சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 28 ஆகஸ்ட், 2013

நெகிழி (பிளாஸ்டிக்) குப்பை

நெகிழி (பிளாஸ்டிக்) குப்பை

'உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கை' என்பது இன்றைக்கு முக்கியத்துவம் கொண்ட விடயமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீரை மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் அவர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பது இக்கோட்பாடாகும்.

            எந்தவகைக் குப்பை எதிலிருந்து வருகிறதோ அதை கழித்துக்கட்டும் பொறுப்பினையும் உற்பத்தியாளரே ஏற்க வேண்டும் என்கிறதாகிறது. பொருளை உற்பத்தி செய்வோர் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பொருளின் கழிவுப் பொருள் ஏதாகிலும் திரும்ப சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான செலவையும் பொருளின் உற்பத்தி விலையிலேயே சேர்த்துக் கொள்ளலாம்.

            ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் மாபெரும் ஆபத்தாக விளங்கி வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இது அதன் பயன்பாட்டில் உச்ச நிலையை அடைந்துவிட்டது. இது மண்ணில் மட்கி அழியாத தன்மை கொண்டது என்பதால் சுற்றுச் சூழலுக்கு பெரும் சவாலாய் அமைந்துள்ளது.

            மக்காத பிளாஸ்டிக் பொருட்களைத் தூக்கி எறியும்போது கழிவு நீர்க் குழாய்களை அடைத்து நோய் பரப்பும் பூச்சிகளைப் பெருக்குகின்றன. இக்குப்பையை எரிப்பதால் வெளியாகும் நச்சு வாயு புற்று நோய், ஆண்மைக் குறைவு, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அவை சுலபமாக விசையான காற்றில் பறந்து செல்வதால் வனவிலங்குகள், பறவைகள், கால்நடைகள் உண்டு உயிரை விடுகின்றன. கடலில் சேரும் இவை கடல் வாழ் உயிரினங்களையும், கடல் பறவைகளையும் அழிக்கின்றன. விவசாய நிலத்தில் பரவுபவை நீர் மற்றும் காற்று பரவுவதை தடுக்கின்றன. மண் வாழும் நுண்ணுயிர்களும், தாவரங்களின் வேர்ப்பகுதிகளும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தட்டுபாட்டிற்கு பெட்ரோலியத்தை மூலப்பொருளாகக் கொண்டு இவை தயாரிக்கப்படுவதும் ஒரு காரணமாகிறது. மொத்த பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காக பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. பிளாஸ்டிக் தொழிலில் 1 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது.

            பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்தலும் பிளாஸ்டிற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்துவதும், அவசியமாகிறது. மறு சுழற்சி முறைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் நிரந்தரக் குப்பைகளும் அதிகரிக்கின்றன. அது பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இல்லை.

            பிளாஸ்டிக் பல் வகைகளில் விஸ்வரூபம் எடுக்கக் கூடியதாகும். பாலிதீன் எனப்படும் வகை பிளாஸ்டிக் பொட்டலத் தேவைக்காக அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது. பி.வி.சி கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கிறது. உரம் மாவு, சிமெண்ட் நிரப்பப்படும் பைகள் இன்னொரு விதம். தெர்மாகோல், ஸ்டைரோபோம் வகைகள் இன்று வெகுவானப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. பாலியுரிதேன் வகை மெத்தைகளுக்காக அதிகம் பயன்படுகிறது. பாலிதீனுக்கு எதிராக துணிப்பைகள், கண்ணாடி பாட்டில், தகரம், பீங்கான் போன்றவை மாற்றாகப் பயன்படும். பி.வி.சிக்கு மாற்றாக சிமெண்ட் குழாய்கள், இரும்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தலாம். பாலியுரிதேன் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாது. ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் இலவம் பஞ்சு, சணல், பருத்திப் பஞ்சை இதற்கு மாற்றாக்கலாம்.

            பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்க அவற்றைக் குறைப்பது, மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது, மறு சுழற்சி செய்வது என்று கடைபிடிக்கலாம். ஒரு முறை மட்டும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம். காகிதத்தின் இரு பக்கங்களையும் பயன்படுத்துவது நல்லது. மட்கும் பொருட்களை உரமாக்க ஆரம்பிக்கலாம் குப்பையை முறையாக தகுந்த இடங்களுக்குக் கொண்டு செல்வதும் அவற்றை எரித்து மாசுபாடாக்காமல் இருப்பதும் நல்லது.

            தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் சட்டம் 2002 ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்துவது பற்றி பல தண்டனைகளையும் அறிவித்தது. அதுவும் பிளாஸ்டிக் தொழில்துறையினர் தந்த வற்புறுத்தலால் அடுத்த ஆண்டிலேயே அரசு திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோய், மலட்டுத் தன்மை, ஹார்மோன் கோளாறு, நரம்பு மண்டலக் கோளாறுகள் நோய்களுக்கு பிளாஸ்டிக் கழிவு காரணமாக இருக்கிறது.

            உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பை தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது. இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிற்தாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை இந்த தீவு சொல்கிறது. பிளாஸ்டிக்கை நெகிழி என்ற சொல்லின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். எங்காவது செல்லும்போது ஒரு துணிப்பையைக் கொண்டு செல்லலாம். ஆயிரம் நெகிழிப் பைகளைத் தவிர்த்ததாக அது அமையும்.
>4தமிழ்மீடியாவுக்காக சுப்பிரபாரதிமணியன்