சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 2 செப்டம்பர், 2015

முதுமை வரமா சாபமா.
    விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் “ வானப்பிரஸ்தம் “ நூல்
                      சுப்ரபாரதிமணியன்
தள்ளாத வயது...
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும் நடையும்...

எதை நோக்கியது
இந்த நடை...

நடந்தால் மட்டுமே
நாட்கள் தன்னைக்
கடந்துப் போகுமென்றா?

நடக்காத நாட்களை
தன்னால்
கடக்க முடியாதென்றா?

உயிரிருக்கும் கூட்டை
உறுதி செய்யவா?

இறுதியின் நிலையை
உலகுக்கு பிரகடனப்படுத்தவா?

எதை நோக்கியது
இந்த நடை,
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும்
வயதுடன்... (  கோவை அகிலாவின் கவிதை )l
      முதுமை வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகம் தள்ளாட வைக்கிறது. முதியோர் இல்லங்களும் வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகம் இருக்கிறது. முதியோர் இல்லங்களில் முதியோருக்கு விதிக்கப்பட்ட தனிமை பயமுறுத்துவது. ஆனால் அவை வரமாக எப்படி அமைந்துள்ளன என்பதை விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் இந்நூல் விளக்குகிறது.
            விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் இதற்கு முந்தைய நூல்  ஆலமரம். 1000 பக்க நாவலாகும்.  நான்கு தலைமுறைக்குடுமபத்தின் 100 வருட வாழ்க்கையை விவரித்தது. வைணவ குடும்பம் சார்ந்த வாழ்க்கையின் நீரோட்டமும், திருமண , குழந்தை பேறு, சாவு உடபட பல சடங்குகளும் சிறப்பாக  விவரிக்கப்படிருந்தன.இருபதற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் வாழக்கையை விவரிப்பதன் மூலம் வெவ்வேறு தலைமுறைகளின் வாழ்நிலை வேறுபாட்டையும் விவரித்த நாவலாகும் 

      விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் “ வானப்பிரஸ்தம் “ நூல் முதியோர் இல்லங்கள் வரமாக அமைந்து அவர்களை ஆசுவாசப்படுத்துவதைச் சொல்கிறது . நாவல் தன்மையில் பல்வேறு மனிதர்கள் கதா  பாத்திரங்களாக உருக்கொள்கிறார்கள்.வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சொந்த பந்தங்களைத் துறந்து தனிமையை நாடி வனவாசம் சென்று கிடைததை உண்டு அந்திம காலத்தினை கடத்திட வேண்டும் என்று அர்த்தம் கொள்வதற்கு மாறாக கார்ப்பரேட்டுகள், வசதி கொண்டவர்களுக்கான் நவீன முதியோர் இல்லங்கள் அவர்களுக்கு ஆசுவாசம் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதை இந்நூல் விளக்குகிறது.செல்லம்மாள் குடிகாரக்கணவனிடம் இருந்து தப்பிப்பதற்காக மு.இ. வந்தவள். கணவன் இறந்த பின் தனிமையாக்கப்பட்டவள். பிள்ளைகளுக்கு தொந்தரவு வேண்டாம் என்று கிளம்பி விட்டவர் . கோவிந்தராசு பாமரன். கமலம்மா அடிக்கடி நோய் வாய்ப்படுபவள்.        “ சம்சார சங்கீதம்தான் தட்டு , கரண்டிதான் பக்க வாத்யம் இதுகளோடு நித்தியம் பாடறேன் “ என்று ஒதுங்கிக் கொண்டவள். அப்பாசாமி மனைவிக்கு ஞாபகமறதி. அவர்களுக்கு புது இடம், புது அனுபவமாய் எல்லாம் அமைந்து விடுகின்றன. பொய் உயிலால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து சேர்கிறார்கள்.  முதுமை தவிர்க்க முடியாத ஒரு கால நிலை, மனித வாழ்வில் ஏற்படும் இயறகையான மாற்றம். இதை வரவேற்று ஒத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் முதுமையில் தயாராக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறவள் சாரதா. இப்படி பல மனிதர்களின் வாழ்க்கை புனைவுத்தன்மையிலாமல் தரப்பட்டிருக்கிறது. பல்ரின் வாழ்க்கை கடிதங்கள் மூலமும் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த கடித வகைப்படுத்தல் ஒரே மாதிரியான வாசிப்பிலிருந்து வேறு பாதைக்கு வழிகாட்டுகிறது.  சமையலறை சம்பவங்களும், வெவ்வேறு வகை மனிதர்களின் நடவடிக்கைகள்  நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருகின்றன. முதியோர் இல்ல நிர்வாகங்களும் அவற்றில் வசிப்பவர்களும் பங்கும் ஜனநாயகத்தன்மையோடு இருப்பதை காட்டுகிரார். . பொருளாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு இந்த மூன்று “ப “ வுக்கும் ஒரே விடை முதியோர் இல்லம என்பதை நிரூபிக்கும் பல நெகிழ்ச்சியான சம்பாவங்கள் இதில் உள்ளன.அங்கு நிகழும் சாவுகளும்,  உரையாடல்களும் ., பகிர்வும் நெகிழ்ச்சியாகத் தரப்பட்டிருக்கிறது . முதியோர் இல்லப் புகைப்படங்கள் அவர்கள் வாழும் சூழலைக் காட்டுகின்றன. அங்கு வாழ்வதை ரசித்துக் கொண்டு ஒதுங்கியிராமல் பல முதியோர் இல்லங்களுக்கு வது சேர சிபாரிசு செய்கிறது. குழப்பங்களும் தீர்வு காண இயலாத பலருக்கு தெளிவைக் கொடுக்கிறது.  வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகங்களூக்கு மத்தியில்  வரம் என்று தீர்ப்பு வழங்கி விடுகிறது. படைப்பிலக்கிய வாதி என்ற வகையில்  ஒரு எழுத்தாளர் மு.இ. இருந்து அந்த அனுப்வங்களை வாரி வழங்கியிருக்கிறார். பலருக்கும் பயன் படும்  வானப்பிரஸ்த அருமருந்து “ இது. .( kaavya Publn)