சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 26 ஆகஸ்ட், 2013



ம.காமுத்துரை படைப்புலகம் 
கோவை இலக்கியச் சந்திப்பின் 33 வது அமர்வு ம.காமுத்துரையின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்காக அமைந்திருந்தது. சுப்ரபாரதிமணியன் தேனி மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவு செய்து வருபவர். 130 சிறுகதைகள் ( 10 தொகுப்புகள் ), 3 நாவல்கள் என அவரின் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.அவர் பணி புரிந்த வெவ்வேறு பணிகளும், தேனி மக்களின் அனுபவங்களும் அவரின் படைப்புகளில் நேர்மையானப் பதிவுகளாய் வளம் சேர்த்திருக்கிறது என்று அவரின் படைப்புகளின் பொதுத் தன்மை  குறித்துப் பேசினார்.அவரின் “ கோட்டை வீடு “ , மில்நாவல்கள் பற்றி ஓசை அவைநாயகன் பேசினார்.  நவீன தொழில்மயமாக்கலில் மில்கள் நசிந்து வேறு உருவம் அடைந்து விட்டன. மில்களின் வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்ய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மீதான சுரண்டலை   மில் வெளிப்படுத்தியது. கோட்டை வீடு நாவல் முதிய தலைமுறையின் பிரதிநிதியான ஆயாவின் உடல் நலக்குறைவும், மருத்துவமனை அனுபவங்களும், நினைவுகளும், இரவு நேரத்தில் அவளின் மனப்பிறழ்வான வெளிப்பாடும், அவள் சொல்லும் கதைகளும், சுற்றியுள்ள உறவுகளின் விசித்திரங்களும் என்று பின்னப்பட்டது. அம்மனிதர்களின் லவுகீக வாழ்க்கையும், ஆன்மீக எண்ணங்களுமாக அந்நாவல் நிரம்பி நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை கொண்டிருக்கிறது என்றார்.      முற்றாத இரவொன்றில் நாவல் பற்றி சந்திரகுமார் பேசினார். காதலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதுக்களனாக இருந்தது. இயற்கை வர்ணனைகளும். கிராம மனிதர்களும், ஒரே  ஜாதிக்குள் நிகழும் காதல் என்றாலும் மனித மனங்கள் எதிர் கொள்ளும் விசித்திரப்போக்குகளும் உளவியல் தன்மையோடு சொல்லப்பட்ட சிறந்த உளவியல் பாங்கு கொண்ட நாவல் என்றார். ஜாதி வர்க்க அடையாளத்தோடு இயங்குவதையும், பொருளாதார அந்தஸ்தைத் தாண்டி இயங்கும் ஜாதியின் தன்மை பற்றியும் இந்நாவல் வெகு நுணுக்கமாக எழுதப்பட்டிருப்பதை விவரித்தார். அவரின் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து அன்பு சிவா, முத்து உரையாற்றினர்.எளிமையான ஆனால் வலிமையான உரையாடல் தளங்கள் இவரின் பலமாக இருக்கிறது. பல்வேறு விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அதில் வெளிப்பட்டிருக்கிது. வர்க்கமும், ஜாதியும் செயல்படும் சரியான தளங்கள பற்றி சிறுகதைகள் நுணுக்கமாகப் பேசுவதை விவரித்தனர்.“ கோட்டை வீடு “ நாவலில் வரும் ஆயாவின் உடம்பில் பல உருவங்கள் பச்சை குத்தலில்  பதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி சிறுவர்கள் கேட்கிறார்கள். ஸ்கூல் ரப்பரை வைத்து அழித்துப் பார்க்கிறார்கள்.  இது எதுக்கு “  “ செத்து சிவ லோகம் போன பின் அங்க் இருக்கற சிவன் எனக்கு என்ன கொண்டாந்தே     என்று கேட்பான். அவனுக்கும்க் குடுக்கறதுக்கு இங்கிருந்து ஏதாச்சிம் சொமந்திட்டுப் போக முடியுமா. இந்தப் பச்செ குத்தலெத்தா குடுக்கணும். இந்தா உனக்கு புலி, உனக்கு சிங்கம்ன்னு... அதுக்குத்தா  இதெல்லாம் ..   அந்தபச்சை குத்தல்கள் போல தேனி மாவட்ட மக்களின் வாழ்க்கையை அழிக்க முடியாத இலக்கியச் சித்திரங்கள்  ஆக்கிய காமுத்துரையின் படைப்புகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.ஏற்புரை நிகழ்த்திய காமுத்துரை 10 வகுப்பே படித்த தனக்கு பல தொழில்கள் செய்த அனுபவங்களும், சுற்றியிருக்கும் மக்களின் அனுபவங்களும் படைப்புகளாக சுலபமாக வெளிப்படுவதாகச் சொன்னார். கூட்டத்தில் காப்ரியாமார்க்க்ஸின் “  தனிமையின் நூறு ஆண்டுகள் “ நாவல் பற்றி சுப்ரபாரதிமணியன், 15 வயதுப் பெண்  சிரியா சேக்சரியா எழுதிய  ஒன் “ ஆங்கில நாவல் பற்றி மீனாட்சி சுந்தரம், அவ்வை டிகே சண்முகம் நூற்றாண்டை ஒட்டி  சிவதாசன் ஆகியோர் பேசினர். கூட்ட ஏற்பாடுகளை இளஞ்சேரல், பொன் இளவேனில், தியாகு ஆகியோர் செய்திருந்தனர்.
                                                      

செய்தி: கனவு