சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 14 நவம்பர், 2018

திருப்பூர் துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன்

குறும்படங்களுக்கென்று கால அளவு உண்டு. ஆனால் அந்தக்கால அளவைக்கடந்தவையாக திருப்பூர் துசோபிரபாகரின்  பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மணி நேரத்தைக் கடந்தவையாகவும் அவரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. அவை முழுத்திரைப்பட முயற்சியின் பயிற்சியாகவும் முயற்சியாகவும் இருந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவரின் கண்டாங்கி திரைப்படத்தில் அதன் தன்மையைக் காணலாம்.அவரின் நீண்ட குறும்படங்களில் காமிரா மொழி ஒரு நாவலாசிரியரின் உரைநடை மொழியை ஒத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இவருக்கு நாவல் வடிவம் சிறப்பாக வரும் என்ற எண்ணத்தை அந்தப்படங்கள்  எழுப்பியிருக்கின்றன. ஆனால் அவர் கவிதைகள், மேடைப்பாடல்களில் அதிகம் கவனம் செலுத்துவதைக்கண்டிருக்கிறேன். ஒரு திரைப்பட முயற்சியாளனுக்கு திரைக்கதை உட்பட பலவற்றைக்கையாளுவதில் தேர்ந்த வாசிப்பும் உரை நடையின் தேர்ச்சியும்  பயனளிக்கும் என்பதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். கவிதைகள், மேடைப்பாடல்கள் முயற்சியை  மீறி சமீபமாய் நாவல்கள் எழுதுவதிலும் அக்கறை எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காமிரா மொழிக்கு இணையான நிதானமான விவரிப்பும்  கூர்மையும் இவரின் நாவல்களின் பாத்திரப்படைப்புகளிலும், விவரிப்பிலும் காணமுடிகிறது. இந்நாவலில் அவர் படித்த காந்தி கிராமப்பல்கலைக்கழக்த்தின் சூழலும் மாணவர்களின் உலகமும்  சூழலை ஒட்டிய மக்களின் வாழ்வியலும் குறிப்பாக சிறுமலை சார்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கையும் , சாதாரண மக்களின் பிரதிநிதிகளான ஏழை மாணவர்களின் இயல்பும் ஆசையும்  நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன .. அவரின் கவிதைகள் , மேடைப்பாடல்களின் தன்மை போல் பல மையங்களையும் பிரச்சினைகளையும் ஒரு மலரின் வெவ்வேறு இதழ்களின் அடுக்குகள் போல் துசோபிரபாகர் இந்நாவலின் களங்களை வடிவமைத்திருப்பது நாவல் வடிவத்தையும் அவர் சிறப்பாக்க் கைக்கொள்ளும் வித்தையைச் சொல்கிறது.