சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 26 செப்டம்பர், 2022

Novel 1189 / சுப்ரபாரதிமணியன் 0 இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல். குறுகிய காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். பலவகை விளிம்பு நிலை மனிதர்கள்.. வீட்டு வேலை செய்கிற பெண்மணிகள், சாராயம் விற்பவர்கள் கூலி வேலை செய்கிறவர்கள் நெசவாளர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களை தொடர்ந்து காட்டிக் கொண்டே போகிறார். நாவலில் ராஜாஜியும் காந்தியடிகளும் அந்த ஊருக்கு வரும் ஒரு நிகழ்ச்சி அறிவிப்போடு தூங்குகிறது பின்னால் பல காலகட்டங்களை தாண்டி போய்விடுகிறது அதேபோல பல கதாபாத்திரங்களைத் தாண்டி போய்க் கொண்டே இருக்கிறது இந்த கதாபாத்திரங்கள் தங்களுடைய வாழ்க்கையின் சிரமங்களையும் மன எழுச்சிகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் காலகட்டத்தை பிரிக்கிற அத்தியாயம் முறைகள் எதுவும் இல்லை. அதே போல கதாபாத்திரங்களின் வெவ்வேறு தன்மையை சொல்லக்கூடிய அத்தியாயப் பிரிப்பு முறையில்லை தொடர்ந்து விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு எழுத்து முறையில் உருவாக்கி இருக்கிறது இந்த நாவல் .இந்த மனிதர்களில் குடும்பங்களை காலி செய்யச் சொல்லி அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது ஒரு விரிவாக்க திட்டத்திற்காக .குறைந்த காலம் .அவர்கள் வெளியேற வேண்டி இருக்கிறது அவர்களின் மன அவஸ்தைகளை இந்த நாவல் சொல்கிறது. தொடர்ந்து எழுத்துமுறைகளில் அக்கறை கொண்டு தன் படைப்புகளை உருவாக்கி இருக்கும் சிந்து சீனுவினுடைய எழுத்து முறையில் வேகமும் இயல்பும் எதார்த்தமும் கூடியிருக்கிறது. பொதுவான அவருடைய படைப்புகளில் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த ஒரு அழகியலும் உருவாகி இருக்கிறது இந்த நாவலின் தலைப்பில் 1189 வீடுகள் காலி செய்யப்பட வேண்டும் என்பதைக் கூட அவர் சாதாரண யூகப் பகிர்வில் சொல்லிக் கொண்டு போகிறார் அவர் சொல்லிக் கொண்டு போவதற்காக நிறைய விஷயங்கள் இருப்பதில் இந்த விஷயம் ஒன்றாகிறது .அவர் எடுக்கிற நாவல்களின் மையம் சிறப்பாக இருப்பதை தொடர்ந்து கவனித்து வரையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . விளிம்புநிலை வாழ்வியலை கூர்ந்து கவனிப்பவர்களில் ஒருவராக சிந்து சீனு மாறி இருக்கிறார் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம் 1189 வேலூர் லாவண்யா பதிப்பக வெளியீடு ரூபாய் 180