சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 நவம்பர், 2020

கோவை பேராசிரியர் ரமணி அவர்கள் : சுப்ரபாரதிமணியன் ஆங்கிலப்பேராசிரியர் . ஆனால் தமிழின் பழைய இலக்கியங்களில் , குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஆடியோ புத்தகங்கள் என்று இவற்றை வாசித்து பதிவு செய்து பல சாதனைனகளைச் செய்திருக்கிறார். அண்ணாவின் கதைகள் சமீபத்தில் கேட்டேன். அண்ணா, கலைஞர் வரை ஆங்கில மொழிபெயர்ப்புகள்,ஆடியோ புத்தகங்கள் அல்லது பதிவுகள் ஏராளம் செய்திருக்கிறார் .நல்ல முயற்சி. நவீன இலக்கியங்கள் அதிகம் தொடவில்லை .தொடுவார். இடையில் பேராசிரியர் பணி ..ஓய்வுக்குப் பின் விவசாயமும் செய்கிறார். விவசாய அனுபவத்தை பெருங்காய டப்பா பேராசிரியர் என்று அருமையாகக் கதை சொல்லியிருக்கிறார். நினைவுக்களஞ்சியமாய் விசயங்களைக் கொட்டுகிறார். மாடு , எருமை வாங்கப்போகிற அனுபவம், விவசாயக்கலப்பை அனுபவம் என்று கலவையாக வாழ்க்கை முழுவதும் வந்து விடுகிறது . இளைய தலைமுறையோடு உரையாடுகிற உத்தியும் சிறப்பு அவரின் குரலில் சிவாஜிகணேசனின் கம்பீரத்தை எப்போதும் கண்டிருக்கிறேன். பல் போனாலும் சிங்கம் சிங்கம்தானே . அந்த கம்பீர்ம் குரலில் எப்போதும் குறைவதில்லை. சொல்லிலும் சொல்லும் விசயத்தில் இருக்கும் அக்கறையும் அப்படித்தான். சிங்கம்தான் , கொங்கு நாட்டுச் சிங்கம் ரமணி பெருங்காய டப்பா அல்ல பெருங்காயத்தின் சர்வரோக நிவாரணி போல அவர். அதுவும் இந்த கொரானா தொற்று காலத்தில் நம் பாரம்பரிய உணவுகள் அது சார்ந்த சுவையூட்டிகளும் உடம்புக்கு நல்ல திடமும் எதிர்ப்புச்சக்தி தருவது போல் அவரின் தொடர்ந்த பணிகள் ஆரோக்யமானவை . 50 ஆண்டுகளுக்கு முன் அவர் திருப்பூரில் அரசு கலைக்கல்லூரியில் வேலை செய்யும் போது அப்போதே ஒரு புத்தகக்கடையை முக்கிய இடத்தில் வைத்து இன்னொரு சாதனை செய்தவர். அப்போது புத்தகக் கடையெல்லாம் அபூர்வம் நான் எம் எஸ்சி கணிதம் படித்த பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் . தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வயதை மீறி அதுவும் கொரானா காலத்தில் சோர்வு பெறாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களை ரொம்பவும் பிடிக்கிறது ஆங்கில இலக்கியம், , மேட்டிட்மை என்று இல்லாமல் தழிழோடு அவர் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கிறார் எழுத்தில், பேச்சில் வாழ்பவர் ரமணி என்ற மணியான மனிதர்.