சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 அக்டோபர், 2023

அறிவுச்செல்வன் நூல்கள் நீரா நீர் வார்த்தீர் கட்டுரைகள் ஒரு கட்டுரை எழுத காரணமாக அறிவு பகிர்வு இரண்டு ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் இரண்டும் இருந்தால் ஒரே கல்லில் இரு மாங்காய். கவிதையோ கதையோ கற்பனை அடித்தளமாக கொண்டு கட்டமைத்து விடலாம். கட்டுரையின் திசை அதற்கு எதிரானது .ஆதாரங்கள் கூறுவது அறிவியல் ஆனது எழுதப்பட்ட வரிகளை தாண்டி குறியீடோ ஏதுமற்ற பேசுபொருள் பற்றிய வெள்ளை அறிக்கை. இது புத்திசாலி வாசகர் வந்து போகும் பொழுது போகும் போர் இது என்று அறிவுச்செல்வன் பொதுவாக கட்டுரைகள் பற்றிச் சொல்கிறார் இந்த கட்டுரைகளில் வழக்கம் போல் அவருடைய பல அனுபவங்களை பிழிந்து தந்திருக்கிறார். ஆறாகட்டும் தனியாளாகட்டும்., தேனி ஆகட்டும் சாதாரண ஈச்சம்பாய் ஆகட்டும் இவருக்கு எல்லாமே கட்டுரைகளுக்கான விஷயங்களாகின்றன. அவற்றை சொல்லும்போது தன் அனுபவங்களை உள்ளே வைக்கிறார் பொதுவான அப்பிராயங்களை வைக்கிறார். அவற்றின் உடையே கொஞ்சம் கிண்டலும் நவீன இலக்கியம் சார்ந்த சிக்கல்களும் மரபு இலக்கியம் சார்ந்த பிழியும் எல்லாம் வந்து விடுகின்றன. எல்லா விஷயங்களையும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு அக்கறையில் இந்த கட்டுரைகள் அமைந்திருக்கிறது. நாம் இந்த உரை கட்டிடங்கள் மூலம் எல்லா வாசல்களுக்கும் சுலபமாக திறக்க வழி சொல்ல கூடியவை விண்ணாசை வெளியிட்டகம் மணப்பாறை திருச்சி மாவட்டம் அறிவுச்செல்வன் நூல்கள் 2 குடும்பத்தில் ஒரு குதிரை அறிவுச்செல்வன் குறுநாவல்கள் அறிவுச்செல்வன் நாவல் தான் எழுதவில்லை அதற்கான நல்ல முத்திரைகளாக பல குறுந்தது குருநாவல்களை எழுதிவிட்டார் அந்த நாவல் எல்லாம் நீட்சி செய்து கொண்டு போய் நாவல் தளத்தில் நிறுத்தலாம் சென்ற முறை அவள் அவர் வெளியிட்டிருந்த குறு நாவல் தொகுப்பில் இப்படித்தான் 140 பக்கங்களுக்கு கூட ஒரு குரு நாவல் இருந்தது. அதை கூட நாவல் என்ற வகையில் கூட கொண்டு செல்லலாம் ஆனால் அவர் அது குறுநாவல் என்று அடம்பிடித்து வைத்திருக்கிறார் இதில் உள்ள கதைகள் நல்ல குறுந்கதைகளாக சிறப்பாக வந்திருக்கின்றன. குடும்பத்தில் ஒரு குதிரை என்று கார் வாங்கி பயணப்பட்டு அனுபவத்தை சொல்கிறார். தீவட்டி கொள்ளை என்பது நமக்கு தாத்தா சொன்ன கதைகள் இது ஒரு பகுதியாக இருக்கிறது, மாக்கோலும் மனக்கோலமும் என்ற கதையில் கோலம் போடுவதில் அக்கறை கொண்ட ஒரு பெண் நகர வாழ்க்கையில் அப்பார்ட்மெண்டில் கோலம் போட முடியாத ஒரு சிரமத்தை ஒரு சிறப்பாக சொல்லி இருக்கிறார். அருமையான நாவல் கூத்தாடிகள் பிழைப்பு என்பது சாதாரணமானது ஆனால் அவர்களும் இருக்கின்ற திடமும் மனோ தைரியமும் மனிதாபிமானமும் சிறந்தது. இதை இவர் இந்த கதையில் சொல்கிறார் இந்த தொகுப்பு இந்த கதைகளை வேறு திசையில் இருந்து கூட நாம் நாவலாக்க சொல்லலாம் .ஆனால் நாவல் என்ற வடிவத்தில் அவர் கொண்டு வர இன்னும் தயக்கம் இருக்கிறது அதை அவர் விடுவித்து செய்ய வேண்டும் நல்ல நாவல்கள் அவரிடம் உருவாகும் விண்ணாசை வெளியிட்டகம் மணப்பாறை திருச்சி மாவட்டம்