சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 23 அக்டோபர், 2019

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொள்ள இரு படங்கள் : சுப்ரபாரதிமணியன்

1. புதிய கிரகம் காட்டும்  இன்டர்ஸ்டெல்லர் :திரைப்படம்
உலகம் சூடாகிக் கொண்டிருப்பது பருவநிலை மாற்றங்களால் வசிக்க இயலாத இடம் ஆகிக்கொண்டு இருக்கிறது .மனிதன் வாழத் தகுதியான வேறு கிரகத்தை கண்டு பிடிக்கும் முயற்சி  அவ்வப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது .
சுற்றுச்சூழல் கேடால் சாயம் தோல் பதனிடுதல் அணுசக்தி வீச்சு விவரங்களை மனதில் கொண்டு ஊட்டி கொடைக்கானல் கேரளா என்று பணக்காரர்கள் வீடுகள் தோட்டங்கள் வாங்கிப் போட்டு தப்பித்துக் கொள்வது போலத்தான் இந்த பூமி வாழத் தகுதியில்லாததாக இருக்கிறது என்கிற போது வேறு கிரகத்தைத் தேடிப் போவதும் .
ஜோசப்  காப்பர் நாசாவில் வேலை செய்தவர். அவரின் படுக்கையறையில் பல அசாதாரண மாற்றங்களைச் செய்து  கொள்வது அதிர்ச்சி தருகிறது.  ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் மனிதன் வாழ இடம் தேடும் முயற்சியில்  ஒருவகையில் வெற்றி பெறுகிறார் .அதில் 12 பேர் பயணம் செய்து அதை அங்கீகரிக்கிறார்கள் . புது கிரகத்தில் ஒரு மணி நேரம் என்பது பூமியின் ஏழு  ஆண்டுகள் இந்த ஆராய்ச்சியில் 23 ஆண்டுகள்  பூமியில் கடந்து போய்விடுகிறது. பலருக்கு வயதாகி ஆர்வம் இல்லாமல் போகிறது . வார்ட் ஹோல், பிளாக் கோள்,   ஐந்தாம் பரிமாணம் விண்வெளி நேரம் போன்ற இயற்பியல் கோட்பாடுகள் தரும்  முரண்கள்  காரணமாக வேக மயக்கம் தவிர்க்க முடியாதது ஆகிறது இந்த வேறுபாட்டைக் கடந்து புது  கிரகம் உருவாகிறது
இதில்  விண்வெளி கலங்கள் பழுதாகி சிரமம் தருவது இன்னொரு வகைப் படமாக விரிந்திருக்கிறது
..இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மனிதர் வாழும் பூமியை லாயக்கற்றதாக்க  பல பயிர்கள் , மனிதர்களின் தொந்தரவான நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
இந்த சமயத்தில் கிராவிட்டி என்ற படமும் ஞாபகம் வருகிறது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராதவிதமாக விண்வெளிக் கழிவுகள் ஏற்படுத்திய விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்து விடுகிறது . இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவை பழுதடைந்து விடுகின்றன.  சாண்ரா புல்லட் என்பவர் தவிர மற்ற அனைவரும் இறந்து விடுகின்றனர் .சார்க் க்லூனி என்ற பெண்மணி உலகைக் காப்பாற்றும் பொருட்டு தன்னை விடுவித்துக்கொண்டு விண்வெளியில் பின் தொடர்பின்றி செல்கிறார் இறுதியில் சாண்ட்ரா புல்லட் தற்கொலை முயற்சிக் முயன்று  பின்னர் கடினப் போராட்டத்திற்கு பிறகு பூமிக்குத் திரும்புகிறார் .வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள பூமிக்கு தான் வர வேண்டி இருக்கிறது அவர்களுக்கு.
   பூமி பாதுகாப்பான இடம் தான் இதைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொள்ள வைக்கும்
2. வெள்ளத்திற்கு முன் :ஆவணப்படம் 
சென்னை என்றால் வெள்ளத்திற்கு பின்புதான் பேச வேண்டி இருக்கிறது அபரிமித வெள்ளத்திற்கு முன் நிகழும்  எச்சரிக்கைகள் என்று பலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள் இதெல்லாம் அபாயம். இது மீறினால் அபரிதமாக வெள்ளம் புயல் என்று ஆருடம் சொல்வார்கள் .
