சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 25 அக்டோபர், 2015

  அரவணைப்பு : சுப்ரபாரதிமணியன்


 அந்த இரட்டைச்சக்கர வாகனம் அவளை இறக்கி விட்டுப் போனது. அவள் 1 வெகு பரபரப்புடன், கழுத்தில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்து விட்டு வீட்டுகுள் நுழைந்தாள். அவள் 2 கோபப்பார்வையுடன் பார்த்தாள். அவள் 1 உடம்பை ஒடுங்கிக் கொண்டு நின்றாள். அவள் கால்கள் உட்கார எத்தனித்து இயல்பாக்கிக் கொண்டது. உடம்பின் வலியை அவள் முகம் தேக்கிக் கொண்டிருந்தது.
“ அவன் யாரு ..உன்னை டிராப் பண்ணினவன் “
“ ஆபீஸ்லே கூட வேலை செய்யறவர்
“ என்ன பெரிய மரியாதை வேண்டிக்கெடக்கு “
“ எவ்வளவு வருசமாத் தெரியும்
மூணு வருசமாத்தா . அந்த ஆபீஸ் போனப்பறம் “
“அவன் கூட உறவு வெச்சிருக்கியா.. படுத்திருக்கியா “
“ இல்லெ.”  
உணமையைச் சொல்லு. “
“ இல்லெ “
“ ரெண்டு பேர்த்துக்கும் எடையிலான நெருக்கத்தைப் பாக்கறப்போ நல்ல பழக்கம் இருக்குமுன்னு தோணுது “
“ அப்பிடியெல்லா இல்லே. “
“பொய் சொல்றே. பொய் சொல்றவங்களெக் கண்டா எனக்குப் புடிக்காது. நீ வெளியே போ “
“ வெளியே போன்னா எங்க போவேன் இந்த ராத்திரியிலே.
“எங்காச்சும் போ. கோமிலே உன் பிரண்ட்ஸ் இல்லையா. ஹாஸ்டல்லே உங்க பிரண்ட்ஸ் இல்லையா. இல்லை இப்போ நீ எவன் கூட வந்தியோ அவன் இருக்கற எட்த்துக்குப் போ “
“ அதெப்படி போக முடியும் “
“ அவன் கூட உறவு வெச்சிருக்கியா ... படுத்திருக்கியே. போக வேண்டியதுதானே. எத்தனை தரம் படுத்திருக்கே. உண்மையைச் சொல்லு. பொய் சொன்னா புடிக்காது எனக்கு  “
“ நாலு தரம். உங்க கூட வந்தப்புறம் அது மாதிரி இல்லெ..
“என்னாச்சு..
“புடிக்காமெப் போச்சு. “
“ அப்போ.. நான் உனக்கு புடிக்காமெப் போயிட்டா, கசந்து போயிட்டா  வேறொருத்தன் கிட்டையோ, வேறொருத்திகிட்டையோ    போயிருவே ..இல்லையா.. அப்பிடித்தானெ.
“ அப்பிடியெல்லா இல்லெ. உஙக கிட்ட வந்தப்புறம் வேற எந்தப் பழக்கமும் இல்லெ.
“ உட்காராதே..எந்திரி. பொய் பேசற நீ எங்கூட இருக்க்க் கூடாது.
“ ரொம்ப கால் வலிக்குது. அதுதா உட்கார்ரன். இனி யார்கிட்டையும் தொடர்பு இருக்காது.
“ இல்லே நீ போயிரு.. நீ பொய் சொல்றே “
“ இல்லே. பொய் ஒன்னும் இல்லே. நம்புஙக. “
அவள்1 நெருங்கி வந்து கட்டிக்ப்பிடித்துத்  தோளில் சாய்ந்தாள். அவள்2 அவளை சற்றே தள்ளி விட்டாள். அவள் 1 சற்றே முன் நகர்ந்து போனவள் மீண்டும் அவள்  தோளைப்பிடித்தாள். பின்புறத்தை கட்டிக் கொண்டாள். அவள் 2 சுவரைப் பார்த்தபடி  நின்றாள். அணைப்பு இதம் தருவது போல் நின்றார்கள்.வாசலுக்கு வெளியே புடுபுடுத்து ஓடிய வாகனங்களின் அபரிமிதமான சப்தம்   அவர்களைப் பிரிக்க முடியவில்லை.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,

திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com