சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 ஜனவரி, 2018

 புதிய தலைமுறை வார இதழ் 11/1/18 இதழில் வெளிவந்துள்ளது..
 திருப்பூர் : பெருகும் புதுக்குழந்தைத் தொழிலாளர்கள்

                              சுப்ரபாரதிமணியன்

   ” நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நான் பீகாருக்குப் போனால் இந்த தமிழ் நோ யூஸ். இங்கு பீகாரி மொழி கற்றுக் கொடுங்கள் . கற்றுக் கொள்கிறேன். என்க்கு இந்தி இரண்டாம் பட்சம் . அதுகூடப் பரவாயில்லை. கற்றுக் கொள்ளலாம் . நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நானா கேட்டேன். இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள் . பனியன் கம்பனிக்குப் போய் சம்பாதிப்பேன்.. என்னைக் குழந்தைத் தொழிலாளி என்றெல்லாம் சொல்லாதீர்கள்

ஒன்பது வயது ரோஷனின் ரோஷமான குரல் இது . கல்வி கற்கும் வயது . திருப்பூருக்குஅவன் பெற்றோர் வேலைகாரணமாய்  இடம் பெயர்ந்து வந்ததால் தத்தளிக்கிறான்.ஏதாவது இணைப்புப் பள்ளியில் சேர தன்னார்வக்குழுவினர் முயலும் போது இந்தக் கேள்விகளைத்தான் கேட்கிறான்.

திருப்பூரின் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 100 குழந்தைகள் இப்படி பள்ளிக்கு வெளியே இருக்கிறார்கள். திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள்.     



போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத  தொழிலாளர்களாய் இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் இன்று பெருநகரங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் முக்கிய நகரம் திருப்பூர்



 திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

சாப்பாடு விசயத்தில் பெரிய அக்கறை கொள்வதில்லை. சப்பாத்தி( அதுவும் ஆட்டா மாவு போதும் ) , உருளைக்கிழங்கு சில கிலோக்கள் அவர்களுக்குப் போதும். தெருவோர வண்டிஉணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கான கல்வியைப் பற்றி அக்கறை கொண்டு  சேவ் என்ற தன்னார்வக்குழு திருப்பூரில் 15 இணைப்புப் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவற்றிலும் மற்றும்  தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பும் 9-14 வயதுக் குழந்தைகளையே இணைப்புப் பள்ளியில் ( ப்ரிட்ஜ் ஸ்கூல் ) சேர்க்கிறார்கள். மற்ற குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும்  5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப  அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.

நான் மேற்கு வங்காளத்திலிருந்து வந்தேன். எட்டாவது அங்கு படித்தேன். இங்கு வந்த பின் இணைப்புப் பள்ளியில் சேர்த்தார்கள். அய்ந்து முதல் எல்லா வகுப்புக் குழந்தைகளும் ஒரே வகுப்பில் இங்கு உட்கார வைக்கிறார்கள். எனக்குத் தேவை ஒன்பது வகுப்புப் பாடமெ தவிர . மீண்டும் அய்ந்தாவது முதல் ஆறாவது, ஏழாவது பழைஅய் பாடங்கள் அல்ல. ”   கப்பார்சிங் வங்காளத்தில் எட்டாவது படித்து வந்தான். அவன் பெற்றோர் இங்கு வந்ததால்  இங்கு படிப்பைத் தொடர முடியாததால் அவன் குழந்தைத் தொழிலாளியாக  பனியன் கம்பனிக்கு வேலைக்கு போகவே ஆசைப்படுகிறான். குழந்தைத் தொழிலாளர் சட்டம், கட்டாய்க்கல்விச் சட்டம் போன்றவையெல்லாம் அவனுக்குத் தெரியாது . இடம்பெயர்ந்து வந்துள்ள இந்தக்குழந்தைகளுக்கானப் பள்ளிகள் பற்றியத் திட்டங்கள் அரசிடம் இல்லை. இவர்களுக்காக இணைப்புப் பள்ளிகளை  நடத்தும் தன்னார்வக்குழுக்களிடம் போதுமான நிதி வசதி இல்லை. பனியன் முத்லாளிகளும் இதில் அக்கறை எடுப்பதில்லை.

