சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 10 மார்ச், 2020

காப்பியக்களன்கள் கருத்தரங்கு : கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் 3/2020

சிலப்பதிகாரம் முதல் சேக்கிழார்  வரை அருமையான சில உரைகள். உயர்நிலைப்பள்ளி/கல்லூரிப் பாட்த்திட்டங்களில் காப்பியங்களின் சிறுபகுதிகளைப் படித்து மறந்து விட்டாச்சு.  காப்பியக்களன்கள் கருத்தரங்கு அக்காப்பியங்களை நினைவு கொள்ள நல்ல வாய்ப்பு .

தெ. ஞான சுந்தரம் : வால்மீகியை  கடந்த கம்பன்... அருமையான உரை . தமிழ்ப்பண்பாடு சார்ந்து வால்மீயின் பிரதியிலிருந்து மாற்றம் செய்த கம்பனின் போக்குகள் பற்றி விவரித்தார். அருமை.


ராணுவப்பயிற்சியும் கட்டாய ராணுவ சேவையும் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது ஓன்று சேக்கிழார் காலத்தில் இருந்ததை பெரிய புராணம் பேசுகிறது என்றார்  பழ .முத்தப்பன்
அரசியலில் மதத் தலைவர்களுக்கு இருந்த அதிகார முக்கியத்துவம் பற்றிப் பெரிய புராணம் பேசுகிறது என்றார்  பழ .முத்தப்பன்… அப்படியா  சேக்கிழார் அய்யன்மீர் .

ராணுவப்பயிற்சியும் கட்டாய ராணுவ சேவையும் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது ஓன்று சேக்கிழார் காலத்தில் இருந்ததை பெரிய புராணம் பேசுகிறது என்றார்  பழ .முத்தப்பன்
சீவகனின் யாத்திரை : சீவகசிந்தாமணி பற்றி பாண்டி  சேதுபதியின் 15 நிமிடத்துக்குள்ளான அருமையான உரை.  சீவகசிந்தாமணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இருக்கும் பல விசயங்களைச் சொன்னார். தீயிலிருந்து யானைகளைக் காப்பாற்றல்.  பயணக்குறியீடாய் பல சுற்றுச்சூழல் பற்றிய குறிப்புகள் அருமை
ஆனந்த குமார். மொழிபெயர்ப்பு செயல்பாடு பண்பாட்டுப் பனுவல். மறு உற்பத்தியாக்கம், அரசியல் அதிகாரம் உட்பட பல உள்ளுறை செயல்பாடுகள் பற்றிய நல்ல உரை.
சிற்பி: கா. செல்லப்பனார் அவர்களின் சேக்ஸ்பியர்  இளங்கோ ஒப்பீட்டு ஆய்வு நூல் அவரின் முனைவர் பட்டக் கையேடு தமிழில் ஒரு சாதனை..ஒப்பிட்டு இலக்கியத்தில் பெரிய மைல் கல் அது
கா.செல்லப்பன் : சிலப்பதிகாரம் பெரும் காப்பியம் அல்ல  என்போர் சிலர் .அறம் , பொருள் இன்பம் பற்றி பேசி, வீடு பற்றிப் பேசாததால்  அப்படியொரு நிராகரிப்பு உண்டு
கண்ணகி: தமிழ் இலக்கிய மரபில் ஒரு சாதனை. தமிழ் தேசியக்காப்பியம் சிலப்பதிகாரம்.. .கண்ணகி..Domestic heroin , political  warrior ,  not regional god.. national symbol
இன்றைய பெண்ணியவாதிகள் கொண்டாடும் பெண் தன் உடலால் பேசுகிறாள் என்பதற்கு கண்னகி ஒரு உதாரணம், கண்ணகி மார்பை அறுத்து உடலால் பேசினாள். அடிமைப்படுத்தப்பட்ட  பெண் உடல் பேசியது. கண்ணகியின் உடல் மொழிக்கு முக்கியத்துவம் தந்தவர் இளங்கோ அடிகள்.
டாக்டர் நல்லா பழனிச்சாமி: KMCH director கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்
கம்பனின் கல்லறையைப் புதுப்பித்து சீராக்கும் வேலையில் ஈடுபடப்போகிறேன்., சேக்ஸ்பியரின் கல்லறையப் போலாக்க வேண்டும் என்பது ஆசை. 

முனைவர் குப்புசாமி( தமிழ்த்துறைத் தலைவர் ) கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்: காதலிக்க சீவகசிந்தாமணீ படியுங்கள் . அதனை உணர அதைப் படிக்கலாம். காதலிக்காமல் இருக்கவும் அதைப்படிக்கலாம்