சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 2 ஆகஸ்ட், 2017

10,000 பிரதிகள் விற்பனை
சுப்ரபாரதிமணியனின் குப்பை உலகம் நூல் பற்றி


தினமணிஆசிரியர் வைத்திய நாதன் தினமணியின் தமிழ் மணி யில்::
சுப்ரபாரதிமணியன் திருப்பூரில் இருந்து கொண்டு தமிழ் கூறு நல்லுலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது அறச்சீற்றம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அவர் எழுப்பும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், செவிட்டு உலகம் அதைக்கேட்க மறுக்கிறது. அதனாலென்ன.. அவர் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார். இருப்பார்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பை குப்பை உலகம்என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எல்லாப் பிரச்சனைகளையுமே இந்தக் கட்டுரைத் தொகுப்பு தொட்டுக்காட்டுகிறது.. தொட்டுக் காட்டுகிறது என்றா சொன்னேன், இல்லை. நம்து மூளையில் உரைப்பது போல சுட்டிக் காட்டுகிறது.
பாதரசத்தின் உற்பத்தியில் பாதி அளவு மின்னணு பொருட்களின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. பாதரசம் நிலத்தடி நீரில் கலந்து குடிநீராக சுலபமாக வீட்டுக்குள் வந்து சேருகிறது. இரத்தத்தில் சிறுகச்சிறுக சேர்கிறது.மூளை , சிறுநீரகம், , கல்லீரல் போன்றவற்றை மெல்ல மெல்ல பாதிக்கிறது. மனிதனின் நினைவுகளை பாதிக்கிறது. கருவுறுதல், இனப்பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது” . இப்படி மின்குப்பைகளால் பாதிப்பு, பிளாஸ்டிக்குகளால் பாதிப்பு, துரித உணவால் பாதிப்பு என்று ஏற்படுவதுடன் உலகம் குப்பையாகிக் கொண்டே வருகிறது.
சுப்ரபாரதிமணியனின் இந்தப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலராகி விடுவார்கள். நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை செலுத்துபவரா. ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அய்ந்து இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளியுங்கள். அவர்களை இந்தப் பிரச்சினை பாதிக்குமேயானால் அய்ந்து பேருக்கு அதேபோல் வாங்கிப் பரிசளிக்க பணியுங்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை நாம் தமிழகத்தில் செய்து விடலாம்,( ரூ 50 , வெளியீடு : சேவ் அமைப்பு, 5 அய்ஸ்வர்யா நக்ர், கே என்பி காலனி, தாராபுரம் சாலை, திருப்பூர் 98422 13011 )
இதன் மறுபதிப்பு சூழல் அறம் என்ற தலைப்பில் என்சிபிஎச் வெளியீடாக வந்துள்ளது.

10,000 பிரதிகள் விற்றிருக்கின்றன என்றார் நேற்று தோழர் கணேசன் அவர்கள் . மண்டல மேலாளர் என்சிபிஎச் திருப்பூரில் கணகாட்சித் திறப்பு விழாவின் போது ..28/7/17




-------------------------------------------------------------------------------------------------