ஆசாதேசி அஸ்ஸாமிலிருந்து வந்த குழந்தை 7 வயது.  எனக்கு என் தாய் மொழிக்கல்விதான் தேவை .  தமிழில் நான் படித்து என்ன செய்யப்போகிறேன்.என்கிறாள். அஸ்ஸாம் , பீகார்,ஒடியா , வங்காளம் என்று பல மாநிலங்களிலிருந்து வந்து இங்கு இருக்கும்  குழந்தைகள் அவரவர் தாய்மொழிக்கல்வியையே விரும்புகிறார்கள்.

 தமிழகத்திற்கு வந்து இருக்கும்போது ஒரு பகுதியாக தமிழையும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ  கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்,



 பெற்றோர்  குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை  கொள்வதில்லை. கேட்டால் 3/6  மாதங்கள் இருப்போம் பிறகு போய் விடுமோம் என்கிறார்கள். அப்படித்தான் 3/6 மாதங்கள் இருந்து விட்டு ஊருக்குப் போய் விட்டு மீண்டும் வருகிறார்கள். வாடகை பிடிக்கிற இடத்தில் முன்பணம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். மீண்டும் அங்கேயே வர... இடையில் அவர்களுக்குத் தெரிந்தவர்களே தற்காலிகமாய் அங்கு குடியேறுகிறார்கள்.  குழந்தைகளை சற்றே வளர்ந்த குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு  பெண்களும் பனியன் தொழிற்சாலைகளுக்குப் போய் விடுகிறார்கள்.

இந்தக்குழந்தைகளின் கல்வி பற்றி அரசு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள  விடுதிகளில் இருந்து பொழுது போக்குவதைப் போல் குழந்தைகளும் பொழுதைப் போக்குகிறார்கள்.

பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் அடிப்படைக்கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.ஆனால் நடைமுறை சிக்கல் அவர்களைத் தடுமாற வைக்கிறது.கையைப் பிசைந்து நிற்கிறார்கள்.

வழக்கமாய் மொழி சார்ந்தச் சிக்கல்களால் அந்நியப்பட்ட இக்குழந்தைகள் சற்றே முரட்டுத்தனம் மிக்கவர்களாய் மாறி தனிமைப்படுகிறார்கள். இணைப்புப் பள்ளியிலோ, அரசுப்பள்ளியிலோ இந்தக் குழந்தைகளுக்குப் பெயர் முரட்டுக்குழந்தைகள். கொச்சையாக சிலர் தறுதலைகள் என்கிறார்கள் இரக்கமின்றி... ஆசிரியர்களும் அவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கைவிடுகிறார்கள். மீறினால் காவல்துறைய அணுகுகிறார்கள். இக்குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.  அரசுப்பள்ளிகளிலேயே இக்குழந்தைகளுக்கான தனி வகுப்புகள் அவர்களின் மொழி தெரிந்த  ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்பட்டாலே அவர்கள் பள்ளிகளில் இணைய வாய்ப்பு இருக்கிறது.பள்ளி வளாகமே அவர்களின் கல்விச்சூழலுக்கு ஆரோக்யமாய்  வழிவகுக்கும். இல்லாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் அவர்களைப் பார்ப்பது சுமுகமானதல்ல..

  இக்குழந்தைகளுக்கான இணைப்பு மொழியாக தமிழ் நடைமுறையில் இயலாததாக உள்ளது. இந்தியும் சரியான இணைப்பு இல்லை. காரணம் அவர்கள் 5 வெவ்வேறு மாநிலகுழந்தைகள் என்பதால் .

தொண்ணூறுகளில் 1 லட்சம் வரை இருந்த திருப்பூரின் குழந்தைத் தொழிலாளர் நிலை அரசின் கட்டாய்க் கல்வி, குழந்தைத் தொழிலாள ஒழிப்புச் சட்டங்கள் பின்னலாடை ஏற்றுமதித் துறையில் நடைமுறைப்பட்டதால்  ஒழிந்து போனது. இப்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.  பள்ளிக்குப்போகாத குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டிருந்தாலும் அவர்களும் குழந்தைத் தொழிலாளர்களே.

குழந்தைகள் பாட நூல்களைக்கிழிப்பதுண்டு குறும்புத்தனத்தால். பாட நூல்களே இல்லாமல் குழந்தைகள்  கிழிபட்டுக் கொண்டிருக்கும் புதுக் குழந்தைத் தொழிலாளர்கள் என்னும்  புது அவலம் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் நிலையால் மீண்டும் உருவாகி விட்டது. ஒரு வகையில் அகதிகளின் இன்னொரு முகம் இது.