சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 25 அக்டோபர், 2015


சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும்“                                                                         ( பயண கட்டுரைகள் நூல் 

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் சார்பில் 24/10/15 மாலை 7 மணிக்கு   அய்பெரும் விழா மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர்,திருப்பூரில் நடைபெற்றது. .
 ரங்கசாமி (தலைவர் , மத்திய அரிமா சங்கம் ) தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் செயல் அறிக்கை தந்தார். ஆசிரியர்கள் தின விழாவை ஒட்டி சண்முகசுந்தரம்( சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ), பேராசிரியர்  மோகன்குமார்  ஆகியோர்  கவுரவிக்கப்பட்டார்கள்.அவர்கள் ஏற்புரை வழங்கினர்.

சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும் ” ( பயணக்கட்டுரைகள் ) நூலை மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர்  திருநாவுக்கரசு IPS    வெளியிட்டுப் பேசினார். “ எட்டுத்திக்கும் ” ( பயணக்கட்டுரைகள்-ரூ110 என்சிபிஎச் , சென்னை வெளியீடு  ).
 முன்னதாக ஆர்.திருநாவுக்கரசு IPS    அவர்களின் (( “ உன்னுள் யுத்தம்  செய் “  ரூ160 தமிழ் வாசல் பதிப்பகம், மதுரை ) நூலை சுப்ரபாரதிமணியன் அறிமுகப்படுத்திப் பேசினார்.

 திருநாவுக்கரசு IPS  பேசியதிலிருந்து :  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இலட்சியக்கனவோடு இருக்கும் மாணவர்களின் கனவுகள் பிற்காலத்தில் சிதைவதற்கு அடிப்படைக்காரணம் கல்லூரியிலும் , பள்ளிகளிலும் படித்தப் புத்தகங்களைக் காட்டிலும் ஒரு பணிக்கென வரும்போது அங்கே ஒரு மாணவனிடம்  எதிர்பார்க்கப்படுவது தனி மனித மேம்பாட்டுத்திறன். எண்ணங்கள் ஒருமிக்கப்படும்போது  வாழ்க்கை வளம் பெறும். மிகச்சிறந்த லட்சியங்களைக் கொண்ட  எத்தனையோ மாணவர்களின் கனவுகள் பிற்காலத்தில் நீர்க்குமிழியாய் உடைவதைப் பார்க்கின்ற போது கல்வி என்பது புத்தகம் தாண்டிய நடை முறை அறிவு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். “
                                                                                                                                         முன்னதாக மெஜஸ்டிக் கந்தசாமி , தர்மர்ரஜ் உட்பட பலர் பேசினர் .  

நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  
செய்தி: ராஜராஜன், மேலாளர் திருப்பூர் மத்திய அரிமா சங்கம். (படத்தில் சண்முகசுந்தரம், மெஜஸ்டி கந்தசாமி, திருநாவுக்கரசு , சுப்ரபாரதிமணியன், ரங்கசாமி  )