சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 9 ஜனவரி, 2023

பத்திரிக்கை செய்தி “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் :: பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று ” இலங்கையில் போர்க்காலங்களில் பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. .ஈழத் தமிழர்களின் உயிர் காத்த வீடு பதுங்கு குழி என்று சொல்லலாம் . பதுங்கு குழிக்கு போவதற்கு முன்னால் எல்லோரையும் வா வா என்று அழைக்கபடியே ஓடுவோம் .அங்கு ,நாய் ,பூனை, ஆடு மாடு ,கோழிகளும் பதுங்கிக் கொள்ளும் ,மாடுகள் உள்ளே போக முடியாத நிலையில் பதுங்கு குழி வாசலில் தலைகளை மட்டும் உள்ளே விட்டவாறு கத்திக் கொண்டே இருக்கும் வீதிகள் , பாடசாலைகள் , சந்தைகள், மருத்துவமனைகள்,கோவில்கள் என்று பதுங்கு குழிகள் இல்லாத இடமே இருக்கவில்லை .விமான சத்தம் அருகில் கேட்டதும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கொண்டு கட்டிப்பிடித்துக் கொள்வோம் அந்தப் பதுங்கு குழிக்குள் .. விமானம் போய்விட்டது என்று சொன்னதன் பிறகு பிடிகளை தளர்த்திக் கொள்வோம் ..அதன் பின்னர்தான் யார் யாரை கட்டிப்பிடித்தார் என்று தெரியும் ..அந்த விமானத்தின் சத்தத்தில் அதிர்வில் ஆண் பெண் வயது வேறுபாடு இன்றி அவர்களுக்கு தெரியாமல் மலம் சலம் கழித்து இருப்பார்கள். ..விமானம் போனபின்பு நாற்றம் வருது , நாற்றம் வருது என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் எங்கிருந்து வருது என்று யாருக்கும் தெரியாது ,வெளியே வந்ததன் பின்தான் தெரியும், அவரவர் உடம்பிலிருந்து தான் நாற்றம் என்று . இந்த சூழலிலும் வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்ட பின்னர் எதை தள்ளி போட முடியும் என்ற சூழலில் போர் தாக்குதல்களும் மக்களுக்கு பழகிப் போகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு வேலைகளை செய்ய மக்களும் பழகிக் கொண்டார்கள் . இந்த பதுங்கு குழு வாழ்க்கையோடு தான் நாங்கள் எல்லாம் கல்வி கற்க வேண்டி இருந்தது .கல்வி மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் அவசியம்” கூட்டத்திற்கு மக்கள் மாமன்ற தலைவர் சி சுப்பிரமணியன் தலைமை வகித்தார் ..உடுமலை சார்ந்த தோழன் ராசா ,இயல் .கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் .இன்சூரன்ஸ் குமார் அவர்கள் கனவு விருதை உடுமலை இளைய பாரதி அவர்களுக்கு வழங்கினார் . . முன்னதாக நாதன் ரகுநாதன் , ஆனந்தன் , தங்கவேல் ஆகியோர் பங்கு பெற்ற வழக்காடு மன்றம் சிறப்பாக நடைபெற்றது “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் ::