சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 29 ஜனவரி, 2015

” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு


சுப்ரபாரதிமணியன்

 

நட்பே நலமா: நூல் வெளியீடு திருப்பூரில் அரோமா ஓட்டலில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. சிலரின் உரைகள்:
சுப்ரபாரதிமணியன் ( எழுத்தாளர் ) :
பாட்டாளிகள் படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாறிய மறுமலர்ச்சி காலம் இது. ஒரு காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும், மெத்த படித்தவர்களும் ., புலவர்களுமே எழுதும் சூழல் இருந்தது. விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் அவர்களே எழுதினர். ஆனால் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களிலிருந்தே, சாதாரண மக்களிலிருந்தே தலித்கள், பெண்கள், நெசவார்கள், பனியன் தொழிலாளர்கள், ஓரின புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் என்று அவரவர் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்தும், வாழ்வியல் குறித்தும் எழுதுகிறார்கள். சாதாரண மக்களே அவர்களின் வாழ்க்கையை எழுத்தாளர்களாக நின்று எழுதும் இன்றைய கால கட்டம் பட்டாளிகளே படைப்பாளிகளாக தங்களை வெளிப்படுத்தும் எழுச்சி மிக்க காலம்… இது இலக்கியத்தின் ஆரோக்கியமான சூழலைக் காட்டுவதாகும்.
தலைமை : ” ஈஸ்வரன் ( த.மு.எ.க.ச ):
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கெதிரனான மதவாதிகளின் செயல்பாட்டை எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இது எழுத்துலம் மீதான வன்முறை..கடிதம் எழுதுங்கள். மற்றவர்களுடன் மனதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நெகிழ்வான, மகிழ்ச்சியான கணங்களை கடிதங்கள் உருவாக்கும்.
பாரதி சுப்பராயன் ( முகநூல் எழுத்தாளர்) :
தனக்கு ஏதாவது லாபம் இடைக்குமா என்று திட்டமிட்டு யோசித்து இந்தத் தலைமுறையினர் மற்றவர்களுடன் பழகுகின்றனர். இது தவறான அணுகுமுறை.. அன்பு, மனிதாபிமானம் சார்ந்த விசயங்களை வலியுறுத்தி படைப்புகளை எழுதி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ளது..
சிவகாமி ( ஆசிரியை): சமூகம் சார்ந்த அனுபவங்களை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் பெண்களின் பங்காய் அவர்களின் அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக எழுதித் தீர வேண்டியது அவசியம்.
கவிஞர் கனல்: பழைய நினைவுகளையும் கலாச்சார மரபுகளையும் மீட்டெடுப்பதும், பதிவு செய்வது இன்றைய தலைமுறைக்கு தேவையானதாக உள்ளது.
பாரதிவாசன்( பதியம் ): இயங்கிக் கொண்டே இருத்தல் மனித இயல்பு. எழுத்தின் மூலம் சமூகப்பிரச்சினைகளை வெளிக்கொணர்வதும் அதன் மூலமான விழிப்புணர்வும், போராட்ட உணர்வும் கொண்டு வர புத்தகங்கள் உதவுகின்றன.
இளஞாயிறு ( நொய்யல் இலக்கிய மையம்): புதிய பாதைகளை போடுபவர்களாக, புதிய நியதிகளை உருவாக்குபவர்களாக மாற புதிய தலைமுறைக்கு பொறுப்புணர்வு உண்டு. தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களை விட புத்தக வடிவில் படிப்பதில் நிறைய சவுகரியங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து பேண வேண்டும்.
( 40 எழுத்தாளர்களின் கடிதங்களின் தொகுப்பு நட்பே நலமா: நூல் தொகுப்பு இளஞாயிறு, மோகன் ராசு, பல்லடம் ராசு..
வெளியீடு : மகேசுவரி புத்தக் நிலையம் , திருப்பூர் விலை : ரூ 60 )