அமெரிக்காவைச் சார்ந்த இயக்குனர் அப்படி ஒரு பிரளய  காலத்திற்கு முன் உலகம் எப்படி இருக்கிறது என்று சொல்ல மூன்றாண்டுகள் சிரமப்பட்டு இத்தலைப்பில் ஒரு படமெடுத்திருக்கிறார் இயக்குனர் பிஷ்சர் ஸ்ட்வன்ஸ்..
 மூன்றாண்டுகளுக்கு முன் ஐக்கிய நாட்டு சபை பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ  டிகாப்ரியாவை அமைதித் தூதுவராக உலக அமைதி குறித்து சில விஷயங்களைப் பரப்பச் சொன்னார்கள் அவர் அந்த படத்தில் பல இடங்களுக்கு போகிறார்.  பலரைச் சந்திக்கிறார் அதுவே இப்படமாக  விரிந்திருக்கிறது
இந்த தூதுவர் பதவியை பெற சில முன் தகுதிகள் உள்ளன .உலகம் வெப்பமாவது குறித்து  லெவந்த் ஹவர்  என்றொரு படம் எடுத்திருக்கிறார்.  10 ஆண்டுகளுக்கு முன் பூமிநாளில்  அவர் சுற்றுச்சூழல் சார்ந்து  ஆற்றிய உரையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 டிகாப்ரியோ உலகின் பல பகுதிகளுக்கு இந்த ஆவணப்படம் பொருட்டு செல்கிறார் வட இந்தியாவிற்கு வந்து போகும் பெண்களை பார்க்கிறார் சாணி மராட்டியர் பொருளாகி புகையாகும் வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார் பெண்கள் குடும்பத்தில் தூண்களாக இருப்பதையும் தெரிந்து கொள்கிறார் பிரதேசத்திற்கு சென்று பணிபுரிய நதியாய்ப் பெருக்கெடுப்பது பற்றி பேசி தெரிந்து கொள்கிறார் கனடாவில் எண்ணை,  மணல் பாகங்களைத் தெரிந்து கொள்கிறார் சுமத்ரா காடுகளில் நடக்கும் சம்பவங்களில் இருந்து உற்பத்தியாகும் பாமாயில் குறைந்த விலைக்குத் தரப்படும் ரகசியம் பற்றி தெரிந்து கொள்கிறார் பல்வேறு நாடுகளில் நுகர்வு கலாசார அம்சங்கள் உலகை சூடாக்கி வருவதை கண்டு கொள்கிறார் இதைப்பற்றி சிலருடன் பேசி விவாதித்து பல விஷயங்களை தெரிந்து கொள்கிறார் மனிதன் வாழ்வில் உண்டாயிருக்கும் உலகைச் சூடு பற்றி தெரிந்து கொண்டு உரையாற்றுகிறார் தன் குழந்தை வயது நினைவுகளுடன் சூழல் மற்றும் பற்றுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் .இவர் பயணங்களில் விஞ்ஞானிகளைச் சந்தித்து தன் கவலையை தெரிவிக்கிறார் அவர்களும் இப்படியே போனால் பெரும் கவலை கொள்ள வேண்டும் என்கிறார்கள் சகல துறைகளிலும் சகலவிதமான ஆளுமைகளைச் சந்திக்கிறார் அமெரிக்கா ஒபாமா சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நாராயண் உள்பட ஜல்லிக்கட்டு எரிமலையின் உச்சம் என்று கமலஹாசன் சொல்லும்போது அதற்கான அர்த்தம் கிடைக்கிறது டிகாப்ரியோ சூடு பெரும் கேடு என்று மெல்லியக் குரலில் அமெரிக்காவின் சூப்பர் ஸ்டார் சொல்லும்போது இன்னும் உண்மை தெளிவு பெறுகிறது வெகுஜன தளத்தில்.