சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 நவம்பர், 2020

சுப்ரபாரதிமணியன்----திருப்பூர். நவீன நாவல் இலக்கிய ஆய்வுகள் முனைவர் அனிதா பரமசிவம் நூல் சாகித்ய அகாடமி சம்பந்தப்பட்ட இரண்டு சமீபத்திய நூல்கள் எனக்கு கவனத்திற்கு உரியதாக பட்டன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது -யுவ புரஸ்கார் விருது பெற்ற அனைத்து படைப்பாளிகளையும் அழைத்து இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி அந்த கருத்தரங்கில் இடம்பெற்ற படைப்பாளிகளின் அனுபவங்களையும் படைப்பாளிகள் பற்றிய வேறு எழுத்தாளர்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு தொகுப்பு நூல். புரஸ்கார் பரிசு பெற்ற படைப்பாளிகளை கொண்டாடுவது அதன் நோக்கமாக இருந்தது. அந்த கருத்தரங்கத் தொகுப்பு அந்த வகையில் ஒரு முக்கிய நூலாகமும் அமைந்திருந்தது . அதேபோல சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல் களை எடுத்துக் கொண்டு அவற்றில் ஆய்வுசெய்த ஒருவரின் ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும்.இந்த இரண்டு நூல்களும் எனக்கு வழக்கமான பாதையில் இருந்து சற்றே விலகி புது வெளிச்சம் காட்டுபவையாக இருந்தன முனைவர் அனிதா பரமசிவம் அவர்கள் சாகித்ய அகாடமி பெற்ற சில படைப்பாளிகளின் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்த முனைவர் பட்ட ஆய்வேடு அப்படியே புத்தகம் ஆக்காமல் படைப்பிலக்கிய பார்வையில் சற்று மாறுபாடு கொண்டு இந்த தொகுப்பு நூலை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண்மணி என்ற அளவில் உளவியல் சார்ந்த கருத்துக்களையும் பெண்ணிய பார்வைகளையும் இந்த புத்தகம் கொண்டிருப்பது முக்கியமா அம்சமாக இருக்கிறது. சிறந்த ஆய்வுகள் நூல்களாக இந்த வகையில் மாற்றம் பெறுகிற போது அது இளம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் . இந்த நூலில் அனிதா அவர்கள் ஆறு நாவல்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் அவற்றில் விளிம்புநிலை மக்களில் உள்ள தொழிலாளர்களுடைய சிக்கல்கள், பெண்களுடைய சிக்கல்கள் ,முதியோர் சிக்கல்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விலாவாரியாக ஆய்வு செய்திருக்கிறார், நாவல்கள் கட்டமைக்கும் சிக்கல்களை விடுவித்துக் கொண்டு அதற்கு சமூக காரணங்களையும் தேடி போய் இருக்கிறார் ,சராசரி மனிதர்களும் சமூகத்தில் எந்த முக்கியத்துவம் பெறாத மனிதர்களும் இந்த நாவல்களில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம் ,அந்த நாவல்களில் பெண்களின் வாழ்க்கை முறைகள், அவளின் சிரமங்கள் போன்றவை முக்கிய பார்வையாக கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆறு நாவல்களை மின் மாதிரியாகக்கொண்டே சமுதாயச் சிக்கல்களை சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார். தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி .,சா கந்தசாமி விசாரணை கமிஷன் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், திலகவதியின் கல்மரம், நீல பத்மநாபனின் இலை உதிர் காலம் ,டி செல்வராஜின் தோல் ஆகியவை இந்த ஆய்வில் முக்கிய நாவல்களாக இடம்பெற்றிருக்கின்றன , இதில் ஒரு நாவல் மட்டும் பெண் எழுத்தாளர் படைப்பாக இருக்கிறது அதன் காரணமாக அது சார்ந்த கூறுகளை சரியாகவே அனிதா அவர்கள் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார் .இதுவரை சாகித்ய அகாடமியில் பரிசு பெற்ற பெண்கள் மூவர். ராஜம் கிருஷ்ணன் லட்சுமி திலகவதி. ராஜம் கிருஷ்ணன் முற்போக்கு பார்வை கொண்டவராகவும் புரட்சிகரமான கண்ணோட்டத்தைக் கொண்டவராகவும் எழுதியிருக்கிறார். ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் படைப்புகளை முன் வைத்திருக்கிறார் .லட்சுமி மரபு சார்ந்த முறையில் வாழ்க்கையைப் வேணும் பெண்களைப் பற்றி தான் நிறைய எழுதியிருக்கிறார் .அப்படி பாரம்பரிய மரபு சார்ந்த விஷயங்கள் ஒரு குடும்பச் சூழலில் எப்படி அறம் சார்ந்த விழுமியங்களை நிலை நிறுத்துகின்றன என்பதை விளக்குகிறார். அப்படித்தான் இன்னொரு எழுத்தாளர் திலகவதி அவர்கள் .கல்மரம் நாவலில் வீடு கட்ட தொடங்கிய மனிதர்கள் முதல் வீடுகள் கட்டி முடிக்க போது அந்த மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கட்டிடங்களை உருவாக்கம் தொழிலாளர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார் .கல் மரத்தை உருவாக்க தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கல்மரம் என்றால் கட்டிடங்கள். நகரங்களில் இந்த கட்டிடங்களை அதிகம் காணலாம் .அப்படி நகர வாழ்க்கையில் இம்சை படும் பெண்களை பல எழுத்து சித்திரங்கள் மூலம் தந்திருக்கிற திலகவதி அவர்கள் இந்த நாவலில் கட்டிட தொழிலாளர்கள் பக்கத்தில் சிரமப்படுகிறார்கள்.அவர்கள் பற்றிய வாழ்நிலையை விளக்கியிருக்கிறார் பெண்கள் உட்கார நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பதும் அவர்களின் உடம்பில் ஈயம் பட்டு பட்டு ரத்தத்தில் கலந்து அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதும், ஒரு நாற்காலி போடுவதற்காக ஒரு பெண் போராடுவதும் ,,,அச்சகம் சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பெண்களுக்கான பிரச்சினை பற்றிய ஒரு முக்கிய நாவலாக கூட திலகவதி அவர்கள் எழுதியிருக்கிறார் , இந்த ஆய்வில் பெண்கள் கதாபாத்திரங்களின் சிறப்பையும் பெண்ணெழுத்துப் பார்வையில் அவர்களுடைய வகையில் இருக்கும் பார்த்து ரசித்து வழங்கும் கூரிய தீவிரவாத பார்வையிலேயே அறிந்தவர்களை விளக்கியிருக்கிறார், இதுபோன்ற ஆய்வுகள் புத்தக வடிவம் பெறும்போது இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் வாசகப் பரப்பை மேலும் குறிப்பிட்ட கவனம் பெறத் தக்க வகையில் சில பகுதிகளைக் கொண்டிருக்கிறது .அப்படி ஒரு நூல்தான் அனிதா பரமசிவம் அவர்களின் இந்த நூல் விலை ரூபாய் 250 வசந்தா பதிப்பகம் சென்னை ReplyReply allForward