சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 9 ஜூன், 2019

கவியரசனின் பரிதவிப்பு நாவல் ; சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
கவியரசனின் இலக்கிய ஆர்வத்தை சங்கரன் கோவில் கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒரு தரம் சென்றிருந்த போது கண்டேன். என் நூல்கள் பற்றிய ஆய்வுக்கான கேள்விகளை நுணுக்கமாக  பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சி அடைந்தேன்..சில கவிதைகளை கனவு இதழிலும் பிரசுரித்திருந்தேன்
 காதல் மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்வு இயல்பானதாக இல்லாத போது  அவர்கள் வாழ்க்கை தாறுமாறானதாக அமைந்து விடுவது பற்றிய ஒரு குறுநாவல்  படித்தேன் .நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது. அதை பிரசுரிக்க ஆர்வம் கொண்டபோது பக்க அளவைப்பற்றிச் சொல்ல அதை உடனே விரிவாக்கி எழுதினார்,.  எளிமையானத் தோற்றம். அதன் பிரதிபலிப்பாய்  எழுத்திலும் எளிமை. எந்த நவீன விடயங்களுக்கும் ஆட்படாமல் தன் அனுபவ எல்லையை விரித்துச் செல்லும் பாங்கு போன்றவை நம்பிக்கையளித்தன.
பரிதவிப்பு நாவலைப் படித்த போது ஒரு மரணம் சார்ந்த சூழலிலிருந்து அது  விரிவடைவதைக்கண்டேன். தேச நலனுக்கான சாவு. பாதிக்கப்படும் குடும்பச் சூழல். தண்ணீரை உறிஞ்சி காசாக்குபவர்கள்.அதைத் தட்டிக் கேட்கிறவர்களுக்கு வரும் சிரமங்கள், சுகாதாரக் கேடுகள், திருப்பூருக்கு இடம் பெயரும் கிராம மக்கள் ..பூதாகரமானப்பார்வை கவியரசனுக்கு. ஒன்றை இழந்து ஒன்று விசுவரூபிக்கும் வாழ்க்கையின் பல கணங்கள். ஒரு நாவலாசிரியனின் பார்வையாய் ஒன்றின் மீது ஒன்றாய் படியும் வாழ்க்கையின் நிகழ்வுகள் , தரிசனங்கள் . நல்ல வாசிப்பிற்குரிய நாவலாக மிளிர நுணுக்கமான சித்தரிப்புகள் , அனுபவங்களை  கோர்த்துச் செல்லும் பாணீயில் நல்ல கதை சொல்லியாக மிளிர்கிறார். தளம் குறுநாவல் போன்றதாயினும் பல அடுக்குகளாய்த் தந்ஹ்டிருக்கிறார். கல்லூரி மாணவனாக, ஆய்வுக்காலத்திலேயே  ஒரு சரியான இலக்கியப்பார்வை  சார்ந்த இலக்குடன் கவியரசன் பயணப்படுவது பெரும் சாதனையாகவே படுகிறது. அதை குறுகிய காலத்தில் கவிதைகள், குறுநாவலகள் , நாவல் என்று தொடந்து படைப்பாக்கத்தில் இருக்கிறார். மகிழ்ச்சி தருகிறது .