சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 9 ஜனவரி, 2017

விளிம்பு நிலை மக்களுக்கான அறம் :சுப்ரபாரதிமணீயன்
-----------------------------------------------------
 ( ஒரு நாடோடிக்க்கலைஞன் மீதான் விசாரணை அண்டனூர் சுரா சிறுகதைகள்.208 பக்கங்கள், விலை ரூ180., இருவாட்சி வெளியீடு, சென்னை )

அண்டனூர் சுராவுன் இத்தொகுப்பின் கதைகளின் பொதுவான அம்சமாக விசாரணை அல்லது உரையாடல் என்பதாய் பெரும்பான்மையானக் கதைகள் அமைந்திருக்கின்றன. இது தீவிரமான வகையில் அரசியல் தளத்தில் இயங்குகிறது என்பது முக்கியம். அந்த வகையில்தான் நாடோடிக்கலைஞனோவாச்சாத்திப் பெண்ணோ தென்படுகிறார்கள், தங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
பள்ளி ஆசிரியர் என்ற வகையில் குழந்தைகளுடன் பழகுபவர் சுரா. அதனால் குழந்தைகளின் உலக்த்தைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். யானை கதையில் அப்பா யானை சத்தம் போடுது என்கிறார். குழந்தையோ பிளிறுது என்று நுணுக்கமாய் சொல்கிறது..இது மரம், பறவை பற்றிய குறிப்புகளில் கூட  நுண்ணியத்தன்மை தென்படச்செய்கிறது..  பன்றியை விற்கிற தகப்பவனிடம் குழந்தை கேட்கும் கேள்வி அதிர வைப்பதுதான்.பாரதி செல்லம்மா, மனைவியைப்பற்றி எழுதாமல் கண்ணம்மா என்ற கற்பனைக்காதலி பற்றி பாடியிருப்பது பற்றிய அவருடனான விசாரணை படைப்பு எந்த தளத்தில் யதார்த்தச் சுழலோடு இயங்கலாம் என்பதைச் சுட்டுகிறது. இலங்கை அகதியின் உயிர்பிழைக்கும் ஆசை  குழந்தையின் வாயை பொத்துவது மீறி மூக்கையும் பொத்தி விடுகிற அவலம். கல்வித்துறை சார்ந்த வன்முறை எனபதையும் இவர் தொடாமலில்லை. இந்த வன்முறையைச் செய்யும் அதிகார வர்க்கம் எடுக்கும் மாயா ஜாலங்கள் விதவிதமானவை. நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியின் முகத்தில் கரிபூசப்படுகிறத் தன்மையில்  ஆளை சிறைக்கம்பிகளுக்குள் மாற்றி விடுகிற ஜாலம் பயமளிக்கிறது. இந்த அதிகாரம் வெளிநாட்டின் நிறுவனம் ஒன்றின்  வேலை  நேர்முகத்தில் எல்லா முகங்களையும் காட்டி விடுகிறது. லெக்கின்ஸ் பற்றிய  எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அது கல்லூரி ஏழைப்பெண்ணிற்கு சுரிதாரைவிட விலைக்குறைவானது என்பதால் பிடித்தமாகி இருந்தாலும் சிக்கலை உண்டுபண்ணுகிறது.. பசு பற்றிய சர்ச்சைகளில் சுவரொட்டி சாப்பிடும் ஒரு  பசு பலியாவது உட்சபட்ச துயரம்.இந்தவகைத்துயரங்களை சற்று மிகைப்படுத்துலுடன் சிலகதைகளில், சொல்லப்பட்டிருக்கிரது. உப்பு கதையில் கூட பல்வேறு அரசியல் விமர்சங்களை நாசூக்காகச் சொல்கிறார். சீனப்பட்டாசு பற்றிய கதை அந்த வகையில் சொல்கிறார்..

சென்னை மொழியை லாவகமாக்க் கையாள்கிறவர் வேற்று  நாட்டுப் பிரச்சினைகளைக் கையாண்டு , பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று அதில் தன் எழுத்துப் பயிற்சியை நீட்டிக்கொண்டு போவ்து நல்ல சவால் அம்சமே.
பாடம் சொல்லும் முறைகளின் வேறுபாடு பற்றி ஒரு கதையைப் பள்ளிச் சூழலில் எழுதியிருக்கிறார். கதை சொல்லும் முறைகளின் வேறுபாட்டில் இவர் தன்னை அக்கறை கொண்டிருப்பதும் நல்ல விசயம்.உள்தரிசன அம்சங்களில் அக்கறை கொள்ளாமல் பிரச்சினைகள் சார்ந்தே படைப்புக்களங்களை உருவாக்யிருக்கிறார். அது ஏழைகளுக்கான, விளிம்பு நிலை மக்களுக்கான அறமாக உயர்ந்து நிற்கிறது.
( ஒரு நாடோடிக்க்கலைஞன் மீதான் விசாரணை அண்டனூர் சுரா சிறுகதைகள்.208 பக்கங்கள், விலை ரூ180., இருவாட்சி வெளியீடு, சென்னை )