சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 26 ஜூலை, 2019

திருப்பூர் -100 ரூ 100
 கே.சுப்பராயன்(பாரளுமன்ற உறுப்பினர் திருப்பூர் )  அவர்களின் முன்னுரையுடன் . வெளியீடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்.
கனவு 34 ம் ஆண்டில் …... ஜீன2019  இதழ்   வெளிவந்துள்ளது.
 மணிமாலா மதியழகன், ராமன் முள்ளிப்பள்ளம் சிறுகதைகள், ஆர்,பாலகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள். தேவரசிகன், சாமக்கோடாங்கி ரவி, தமிழமுது,ப.சுடலைமணி, துருவன் பாலா கவிதைகள் விலை ரூ 20.. ..
 8/2635 Pandian nagar, Tirupur 641 602 / 94861 01003


எஸ். ஏ.காதரின் நூல்கள்
- குருவிக்காரன் –சிறுகதைத் தொகுப்பு
- குயிலா –நாவல்
- குருவிக்கூடு –நாவல் .......பிரதிகளுக்கு ..8610172809

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
  மாதக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மாலை 5 மணி முதல் ... இலக்கிய உரைகள், நூல்கள் வெளியீடு, நூல்கள் அறிமுகம், கவிதைகள்  வாசிப்பு , பாடல்கள் , கருத்துரைகள்... மில் தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் . வருக
*
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் மாத செய்தி மடலுக்கு படைப்புகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப prnatarajan1253@gmail.com
ரேகை - சுப்ரபாரதிமணியனின் நாவல்- ஆயிஷா இரா நடராசன்
 இன்றும் புதினங்கள்  நெடுங்கதைகள் சிறுகதைகள் என கதைகளை பிரிக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் குமுதினி 300  பக்கம் என்றாலும் உலகம் அதை நாவல் என்று அழைப்பது இல்லை. ஆங்கில நாவலாசிரியர் ஹென்றி ஹட்சன் உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் எதுவும் நாவல் கிடையாது என்கிறார் .ஆனால் இது பழைய கருத்து இந்த வாட்ஸப் யுகத்தில் வாசிப்பு ஒரே மூச்சில் முடிப்பது மட்டுமல்ல நறுக்கு தெறித்தார் போல் உண்மையை வெளியிடுவது. வாசிக்கும் மனங்களை பாதிப்பது என மாறிவிட்டது .
சுப்ரபாரதிமணியனின் எழுத்து நெஞ்சை தொடும் சுடும் என்ற வகைப்பாட்டை சேர்ந்தது  ரேகை :திருப்பூர் நாவல்  ரத்தமும் சதையும் கலந்த மற்றொரு படைப்பு .
ஜாதகம் சோதிடம் பார்க்கும் பரம்பரை குடும்பத்தில் சிதையோடு தொடங்கும் கதை நவீன நாடகக்காரர் சுப்பையா முதல் விலைமகள் பரமேஸ்வரி கடும் உழைப்பாளியான அமலம், . கிறிஸ்துவ போதகர் , கள்ளநோட்டு கோபால் என விரியும் யதார்த்த உலகம் புதிய திருப்பூரை டாலர்  நகரமாக நம்முன் விரிய வைக்கிறது.  கலை இரவில் வரும் தங்கர்பச்சானும் பாலாஜி சக்திவேலும் கூட பாரதி வேசம் சுப்பையாவை பாராட்டுகிறார்கள். ஆனால் அவருடைய குறும்பட டைரக்ஷன் கனவு பலிப்பதே இல்லை .எம்பில் பிராஜெக்ட் செய்யும் ரத்தினவேல் உட்பட நாம் அனைவரும் நாவலோடு  எளிதில்   இறுதியில் ஐக்கியமாகி  விடுகிறோம்.
  கேம்  கூலி முறை  பற்றியும்  அதன்  ஒழிப்பு பற்றியும்  விவரிக்கும்போது  பீகார்  நேபாள  கூலிகள் குறித்த  தனிப்பதிவு இந்த நாவலில் உள்ளது  அழுத்தமான  ரேகை இது ( ரூபாய் 125  பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர்  பக்கம் 142). –