சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 5 செப்டம்பர், 2015

திருப்பூர் மக்கள் மாமன்றம் :           
இலக்கிய விழா



திருப்பூர் மக்கள் மாமன்றம்  ஏற்பாடு செய்திருந்த  இலக்கிய விழா ஞாயிறு அன்று  திருப்பூர் நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  திருப்பூர் மக்கள் மாமன்றம் தலைவர் முனைவர் சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

விழாவில் சென்னை “ இலக்கியச் சோலை “ மாத இதழ் தயாரித்த திருப்பூர்  சிறப்பிதழை  பத்மஸ்ரீ டாக்டர்  ஏ. சக்திவேல் ( தலைவர் , திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் )  வெளியிட்டார்.

ஜெய்ஸ்ரீ ராம் கல்விக்குழுமம், சேர்மன் கே.எம். தங்கராஜ்  தமிழறிஞர்களுக்கும் பல்துறை சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார். அவர் சார்ந்த கல்வி நிறுவனங்கள் ஏழை மக்களுக்கு செய்து வரும் கல்வி உதவியை விவரித்தார்.

 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ( எழுத்துப்பணி ) , ஆனந்தகுமார் ( மக்கள் மாமன்றம்)   ,   கேபிகே செல்வராஜ்            ( கல்விச்சேவை )  , ஞானவேல் ( சமூக சேவை)    என்.சிதம்பரம்( முயற்சி ) உட்பட பலர் விருது பெற்றனர்.


 பத்மஸ்ரீ சக்தி வேல் பேசியது:
 நேற்றைய தொழிலாளர்கள் இன்றைய முதலாளிகள் “  என்பதை திருப்பூரை பின்னலாடைத் தொழிலைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து உள்ளூர் தொழிலில் நிருபித்து வருகிறார்கள். வியாபாரம் சார்ந்த ஒரு நகரில் நடப்பவை  பெரும்பாலும் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளாக இருக்கின்றன. ஆனால் நம்மை மேம்படுத்தும் இலக்கிய நடவடிக்கை சார்ந்த செயல்பாடுகள் தொடர வேண்டும். வாசிப்பு என்பது சகமனிதனுக்கு, தொழிலாளர் அனைவருக்கும் தேவை. அத்தகைய வேலைப்பளுவில் இருக்கிறோம். அதிலிருந்து விடுபட வாசிப்பும், வணிக நோக்கமற்ற நடவடிக்கைகளும் மிகவும் தேவை.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது:

பல்துறை சார்ந்த இதழ்களும் நூல்களூம் நிறைய வெளிவரும் காலம் இது. பல்துறை சார்ந்த வாசிப்பும் பெருகியுள்ளது. ஆனால்  இலக்கிய வாசிப்பு குறைந்திருக்கிறது. இலக்கிய வாசிப்பை மேம்படுத்தும்  நடவடிக்கைகள் நமக்குத் தேவை. நடைமுறைக் கல்வியிலிருந்து வேறுபட்டு மாற்றுக்கல்வியையும் அதன் மூலமான மாற்றுச் சிந்தனைகளையும்   உருவாக்க இலக்கிய வாசிப்பு அவசியம். அதை பள்ளிகளிலிருந்தே இன்னும் தீவிர முயற்சிகளில்  ஏற்படுத்தவேண்டும். அதற்குத் தாய்வழிக்கல்வியும், பகுத்தறிவும் அடிப்படைகளாக இருக்கும்.


முன்னதாக கோவை கோகுலம் தலைமையில் நடந்த கவியரங்கில் நம்ம ஊர் கோவிநாத், து.மு.சாமி, சிவதாசன், நவநீதன், சு.வேலுச்சாமி, மு.மணிமேகலை  பங்கேற்றனர்.

 “ பெரியார் அண்ணா “ என்ற தலைப்பில் பாண்டி மு. வேலு கருத்துரையாற்றினார். இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் ஏற்புரை ஆற்றினார்.

 “ இலக்கியச் சோலை “ மாத இதழ் தயாரித்த திருப்பூர்  சிறப்பிதழில்  திருப்பூரைச் சார்ந்த 25 படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.