சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 23 அக்டோபர், 2019

கே.சுப்பராயன்(பாரளுமன்ற உறுப்பினர்  “ திருப்பூர் -100 “
            திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. விடி நைட் என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
                             “ தீதும் நன்றும் நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன.
                       இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி

தங்களன்புள்ள
கே.சுப்பராயன்
(பாரளுமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
Rs 100 திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு.

திருப்பூர் -100 “--திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு

 திருப்பூருக்கு இது நூறாவது ஆண்டு. இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன . கடந்த ஆண்டுகளில் திருப்பூரைப்பற்றி –கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம், தொழிலாளர்களின் பிரச்சினைகள், இலக்கிய கலாச்சார நிகழ்வுகள் பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியவற்றில் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு  இந்நூலாக வெளிவந்துள்ளது.  இதை தமிழ்நாடு கலை இலக்க்கியப்பெருமன்றம், திருப்பூர் மாவட்டம் வெளியிட்டுள்ளது.
ஒரு எழுத்தாளரின் பார்வையில் பொருளாதார அம்சஙகளை மீறி அங்கு வசிக்கும் மனிதர்களின் வாழ்வும் மானுடம் தழுவிய எண்ணங்களும் மேலோங்கியிருப்பதை இத்தொகுப்பு காட்டுகிறது.எழுத்தாளனின் எண்ணமெல்லாம் சகமனிதனின் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். சுதந்திர உலகில் பொருளாதாரம் மீறிய செய்ல்பாடுகளால் அவன் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஆசை மேலிடுகிறது. வெகு நெருக்கமாக உணரும் பல பிரச்சினைகளை வெளிக்காட்டியிருக்கிறார். இடம்பெயர்ந்து வந்த அகதி நிலையிலான தொழிலாளர்கள் முதல் கார்ப்பரேட்டுகளின் நோக்கங்கள் வரை பல தலைப்புகள் உலக மயமாதலில் சிக்கி இருக்கும் நகரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சியால் உடம்பின் ஒரு பாகம் மட்டுமே வீங்கியமாதிரி இருக்கும் நிலையையும் மறுபுறம் இலக்கிய கலாச்சார நடவடிக்கைகள்  பற்றிய அக்கறையையும் இந்நூல் சொல்கிறது. இந்நூலின் முன்னுரை தந்திருருக்கும்      கே.சுப்பராயன் ( முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ) அவர்களின் கீழ்க்கண்ட கருத்து மணிமகுடமாக விளங்கிகிறது.
        திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. விடி நைட் என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.                              “ தீதும் நன்றும் நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன. இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும்
( Rs 100 திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு )
- சா. கலைச்செல்வி