துல்கலாம், ம.பொ. சி போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட ஆளுமைகளின் சிறப்பமசங்களை விளக்கும் கட்டுரைகள் பொது வாசகனுக்குத் தீனி போடுபவை. தொமுசி ரகுநாதன் ” பஞ்சும் பசியும் “  நாவலை எழுதுகையில் கைலாசமுதலியார் என்ற பாத்திரம் இறந்ததால் தேம்பித்தேம்பி அழுததை  வாசிக்கிறவர்கள் அழுகிற அளவில் விவரித்திருக்கிறார். அவர் நவீன இலக்கியத்தில் கண்ணீர் வரவழைக்கும் நூல்களையும் இது போல் அறிமுகப்படுத்தலாம். ஜெயகாந்தனுக்குப் பின்னால் நகராமல் இருப்பது நியாயமல்லவே.தமிழ்சமூகத்தின் பெருமைகளைப் பறை சாற்றுபவை இக்கட்டுரைகள். நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதையும் காட்டுபவை கூட
சுப்ரபாரதிமணியன்

 ( என்சிபிஎச் வெளியீடு, 274 பக்கங்கள், ரூ230  )