சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 31 டிசம்பர், 2017

     ஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்
புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நிலை பற்றியக் கருத்தரங்கும் அது பற்றிய ஆவணப்படம் வெளியீடும் சேவ் “ அமைப்பு சார்பில்  புதன் காலை திருப்பூர் ரமணாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.  சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார். சேவ்  நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஜெகதீசன் ( இணை இயக்குனர், சுகாதரம் மற்றும் பாதுகாபுத்துறை,   திருப்பூர் ) கற்கை நன்றே  “  ஆவணப்படத்தை   ( புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி  பற்றிய ஆவணப்படம் ) வெளியீட தொழிற்சங்கத் தலைவர் சம்பத், சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சு.மூர்த்தி ( கல்வி மேம்பாட்டுக்கூட்டமைப்பு ) - புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள், பதிவுகள் என்றத் தலைப்பிலும், சுந்தரமூர்த்தி ( தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்றக் கழகம் )- தாய்மொழிக்கல்வியின் அவசியமும் அவசரமும் என்றத் தலைப்பிலும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வித் தேவையை உள்ளடக்கிய அணுகுமுறை என்ற தலைப்பிலும் மற்றும் சவுந்திரராஜன், குநதங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
சுப்ரபாரதிமணியன் உரையில்..
  “ திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று  மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடுப்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.
குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.
குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும்  5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப  அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.
பெற்றோர்  குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை  கொள்வதில்லை. கேட்டால் 3 மாதங்கள் இருப்போம் பிறகு போய் விடுமோம் என்கிறார்கள். அப்படித்தான் 3 மாதங்கள் இருந்து விட்டு ஊருக்குப் போய் விட்டு மீண்டும் வருகிறார்கள். வாடகை பிடிக்கிற இடத்தில் முன்பணம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். மீண்டும் அங்கேயே வர... இடையில் அவர்களுக்குத் தெரிந்தவர்களே தற்காலிகமாய் அங்கு குடியேறுகிறார்கள்.  குழந்தைகளை சற்றே வளர்ந்த குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு  பெண்களும் பனியன் தொழிற்சாலைகளுக்குப் போய் விடுகிறார்கள்.
வழக்கமாய் மொழி சார்ந்தச் சிக்கல்களால் அந்நியப்பட்ட இக்குழந்தைகள் சற்றே முரட்டுத்தனம் மிக்கவர்களாய் மாறி தனிமைப்படுகிறார்கள். இணைப்புப் பள்ளியிலோ, அரசுப்பள்ளியிலோ இந்தக் குழந்தைகளுக்குப் பெயர் முரட்டுக்குழந்தைகள். கொச்சையாக சிலர் தறுதலைகள் என்கிறார்கள் இரக்கமின்றி... ஆசிரியர்களும் அவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கைவிடுகிறார்கள். மீறினால் காவல்துறைய அணுகுகிறார்கள். இக்குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.   என்றார். தமிழே தெரியாமல் திருப்பூரில் வாழலாம் என்ற நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் அபாயமணி இந்தக்கூட்டத்தில் எதிரொலித்தது
சேவ் 94822 13011