சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 9 ஜனவரி, 2023

உயிர்மை பதிப்பகம் வெளியீடு ” திசையொன்று.. ” நாவல் அனுபவம் - சுப்ரபாரதி மணியன் நான் பயணிப்பதில் ஆர்வம் கொண்டவன். அவற்றை பதிவு செய்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டவன் குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஜெர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றது என்னுடைய முதல் வெளிநாட்டு பயணமாக அமைந்தது. அதன் பின்னால் சுமார் 20 நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி இருக்கிறேன். பல நூல் வடிவம் பெற்று இருக்கின்றன அந்த வகையில் சென்றாண்டின் மத்தியில் ஜோடான் பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து நாடுகளுக்கு சென்று வந்ததை கூட ஒரு நூலாக்கி இருக்கிறேன். பயணங்கள் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆசுவாசம் கொள்ளச் செய்கின்றன அந்த வகையில் தான் சமீபத்தில் நான் சென்று வந்ததில் கேரளா அட்டப்பாடியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஹம்பி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இது போன்ற ஒரு பயணம் மூணார் சென்றிருந்தபோது கிடைத்த அனுபவங்களை ஒரு நாவலாக இதில் பதிவு செய்திருக்கிறேன். பயண அனுபவங்களை நாவலாக்கிற முதல் முயற்சியாக நான் இதை செய்திருக்கிறேன் மூணாறுக்கு பல நண்பர்களுடன் சென்றேன், தம்பதிகள் ஆண்கள், பெண்கள் தனியாக வந்தவர்கள் உட்பட ஒரு திருநங்கை கூட எங்களுடைய குழுவில் இருந்தார். அந்த பயண அனுபவத்தில் மூணாறில் தங்கிய அனுபவங்கள், சக பயணிகளுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள் இவைதான் இந்த நாவலின் மையமாக இருக்கிறது, முக்கியமாக ஒரு தம்பதிய,ர் ஆனால் கணவருக்கு சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லை, குழந்தை இல்லை என்பதால் அவரின் மனைவியிடம் இருந்து பிரிந்து இருக்கிறார் இருவரும் இந்த பயணத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள் ஆனால் அந்த பயணம் ஒன்றும் அவர்களை சேர்த்து விடவில்லை, அதில் அவன் தவித்துப் போகிறார் இந்த நிலையில் இருந்து தன்னை ஏதாவது விடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், இந்த யதார்த்த தளத்தில் இருந்து வேறு நிலைக்குப் பயணப்பட்டு இருக்கிற உயர் நிலைகளை பற்றியும் தெரிந்து கொள்கிறார். வழக்கமான இயந்திரத்தனமான வாழ்க்கை மீறி உழைப்பு மட்டுமே உதவி செய்யும் என்று நம்புகிற ஒரு உலகம். இயற்கையை நேசித்து இயறகை உணவுடன் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு முகாமிடம் என்பது போல சில லட்சிய இடங்களும் அவரின் அனுபவங்கள் என வந்து விடுகின்றன. கதாபாத்திரங்கள் என்று சொன்னால் கூட வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் இளைஞர்கள், இளைஞிகள், தம்பதியர்கள் வெவ்வேறு வேலைகளில் இருந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பணியாளரகள் என்று இவர்கள் உலகத்துக்குள் இருக்கிற மனித உறவுகளைப் பற்றி இதில் விரிவாகவே பேசி இருக்கிறேன். தீங்கொன்று இருக்கிறபோது அதற்கு விடிவென்று இருக்கும் அல்லவா. அப்படித்தான் இந்த இறுதியில் நடைபெறுகிற ஒரு விபத்து கூட அதனுடைய அடையாளமாக இருக்கிறது பயணங்கள் எப்போதும் நம்மை ஆசுவாசப்படித்துக் கொள்ளும் வாழ்க்கையை உயர்வு கோணத்தில் பார்க்கச் செய்யும். அப்படி ஒரு திசையில் நான் பயணித்த சின்ன அனுபவம் தான் இந்த திசையொன்று என்ற இந்த நாவல். இந்த நாவலில் வரக்கூடிய இளம் பெண்கள் முகநூலிலும் சமூக ஊடங்களிலும் திளைக்கிறார்கள் .வயதானவர்கள் தங்கள் காலத்தை கடத்துவதை சுவையாக எண்ணுகிறார்கள். அதற்கு இந்த பயணம் சிலருக்கு பயன்படுகிறது. யார் யாரையோ தேடி யாரோ அலைகிறார்கள். அப்படியும் சில கதாபாத்திரங்கள். தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிற போது போதை பழக்கத்திற்கு ஆளாகிற ஒரு இளைஞனும் அவனை பாதுகாக்கிற அவன் தந்தையும இவர்களோடு இருக்கிறார்கள் நான் நான்கு ஐந்து நாட்கள் பயணித்த பயணத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறேன் திசை எட்டு மட்டுமல்ல., பதினாறு மட்டுமல்ல, இன்னும் பல திசைகள் உள்ளன, அதில் ஒரு திசையை இந்த நாவல் காட்டியிருக்கிறது சுப்ரபாரதி மணியன் ( ரூ 180, உயிர்மை பதிப்பகம் வெளியீடு , சென்னை 0