சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 7 ஜனவரி, 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.     
                                  
*  ஜனவரி  மாதக்கூட்டம் . 7/1/18 மாலை.5 மணி..       பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர் நடைபெற்றது.

தலைமை : ஏ.வி.பழனிச்சாமி-பொருளாளர் .க.இ பெ.மன்றம்

சிறப்பு விருந்தினர்: கன்யாகுமரி கு.சிவராமன் எழுத்தாளர் சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் :;  
இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும் “ என்றார்.


* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்
திருப்பூர் பண்பாட்டு மையம் யோகி செந்தில் பேசுகையில் கல்வி அழுத்தத்தால் குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.  அரசுப்பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கான- ஆலோசனை  தனி வகுப்புகள் அவர்களின் மொழி தெரிந்த  ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்பட்டாலே அவர்கள் பள்ளிகளில் சரியாக இணைய வாய்ப்பு இருக்கிறது.பள்ளி வளாகமே அவர்களின் கல்விச்சூழலுக்கு ஆரோக்யமாய்  வழிவகுக்கும். இல்லாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் அவர்களைப் பார்ப்பது சுமுகமானதல்ல “ என்றார்.

* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில் கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல் பற்றி  தோழர் ந. சேகர் பேசினார்
* முதல் ( நாவல் ) அனுபவம் :
      கொங்கு நாவலாசிரியர் செந்தமிழ்வாணன் தன் சித்த முற்றம் நாவல்  பற்றிப் பேசினார். 
* உரைகள் : படைப்பு அனுபவம் என்பதில் எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்
மிலிட்டரி பொன்னுசாமி ( சீன டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள் நூல்)
எஸ்.ஏ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத் தொகுப்பு )
* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்
* பின்வரும் நூல்கள் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், கா.ஜோதி செய்தனர்.
- மனுஷ்யபுத்ரன் கவிதை நூல் ( அந்நிய நிலத்துப் பெண் )                   -சாருநிதேதிதா மொழிபெயர்ப்பு நூல் (ஊரின் மிக அழகான பெண் )
-பிருந்தா சாரதி கவிதை நூல் (பறவையின் நிழல் ),                             -சிங்கப்பூர் பிச்சினிக்காடு இளங்கோ கவிதைநூல் ( அங்குசம் காணா யானை)
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  வழங்கப்பட்டன. சசிகலா.,பிஆர்நடராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.