சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 26 ஜூலை, 2019

தமிழ்மொழி தொன்மையானது . செம்மொழி நிலையைப் பெற்றது. ஆனால் தமிழ்ச்சூழலில் அதைப் போற்றிப் பாதுகாக்க கல்வி நிலையில்  சரியான ஏற்பாடுகள் இல்லை. தமிழ் எழுத்தாளனும்,  படைப்புகளும் விளம்பரங்கள் மூலமே முன்னிலைப்படுத்தப்படுகிறான் “ என்று எழுத்தாளர் நாமக்கல் நாதன் 14/7/19 ஞாயிறு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * ஜீலை     மாதக்கூட்டம் ...14/7/19 ஞாயிறு பனியன்  தொழிலாளர் சங்கம், பழைய புஷ்பா திரையரங்கு, எவரெஸ்ட் ஓட்டல்  எதிரில், பெருமாநல்லூர் சாலை,திருப்பூரில் நடைபெற்றது
தலைமை :தோழர்  சண்முகம்
( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
சிறப்புரை : தேசிய கல்விக்கொள்கை 2019 பற்றி..
தோழர்  பி ஆர். நடராஜன் 
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
*   நூல்கள் வெளியீடு :
* சுப்ரபாரதிமணியனின் “  வேட்டையாடிகள் –பறவைகளின் உலகம் “  (கட்டுரைகள் தொகுப்பு- என்சிபிஎச் வெளியீடு  )  எம்கே எம் குழும  ஹோட்டல் அதிபர் பாலசுப்ரமணியம் வெளியிட பள்ளி ஆசிரியர் ஆரோக்ய சாமி பெற்றுக்கொண்டார்
*   பிற கீழ்க்கண்ட நூல்கள் வெளியீடும் நடந்தது
* நாமக்கல் நாதன் கவிதைகள்
* வழக்கறிஞர் எம் . கண்ணனின் “ சிலம்பம் ஓர் அற்புதக்கலை “
திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகத்தின் நான்கு நூல்கள்
* சோசலிசப் பொருளாதாரம் –ஸ்டாலின் தமிழில் : சுந்தர சோழன்
* குறுநதிக்கரையில் –நாவல் ( மு.சி. கந்தையா )
* துர்கா மாதா – நாவல் –ஜீவா
* கடல்மரங்கள் –வெள்ளியோடனின் மலையாளச்சிறுகதைகள் தமிழில்
* குறும்படம் வெளியீடு :
திருப்பூர்  தீபனின் “  புத்தகப் பயணம்

*கீழ்க்கண்டோர்  படைப்புகள்  அறிமுகம் .செய்தனர் :  *
* திருப்பூர் குணா, , யோகி செந்தில் ,சுரேஷ்குமார் , துருவன் பாலா 
பாராட்டுகள் :
*  பித்தன்  நடராஜன் அவர்களின் திருக்குறள் ஓவியங்கள்  தொகுப்பு மற்றும் அவரின் கல்விப் பணிக்கு .
* திருக்குறள் செல்வி ஓவியா  “  திருக்குறள் ஒப்புவிப்பு . மற்றும் தசாவதானம் திறமை வெளிப்படல்  நிகழ்வுக்கு
* இதழ் அறிமுகம்: நிலவெளி இலக்கிய மாத இதழ் 
மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன .எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488
புகைப்படம் இணைப்பு * சுப்ரபாரதிமணியனின் “  வேட்டையாடிகள் –பறவைகளின் உலகம் “  (கட்டுரைகள் தொகுப்பு- என்சிபிஎச் வெளியீடு  )  எம்கே எம் குழும  ஹோட்டல் அதிபர் பாலசுப்ரமணியம் வெளியிட பள்ளி ஆசிரியர் ஆரோக்ய சாமி பெற்றுக்கொண்டார் . படத்தில் பி ஆர் நடராஜன், ஹோட்டல் அதிபர் பாலசுப்ரமணியம் ,  பள்ளி ஆசிரியர் ஆரோக்ய சாமி சுப்ரபாரதிமணியன்  .